நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விடலை...


முளைத்து மூனுயிலை விடுவதற்குள்
முக்கால் வாழ்க்கையை
வாழ்ந்து முடித்திட எண்ணும்..
மூத்தோர் முன்னோர்பற்றிய எண்ணமற்று
மனம்போனபோக்கில்
மனதி(மடியி)லடம் கேட்கும்...
காமக்கோயிலின் சாத்தனை வழிபட
கண்ணியம் கட்டுப்பாடற்று
கண்மூடித்தன பூஜைகளுக்கு தூபம்போடும்...
சொல்பேச்சுக் கேளாமை
அல்பத்தன வீராண்மை
அவிழ்த்துவிடும் பொய்யாமை
அத்துமீறும் விடலாமை
பதிமூன்றில் தொடங்கி
பதினெட்டில் தொடரும்
பருவத்தை பக்குவமிடத்தெரியா
பெற்றோர்களின் இயலாமை
விடலை வீணானால்
வாலிபம் கோணலாகும்
வாலிபம் தவறானால்
வாழ்வே பாழாகும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உயிருக்கும் மனதுக்கும்..


இருக்கும்வரை இரக்கமுடன்
இருங்கள்
இறக்கும்போது ஏற்றம்பெறுவீர்கள்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

உயிரோடிருக்கும்வரை
உதவுவதில் முந்துங்கள்
உயிர்களின் மூச்சில் கலந்திருப்பீர்கள்
@@@@@@@@@@@@@@@@@@

வாழும்வரை அன்போடு
வாழுங்கள்
வாழ்வு முடிகையிலும் வசந்தமடைவீர்கள்
#############################

மரணிக்கும்வரை
மனிதாபிமானமணியுங்கள்
மரணித்தபின்பும் மண்ணில் வாழ்வீர்கள் 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மானமீனம் உணருங்கள்
மதிப்புமிகுந்து உயர்வீர்கள்..
கஞ்சம் நயவஞ்சகம் தவிருங்கள்
கண்ணியம் கிடைக்கப்பெருவீர்கள்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சுயம் நலன் [சுயநலம்]




ஓடுடைந்து கவிச்சடிக்கும் முட்டையாய்
ஒட்டி உறிஞ்சும் அட்டையாய்
சுயமிழக்க முடியுமோ
சுயநலமது சுயத்தினை போக்குமோ..

சுயமிழக்க
நெருங்கும் தருணம்
சுயம் காக்க முனையுமெந்தன்
சுயநலம்...

சுயம் பேணத்தவறும் -பிறர்
சுயத்திலென்
சுயமிழக்க விரும்பா
சுயநலம்..

தன்நலம் காத்து
பொதுநலம் சிறக்க
என்நலன் தேக்குமென்
சுயநலம்..

சூடு சொரணையற்று
சுடுசொற்கள் பட்டு
மண்புழுவாய் சுருழ
மதிமறுக்குமென் சுயநலம்..

குட்டக் குட்டகுனிந்து- இனியும்
குனிய முடியா நிலையில்
கட்டவிழ்த்து
குட்டுமென் சுயநலம்..

இல்லாமை நெறுக்கி
இன்னலிடும் போது
பொல்லாமை நீக்க
பொசுக்கென பாயுமென் சுயநலம்..

சுயநலக்காரியென
சுட்டிக்காட்டுவதை
சுண்டித்தள்ளுகிறேன்

சுயம் தேடும் பறவையாகாது
சொறியக்கொடுக்கும் மாடாய்
செல்லவிரும்பாததால்...

=============================================

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது