நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இருப்பைத்தேடி..


சாயங்கால வேளையில்
சாமரம்வீசிய தென்றல் தழுவுகையில்
சஞ்ஜலத்தில் ஆழ்ந்துகிடந்ததை யாரோ
சம்மட்டியால் அடித்ததுபோல் படபடக்க

முன்பாவ செயல்களின் பட்டியல்கள்
முன்னுக்கு பின் முகம்காட்ட
கிளியின் இறகுக்குள்
கிலிப் பிடித்தாட்டியது

கொல்லைப்புரத்து கோவையை
கூரிய அலகால் கொத்துகையில்
அறிந்திருக்கவில்லை அது
ஆகாததென்றும் அருளற்றதென்றும்

உள்மனக்காயங்கள் ஊமையாகி
உணர்வறுத்து உருத்துகையில்
நெக்குருகி நெக்குருகி
நெஞ்சடைக்கும் பிராத்தனைகள்

ஒளிவட்டமொன்று ஒளிந்துகொண்டு
உற்றுப்பார் என்பதுபோல் ஒலிப்பதனால்
ஓடிப்பார்க்கிறது தேடிப்பார்க்கிறது கிளி
ஓச்சல் ஒழிவில்லாது

ஒளிவட்டத்திற்குள்
தனதிறுப்பை இறுத்திக்கொள்ள..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

2 கருத்துகள்:

  1. படமும் கவிதையும் அழகு ! பாராட்டுக்கள்


    http://gopu1949.blogspot.in/2015/03/5.html
    இன்றைய என் பதிவினில் தங்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது. இது ஓர் தகவலுக்காக மட்டுமே.

    பதிலளிநீக்கு
  2. ஒளிவட்டமொன்று ஒளிந்துகொண்டு
    உற்றுப்பார் என்பதுபோல் ஒலிப்பதனால்
    ஓடிப்பார்க்கிறது தேடிப்பார்க்கிறது கிளி
    ஓச்சல் ஒழிவில்லாது ...

    அருமையான கவிதை அக்கா.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது