நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அ -முதல் ஃ- வரையும் -- அழைக்கின்றேன் அன்புடன்

அன்பு- என்ற புன்னகை அதுதான் என் ஆயுதம்

1 ஆர்வம்- அதிகமதிகம் கவிதைகள் எழுதுவதில்



இன்பம்- என் இறைவனை நேசிப்பதில்



ஈர்ப்பு- என்தாயின் பாசமும் என் குழந்தைகளின் நேசமும்
4

உள்ளம்- அது என்னவனின் சொந்தம்


ஊஞ்சலாடுவது- காற்றோடு பேசிக்கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம்
6


என்வாழ்க்கை- எனக்காக இறைவன் தந்த அருட்கொடை



ஏன் இந்தபதிவு- என் தோழி பாயிஜாவின் அழைப்பு


ஐந்தருவி- அழகுகொஞ்சும் தண்ணீர் நாட்டியம்


ஒருவருக்கொருவர்- விட்டுகொடுத்து வாழநினைப்பது
8



ஓர்உயிரில்- எங்கள் ஈருயிரும் கலந்திருப்பது [அட நாங்க தாங்க மச்சானும் மச்சியும்]
7

ஒளவையார்- அவர்களின் அறிவுரைகள் நம்மை சிந்திக்கவைப்பது



அஃதோடு - நான் அழைக்கும் நண்பர்கள்

ஜலீலாக்கா, சாருலதா, கீதா ஆச்சல்,

எனக்கு கிடைத்தமுதல் விருது



இத்தளத்திற்காக இந்த விருதை வழங்கி என்னை கெளரப்படுத்திய
என் அன்புத்தோழி சாருலதவிற்கு என்மனமார்ந்த் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்
மேலும் மேலும் என்னை ஊக்கப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

மேலும் இவ்விருதை இங்கு வந்து செல்லும் அ
னைத்து தோழமைகளுக்கும்
தந்துமகிழ்கிறேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

ரகசியங்கள்

முத்தமிடும்போது
முத்திரைபதிக்க
முன்னுரை,,,,,,
இந்த மூக்குத்தி



காதில் சொல்லும்
காதல் சங்கதியை
கமுக்கமாக வைத்துக்கொள்ளும்
 இந்தக் கம்மல்


சங்கு கழுத்திலிருந்து
சங்கமித்ததை
சங்கீதமாய்
ஸ்வரம் கொடுக்கும்
இந்த சங்கிலி



வளைந்து நெளிந்து
போகும் மன்னனை
வலைத்துப்பிடித்து
இழுத்துக்கொள்ளும்
 இந்த வலையல்



மோகத்தில் உண்டாகும்
மோதலை
மெளனராகமாய் சொல்லிடும்
இந்த மோதிரம்


காதல் ரகசியங்களை
கணவனின்
காதில்சொல்லும்,,,
இந்த கால் கொலுசு



பெண்ணரசிகளே
புன்னகையுடன் பொன்நகையும்
சேர்த்திடுங்கள்
புதுமணத்தம்பதிகளாய்
வாழ்ந்து மகிழுங்கள்.......

அன்புடன் மலிக்கா


இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது