பூமித்தாயின் மடியில் தவழும் "செல்லக்குழந்தை"
இயற்கையெழிலை எடுத்தியம்பும் ஆதா(கா)ரத்தின் "தந்தை"
வாழும் நிலத்தை வாரி அரவணைத்து
அமுதூட்டும் அன்பின் "அன்னை"...
ஒரு பிடி உணவு கிடைக்காதவரின் பாடு
சொல்லில் வடிக்கமுடியாது கேளு..
நெல் முளைத்த வயலெல்லாம் கல்முளைக்கசெய்து
வருத்தக்கிடங்கில் வீழ்த்தியது எது?
அயல்நாட்டு ஆட்களெல்லாம் கண்டு அசந்துபோன நம்நாடு
அழிகிறதே விவசாயங்களற்று வந்ததென்ன கேடு..
கானியெல்லாம் காய்ந்துபோக கருவேலம் ஓலமிட
கவலைகிடங்கில் அடைத்திங்கே யாரு?
தாய்நாட்டின் தாலாட்டுகளின் பிறப்பிடம்
தலைமறவானதே ஏனென்று கூறு?
விவசாயத்தின் உரங்களையும் விசமாக்கியது யாரு?
வினை விதைத்தால் வினையறுபோம் என்பதையும்
நினைவிலேற்றி எடுத்துக்கூறு...
முதுகெலும்பு விவசாயத்தை
முறித்துவிட்டால் ஏது?
தழைத்தோங்கும்
தலைநிமிரும் பாரத்தின் பேரு..
உடற்கூறு உறுதியுற்றால்தானே
மூளைக்கூற்றின் மூலக்கூறும்தேறி
தொழில்வளமும் பல துறைவளமும்
வெற்றியாகும் சொல்லு.
இயற்கையோடு விவசாயத்தை
செழிக்கவிட்டுப்பாரு, பின்பு
இலகுவாய் எடுக்கும் இந்தியா
வலிமைகொண்ட வல்லரசென்ற பெயரு..
===================================================
நிலாமுற்றம் கவியரங்கில் இந்தியா வல்லரசாக்குவோம்...
கருப்பொருளான விவசாயம் பற்றிய
என் தலைப்பிற்கான கவி..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
மிக மிக அருமை மலிக்கா தங்களின் இப்படைப்பு மிகச்சிறப்பு
பதிலளிநீக்கு