நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
தமிழ்குடும்பத்திற்கு நன்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்குடும்பத்திற்கு நன்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜாக்பாட் அடித்த கவிதை

 

அன்பின் நெஞ்சங்களுக்கு. 
எனது கவிதை ஒன்று ஜாக்பாட்டில் படிக்கப்பட்டு படிக்கப்பட்டுக்கவிதையின் படிவத்தில் நடிகை சிம்ரனின் ஆட்டோகிராப்பும் வாங்கியதாம்.. சந்தோஷம்..


 இதனை ஜாக்பாட்டில் வாசித்த திருமதி சித்ரா தினாகரன் இன்றுகாலை போன் செய்து சொல்லி மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

எனது கவிதையான “முதியோர் இல்லம்” 9-2-2009 அன்று தமிழ்குடும்பம் டாட்காம்மில் வெளிவந்திருந்தது. அதை திருமதி சித்ரா தினகரன் போனமாதம் படித்துவிட்டு. அதனை தான் கலந்துகொண்ட ஜெயா டிவி யில் ஒளிப்பரப்பாகும் ஜாக்பாட் நிகழ்ச்சியில் வாசித்துள்ளார்கள் மிகவும் அருமையாக உள்ளது என சிம்ரன் உள்பட அங்கிருந்தவர்களும் பாராட்டினார்களாம்

கடந்த ஞாயிறு அன்று ஒளிப்பரபானதில் [நாந்தான் பார்க்கமுடியவில்லை கடை திறப்பு அன்றுதானே] அவர்களின் அப்பார்மெண்டில் உள்ளவர்கள் அனைவரும் பாராட்டியதாக சித்ரா சொல்லி சந்தோஷப்பட்டார்கள். அதனோடு தான் கொண்டு சென்றிருந்த கவிதை பேப்பரில் ஆட்டோகிராப் வாங்கி லாமினேஷ்ன் செய்து வைத்துள்ளதாகவும் கூறினார்கள்..


//மல்லிகா மேடம்  முதியோர் இல்லம் கவிதை   பேப்பர் மேலே சிம்ரன்  ஆடோக்ஹ்ரப் வாங்கி அதை லாமினட்சியன் செய்துவிட்தின்  பயனாக என்றும் யாபகம் இருக்கும் .நீங்கள் அவசியம் ஜாக்பாட் 513 எபிசொட் பாருங்கள்

//மேடம் நான் உங்கள் கவிதை ஒன்றை ஜெயா T V  ஜாக்பாட் ப்ரோக்ராமில் படித்தின் சிம்ரன் சொன்னார் மிகவும் நன்றாக இருக்கு என்றர். நான் தமிழ்குடும்பம்.காம் இல் இருந்து எடுத்தது என்று கூறினேன் .NEENGAL  ஜாக்பாட் ஜெயா T V 9.9.12 TIME  8.9P.M.PARUNGAL  ///



இது சித்ராவின் மகள் ஐஸ்வரியா வரைந்த டிராயிங்


எனது கவிதை அவருக்கும் பிடித்து அதனை பலருக்கும் பிடிக்கும்படி செய்த சித்ரா தினகரன் அவர்களுக்கும் எனது கவிதையின் தாயிடமான தமிழ்குடும்பத்திற்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.  .

தமிழ்குடும்பம் தந்த பொக்கிஷம்




என்னுடைய படைப்புகள் முதலில் http://www.tamilkudumbam.com/தமிழ்குடும்பம்.காம் அதிலிருந்துதான் வெளியானது எனக்கு ஊக்கமும். ஆதரவும்.
தோழிகளும் தோழமைகளும் அங்கு நிறைய நிறைய.
அவர்களின் ஊக்கம்தான் இந்தளவு என்னை கவியெழுத தூண்டியதே!
என் கவிப்பயணைத்தையும் கலைபயணத்தையும் தொடரவைத்த தமிழ்குடும்பத்திற்க்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.


என் படைப்புகளை ஊக்கவிக்கும் பொருட்டாக எனக்கு.ரூ 500 மத்திப்பிளான புத்தங்களை பரிசாக வழங்கியுள்ளார்கள். அதுவும் நாமாக தேர்ந்தெடுத்துகொள்ளும்விதமாக http://www.udumalai.com//உடுமலை. காம்மில் லிங்க் தந்தார்கள் அதில் நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள்


இதோ எனது புத்தகத்தேர்வுகள்.


மூ மேதாவின் - நாயகம் ஒரு காவியம்
கனிமொழியின் - கருவரை வாசனை
வைரமுத்துவின் - கள்ளிக்காட்டு இதிகாசம்
பிரபஞ்சனின் - முதல் மழைத்துளி
அகிலனின் - சிநேகிதி
தன்னம்பிக்கை - வெற்றியின் சிறகுகள் விறியட்டும்
கவிதைகள் - என் ஜன்னலின் வழியே .


இத்தனைஅற்புத பொக்கிஷமான புத்தங்களைத்தந்து என்னை இன்னும் ஊக்கப்படுத்தி உற்சாகம் தரும் தமிழ்குடும்பத்திற்கும் அதன் உறுப்பினர்கள் அத்தனைபேருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்..


இது நான் முதன்முதலில் தமிழ்குடும்பத்தில்
தமிழ்குடும்பத்தைபற்றி எழுதிய கவிதை
முகப்பிற்கு
உள்ளே சென்ற
அக்குடும்பத்தில்
உள்ளவர்களை பார்வையால்
பதிவுசெய்துகொன்டேன்


ஆண்கள் ஸ்பெசல்
பெண்கள் ஸ்பெசல்-என்ற
பகுதியில்
அழகுக்கு அழகுசேர்த்து
நொடியில் ரெடியாகிய
டிப்ஸ்களை எடுத்துக்கொண்டு


சிந்தனைசெய்த மனமாய்
மற்றவைக்குள் புகுந்து
மகளீர் மன்றத்திற்கு
பழகலாமென்று வந்தேன்
வந்தயிடத்தில்


நகைச்சுவையாய்
வாசகர் டைரியைப்படித்து
கண்டதும் கேட்டதுமாய்
செய்திகள் தெரிந்துகொண்டேன்


அறுசுவையாய் பல்சுவையும்
கைவினைப்பொருள்களையும்
வர்ணவேலைப்பாடோடு
தையற்கலையும்
கற்றுக்கொண்டு
மழழையர் பக்கம்வந்து
மகிழ்சியோடு
போட்டோக்கள் கண்டு


குறிப்புகள் தெரிவிக்கலாமென்று
தமிழில் எழுதவந்துள்ளேன்


தமிழ்குலம் செழிக்க
தமிழ்குடும்பம்
தந்துள்ள
அத்தனையும் அருமை
இது அறிவியலின் புதுமை


பாலைவனத்தில்
நாங்களிருந்தாலும்
பசுமை கொஞ்சும் தமிழை
கண்களால் கண்பது குளுமை
அதை தனித்தமிழில்
எழுதுவது
இனிமையிலும் இனிமை


இவை அத்தனைதிற்கும்
துணையிருக்கும்
தமிழ்குடும்பத்திற்கே சாரும்
கோடானகோடி
பெருமை பெருமை பெருமை


தாய் மொழியை வளர்க்க
ஒன்றிணைவோம்
தமிழர்களாய் வானுயர்வோம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது