நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ரகசியங்கள்

முத்தமிடும்போது
முத்திரைபதிக்க
முன்னுரை,,,,,,
இந்த மூக்குத்தி



காதில் சொல்லும்
காதல் சங்கதியை
கமுக்கமாக வைத்துக்கொள்ளும்
 இந்தக் கம்மல்


சங்கு கழுத்திலிருந்து
சங்கமித்ததை
சங்கீதமாய்
ஸ்வரம் கொடுக்கும்
இந்த சங்கிலி



வளைந்து நெளிந்து
போகும் மன்னனை
வலைத்துப்பிடித்து
இழுத்துக்கொள்ளும்
 இந்த வலையல்



மோகத்தில் உண்டாகும்
மோதலை
மெளனராகமாய் சொல்லிடும்
இந்த மோதிரம்


காதல் ரகசியங்களை
கணவனின்
காதில்சொல்லும்,,,
இந்த கால் கொலுசு



பெண்ணரசிகளே
புன்னகையுடன் பொன்நகையும்
சேர்த்திடுங்கள்
புதுமணத்தம்பதிகளாய்
வாழ்ந்து மகிழுங்கள்.......

அன்புடன் மலிக்கா


இறைவனை நேசி இன்பம் பெருவாய்

10 கருத்துகள்:

  1. Thelintha Neeroodayai Kavithaikal.
    - Musthafa, Dubai.

    பதிலளிநீக்கு
  2. உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வந்து தொடருங்கள்.....http://eniniyaillam.blogspot.com/2009/09/blog-post.html

    பதிலளிநீக்கு
  3. மலிக்கா நல்லா இருக்கு , கவிதைக்கு தகுந்த மாதிரி நகைகள் போட்டு இருக்கிறது இன்னும் அருமை
    வழ்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. திருச்சி சையத் அவர்களே தாங்களுடைய கருத்துக்களுக்கு
    மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி சாரு

    பதிலளிநீக்கு
  6. மலிக்கா அக்கா,
    படத்துடன் கவிதை சூப்பர்ப்...அழகாக படம்பிடித்து காட்டியிருக்கிங்க...நன்றி

    பதிலளிநீக்கு
  7. பெண்கள் பூட்டும் நகையையும் கவிதையாய் சித்தரித்து விட்டீர்கள். சூப்பர் கலெக்ஷன் களும் அருமை.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது