நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எப்பொழுதெனில்!


மெய்மறப்பது 
எப்பொழுதெனில்?
மெய்யுருகி மனமினைகையில்!

தன்னிலை மறப்பது 
எப்பொழுதெனில்?
தன்னிணையுடன் தஞ்சம் புகுகையில்!

நெஞ்சங்கள் சிலிர்ப்பது 
எப்பொழுதெனில்?
நினைவுகளிலும் சங்கமிக்கையில்!

இரத்த நாளங்கள் குளிர்வது  
எப்பொழுதெனில்?
இணைகள் ஒருவருக்கொருவர் 
ஆறுதலலிக்கையில்!

முழுமனமுடல் மூச்சில் கலப்பது 
எப்பொழுதெனில்?
முதுமையிலும் ஈருடல் 
ஓருயிராய் உருகுகையில்!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தலையணையென்பது!



பஞ்சுமெத்தைக் குழந்தை! 
பதைபதைக்கும் மனதிற்க்கு
பக்கத்துணை!

கரையும் கண்ணீருக்கு
ஒத்தட ஆறுதல்!

மனக் குமுறலுக்கு
மறைமுக தேறுதல்!

தனிமையை போக்கும் தோழமை
தவிப்புகளை உள்ளடக்கும் ஆளுமை

இருதலை நான்கு கண்களை
ஒன்றிணைக்கும் சங்கமம்!

இணையில்லா நேரத்தில்
இன்னல்களையும் ஏற்கும் இலவம்!

தலையணை மந்திரம் திடமானால் 
துணைகள் இன்பத்தோனியில்!

தலையணையில் வேறுதலை மாறினால்
துணைகள் துன்பக்கேணியில்...



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

யாருமறியா ரகசியத்தை!



இருண்ட இரவுகளை
அலங்கரிக்கும் நட்சதிரமும்!

இரவல் ஒளிவாங்கி
இருளகற்றும் பால்நிலவும்!

மெல்லிய ஒளியில்
மிளிரும் இருளிரவும்!

இன்னல்களை சுமந்தும்
இன்பமுற்றதாய் நடிக்கும்,

வஞ்சணைகள் நிறைந்தும்
வாஞ்சைகளாய் உரசும்,

உள்ளமழுதும்
உதடுகள் சிரித்தும்

ஊரறியா! வேறு மனமறியா!
ஊளையிடும் இருதய மெளனங்களின்

இரகசியங்கள் அறிகின்றன
”இங்கிதம் பேணியபடி”



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது