மானம்
தன் மானத்தை இழந்து
அவமானத்தை சுமந்து
அறிவுடமையை மடமையாக்கி
அன்னம்கேட்டு கையேந்த வைக்கும்,,,,
அடிவயிற்றில் அமிலம் சுரக்க
அதனனலில் அடிக்கடி
அங்கமெங்கும் வெந்துதுடிக்க
வெட்கம் வேரறுந்து
குலமழிக்கும் நிலையை தூண்டும்
அச்சம்தன் அச்சானி கழட்டி பிறரை
அச்சுறுத்தியும் பிழைக்கும்...
ஊன் உருகி உயிரைக் கருக்க
உதிரச் செல்கள் தர்ணா நடத்த
வயிறலறி வாய்கண்ணடைக்க
உடல்களைத்து வீதியில்சாய்ந்து
விதி
வீதிஉலா காட்சியாக்கி வருத்தும்...
உயிரின் வேர்காலில்
விகாரத்தின் கொடுக்கொன்று
விடாதுகொத்தி கொத்தி
பசியின் துயரத்திற்கு விசமேற்றும்
வீடற்று தெருக்களிலும் தவக்கோலம் பூட்டும்...
ஆற்றடியை அடியோடு வீழ்த்தி
அங்கத்தை அனுஅனுவாய் மாய்த்து
உணர்வுகளை வெருண்டோடவைத்து
வதன உடமைகளையும்
வேல்வியில் இறக்கி வதைக்கும்...
பணம் பொருளிருந்தும்
பசியில் உண்ணமுடியா நிலைவந்தும்
பட்டினியின் கொடுமைதன்னை
புரிந்தும் புறந்தள்ளி
பசித்துகிடப்போர் அறியாது
தானம்தரா ஈனராய்
ருசியில் புசிப்போரப்போரை
புளிச்சயேப்பத்தின் துர்வாடையோடு
நாளை நரகம் பசியெடுத்து
அகோரியாகி தன் பசியிதனைத் தீர்க்கும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என்னத்தைச் சொல்ல கவிதையை படிக்கும்போது மனம் கனக்கிறது
பதிலளிநீக்குபசி... மனம் கனக்கும் கவிதை அக்கா..
பதிலளிநீக்குபசித்துகிடப்போர் அறியாது
பதிலளிநீக்குதானம்தரா ஈனராய்
ருசியில் புசிப்போரப்போரை
புளிச்சயேப்பத்தின் துர்வாடையோடு
நாளை நரகம் பசியெடுத்து
அகோரியாகி தன் பசியிதனைத் தீர்க்கும்..
------------
நன்மை தரும் தானம் செய்யாது செய்த கருமம்! நாளை சருமமும் சருக்காக,உயிரே விறகாகும் நரகத்தின் பசிக்கு எனும் முடிவுடன் சொன்னது நல்லதோரு எச்சரிக்கை.வாழ்த்துக்கள்!