நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சூச்சம சூத்திரம்.





அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.  .

13 கருத்துகள்:

  1. சொல்லாடல் மிக அருமை மலிக்கா மேம்..

    எத்தனை முறை கேட்கிறேன் உங்களுக்கு ஆசன் யாரென்று..

    மனமுடைதல்
    உயிர் கசிதல்
    நீரட்டித்தம்
    நிலை சரிதல்
    என மிக அழகாய் வார்த்தை ஜாலம் செய்துள்ளீர்கள்..

    எனக்கும் இதுபோலெல்லாம் எழுத ஆசையாக இருக்கு மேம் சொல்லித்தறீங்களா?

    இது காதல் உணர்வா? நானும் இவைகளை உணர்ந்துள்ளேன் ஆனால் வெளிப்படுத்த தெரியவில்லை மேம். உங்க எழுத்து நடை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

    என்னவருக்கு நான் ஏதேனும் எழுதித்தரனும் இக்கவிதையை எடுத்து அனுப்பவா?

    பதிலளிநீக்கு
  2. என் மகன் 5 வகுப்பு படிக்கிறான் எப்போதும் கேட்பான் அம்மா கவிதை எழுதிதான்னு .. இனி எழுதலாம் உங்களைப்பார்த்து..

    முகநூலில் புகைப்படத்தோடு படு சூப்பராக எழுதுறீங்கப்பா..

    பதிலளிநீக்கு
  3. என்ன சந்தேகம்...? இவைதான் காதலின் சூத்திரங்கள் தங்கையே. அருமையா தளத்திலயும் முகநூலிலயும் கலக்கறீங்க. எனக்குததான் முகநூல்ல எழுத வர மாட்டேங்குது. வாழ்த்துக்கள்மா.

    பதிலளிநீக்கு
  4. நல்ல சிந்தனை வரிகள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  5. ///

    நிலாத்தோழி. சொன்னது…
    சொல்லாடல் மிக அருமை மலிக்கா மேம்..

    எத்தனை முறை கேட்கிறேன் உங்களுக்கு ஆசன் யாரென்று..

    மனமுடைதல்
    உயிர் கசிதல்
    நீரட்டித்தம்
    நிலை சரிதல்
    என மிக அழகாய் வார்த்தை ஜாலம் செய்துள்ளீர்கள்..

    எனக்கும் இதுபோலெல்லாம் எழுத ஆசையாக இருக்கு மேம் சொல்லித்தறீங்களா?////


    ஆமாங்கோ...
    எத்தனை முறை கேட்கிறேன் உங்களுக்கு ஆசன் யாரென்று..?

    எனக்கும் இதுபோலெல்லாம் எழுத ஆசையாக இருக்கு சொல்லித்தறீங்களா?

    சரிங்க... மேடம்...

    ///தீப்பற்றிருகி உருகி மெழுகாய்...///

    இந்த வரியின் சொல்லாடல் நன்றாகத்தான் இருக்கிறது...
    ஆனால்...
    //தீப்பற்றிருகி உருகி/// அப்படீன்னா????

    சரி...

    ////தீப்பிளம்பின் தனல்கள் மொத்தம்///
    இந்த வரி சரியா?
    அல்லது
    தீப்பிழம்பின் தணல்கள் மொத்தம்...இது சரியா????

    ஆனா...

    கவிஞர் மலிக்கா கவிதைன்னா....
    நல்லாத்தான் இருக்கும்...
    இதுவும் அப்படியே...
    சிறந்த சொல்லாடல்... பொருளாடல்... வரிகளின் கோர்வையும் அருமை...

    பதிலளிநீக்கு
  6. //தீப்பற்றிருகி உருகி///
    அப்படீன்னா என்னாங்கோ அர்த்தம்????

    தனல் எனும் வார்த்தை சரியா?
    தணல் எனும் வார்த்தை சரியா?

    நான் ஒன்றும் தமிழாசான் இல்லை...

    ஒரு சந்தேகத்தை கேட்டேன்...

    பதிலளிநீக்கு
  7. //தீப்பற்றிருகி உருகி///
    அப்படீன்னா என்னாங்கோ அர்த்தம்????//

    அதுவா உருகும் மெழுகு தீ பற்றியதும் உ்ருகியோடுமே அதுதானுங்க..

    அச்சோ இதிலேதும் வில்லங்கம் இல்லியே

    //தனல் எனும் வார்த்தை சரியா?
    தணல் எனும் வார்த்தை சரியா?


    தனல் என்பதுதான் சரியென நினைக்கிறேன் புலவரே கூகிளிலும் நிறைய அப்படிதான் சொன்னது..



    நான் ஒன்றும் தமிழாசான் இல்லை...

    ஒரு சந்தேகத்தை கேட்டேன்...
    //

    நாங்கமட்டுமென்ன தமிழாசிரியையா? ஏதோ கிறுக்குறோம் அதில் பிழையிருந்தா திருத்துறோம்.

    உங்களபோல நல்லாசான்களிடம் கொஞ்சம் கொஞ்சமா கத்துகுறோம் அம்மூடாதான் புலவரே..

    பதிலளிநீக்கு
  8. நிலவுக்கே தோழியான நிலாத்தோழியே எனது ஆசான்கள்
    என் முதல் ஆசான் இறைவன் . அப்புறம் வாப்பா காப்பியக்கோ ஜின்னாஹ் ஹரிபுதீன். கவினர் புகாரி. என நிறைய உண்டு அதில் இங்கேயும் ஒரு ஜீவன் உலவுகிறார் முரளியென்ற பெயர்கொண்டு.


    நிலா நீங்களே எழுத முயற்சியுங்கள் கவிதை மீது காதல்கொண்டு காதல்கொண்டு சொற்கள் அடுக்கிப்பாருங்கள் கிறுக்கள்கூட கவிதையாகி கண்மு்ன்தோன்றும் ரசியுங்கள்..

    மிக்க நன்றி நிலாத் தோழியே

    பதிலளிநீக்கு
  9. என்ன சந்தேகம்...? இவைதான் காதலின் சூத்திரங்கள் தங்கையே. அருமையா தளத்திலயும் முகநூலிலயும் கலக்கறீங்க. எனக்குததான் முகநூல்ல எழுத வர மாட்டேங்குது. வாழ்த்துக்கள்மா.
    //

    சந்தேகம் இப்ப தீர்ந்துபோச்சி கணேஷ்ண்ணா..

    இந்தபொய்யெல்லாம் சொல்லக்கூடாது. உங்களுக்கா எழுதவரல மின்னல் மின்னியடிக்கிறே பலபக்கம்..

    மிக்க நன்றி கணேஷ்ண்ணா..

    பதிலளிநீக்கு
  10. திண்டுக்கல் தனபாலன் கூறியது...
    நல்ல சிந்தனை வரிகள்... வாழ்த்துக்கள்
    ... நன்றி...
    //

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..சகோ..

    பதிலளிநீக்கு
  11. ///தனல் என்பதுதான் சரியென நினைக்கிறேன் புலவரே கூகிளிலும் நிறைய அப்படிதான் சொன்னது..///

    நினைக்கிறேன்னெல்லாம் சொல்லக்கூடாது...

    கூகிளில் போட்டிருந்தால் அது தப்பு...

    கூகிள் தமிழாசான்களைக் கொண்டு உருவாக்கியதா என்பதை நான் அறியேன்...

    நான் பள்ளியில் படித்த காலத்தில் எனக்கு கற்றுத்தந்த தமிழ் ஆசான்... தமிழ் ஆசிரியர் ''தணல்'' என்றுதான் எழுத கற்றுக் கொடுத்தார்கள்... அதைத்தான் நான் ஒன்றுக்கு இரண்டு முறை கேள்வியாகக் கேட்டேன்...

    தணல் என்ற வார்த்தைக்கு...

    கனன்று கொண்டிருக்கும் கங்குகள் என்று தமிழ்ப் பொருளும்...

    live colas:embers என்று ஆங்கிலப் பொருளும் சொல்லியுள்ளனர்...

    உங்களுக்கு சந்தேகம் இருப்பின்...
    தயவுசெய்து பின்வரும் ''அகராதி'' http://www.agaraadhi.com/dict/home.jsp வலைதளத்தில் சென்று ''தணல்'' என்று டைப் செய்தால் மேற்சொன்ன பொருளும்...

    ''தனல்'' என்று டைப் செய்தால்
    பொருளே வராது... மேடம்..!

    ஒருவேளை எனக்கு அன்னா ஆவன்னா சொல்லிக் கொடுத்த தமிழ் ஆசிரியர் சரியா சொல்லிக் கொடுக்கல போலிருக்கு மேடம்....

    அவ்வ்வ்வ்வ்வ்வ....

    சரியான ஒரு பாட்டிற்கு என் மன்னன் பரிசளிக்கிறான் என்றால் அதைக்கண்டு மகிழ்ச்சி கொள்பவனும் நானே...!

    ஆனால்..

    அதேநேரத்தில்
    பிழையான ஒரு பாட்டிற்கு மன்னன் பரிசளிக்கிறான் என்றால் அதைக்கண்டு வருத்தப்படுபவன் நானே... என திருவிளையாடலில் நக்கீரன் (ஏ.பி.நாகராஜன்) தருமியிடம் (நாகேசிடம்) சொல்லும் வசனம்...!

    அதைப்போல...!

    தங்கள் கவிதையில் பொருட்குற்றம் இருக்கலாம்... சொற்குற்றம் இருக்கலாகுமோ...!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ....!

    எனக்கேன் வம்பு...
    உங்க கவிதைக்கு நடிகை சிம்ரனே ஆட்டோகிராப் போட்டிருக்காஹ....ஸ


    http://www.agaraadhi.com/dict/home.jsp

    பதிலளிநீக்கு
  12. அடுத்த கேள்வி...

    உட்ருவோமா....

    ///தீப்பற்றிருகி உருகி///
    அப்படீன்னா என்னாங்கோ அர்த்தம்????//

    அதுவா உருகும் மெழுகு தீ பற்றியதும் உ்ருகியோடுமே அதுதானுங்க..///

    அப்படீன்னு பதில் சொல்லியிருக்கீங்க...

    சரி...
    தீப்பற்றிருகி உருகி.. என தாங்கள் சொன்ன வார்த்தையில் தீப்பற்றிருகி என்பதில் ஒரு உருகியும் தனியே ஒரு உருகியும் வருகிறதே... அதைத்தான் நான் கேட்டேன்...

    தீப்பற்றிருகி என்று இருக்க வேண்டும்...

    மெழுகு தீப்பற்றியவுடன் உருகிவிடும்...

    ஆனால்...
    தாங்கள்.....
    //தீப்பற்றிருகி உருகி/// என இரண்டு உருகி வருகிறதே... இதற்குத்தான் என்ன அர்த்தம் என்று கேட்டேன்...

    நீங்க என்னடான்னா....
    ///உருகும் மெழுகு தீ பற்றியதும் உ்ருகியோடுமே/// அப்படீன்னு பதில் சொல்லியிருக்கீங்க...

    அந்த வார்த்தையை இரண்டுமுறை நிறுத்தி... நிதானமாய்ப் படியுங்கள்... கவிஞரே...

    முரளி - அதெப்படி மலிக்கா மட்டும் நல்ல நல்ல கவிதை எழுதலாம்? அப்படீன்னு ஒரு பொறாமைலதான் இந்த குற்றச்சாட்டெல்லாம்...

    அவ்வ்வைவ்

    பதிலளிநீக்கு
  13. காதல் சூட்சுமத்தின் சூத்திரங்களைத் தொகுத்தொரு அற்புதக் கவியாக்கியவிதம் அழகு. வார்த்தைநயம் அசரவைக்கிறது. பாராட்டுகள் மலிக்கா.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது