நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எங்கே சென்றன?...



பனிப்படர்ந்த முன்னிரவில்
நிலவுக்குளியலில் உடல்நனைத்து
இதய முந்தானையில் தலைத்துவட்டியபோது
தீண்டிய விரலின் ஸ்பரிசம்
இருளண்டிய இரவிற்கு
தீபஉணவளித்து நெகிழ்ந்தவை...

காலின் கட்டைவிரலில் நெட்டியிழுத்து
காற்றசைவில்
காதறுகே நெளிந்த கார்குழல் நீவி,,
தாடை நிமிர்த்தி வெட்கத்தாட்பாழ் நீக்கி
அன்பின் ஒளியை அமாவசையில் கண்டவை..

கண்ணாடிப் பேழைக்குமுன் நின்று
கண்முன் தோன்றியதெல்லாம்
கர்ப்பகிரகதிற்க்குள் நுழைத்து திழைத்து
கண்குளிர்யோடு
மனக்குளிர்ச்சியடந்து குழைந்தவை..

உணர்சிகளால் உடன்படா
உணர்வுகளால் உடன்பட்டு
இரண்டோடொன்று கலந்து கரைந்து
இங்கிருந்தும் அங்கிருந்தும்
இரவும் பகலுமாய் களித்தவை...

எங்கே சென்றன?

கடந்த காலத்திற்காக
கடல்கடந்த கானகத்திற்கா?
கவனக்குறைவால்
காதலற்ற திக்கிற்கா?

காற்றசைகிறது, கானம் கேட்கிறது,
நிலவு ஒளிர்கிறது, இரவு தேய்கிறது
விரல்களோடு மனதும் விம்மியபடி
ரசம்கொட்டிய கண்ணாடி முன்
ரகசியமாய் குமைகிறது,,,

அர்த்தமுள்ளவையாய் தோன்றிய
அந்த நாட்களின்
அழுத்தங்களையெண்ணி....
.....................

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

3 கருத்துகள்:

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது