நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உனக்கும் எனக்குமானது!..


இது நினைவிருக்கிறதா? என்ற பின்னோக்கும் நியாபகங்களுக்காக முகநூலில் எழுதியது.. 

அட கண்டங்கள் தாண்டியும் அடி எடுத்துவைத்துவிட்டோமா! நம்பவேமுடியவில்லை.. 
ரொம்ப சந்தோஷம். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

//மலிக்கா, உங்களின் கவிதை ஒன்று கனடாவில் வெளிவரும் தங்கத்தீபம் வாரப் பத்திரிகையில் போட்டுள்ளேன். உங்களின் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவும். நன்றி. சிவா..//

இது சிவா அவர்கள் எனக்கு அனுப்பிய மெயிலிருந்து .. 

முகமறியா மனிதர்களின் பாசங்கள் பிரம்மிக்கவைக்கிறது. இப்படி பல பாசங்கள் கிடைக்க எனக்கருளிய இறைவனுக்குதான் நன்றியை தெரிவிக்கவேண்டும். 
எனது கிறுக்களையும் கவிதையாய் ஏற்று அதை வெளியிட்ட தங்கதீபம் பத்திரிக்கைக்கும். அதை வெளியிடக்காரணமாக இருந்த சகோதரர் திரு சிவா அவர்களுக்கும் என நெஞ்சார்ந்த நன்றிகள்...

நன்றி நன்றி நன்றி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கவிதை எழுதுவது எப்படி?



இக்கவிதையில் எதுவும் குறையிருக்கா? ஏன் கேட்கிறேன் என்றால் அதுக்கும் காரணமிருக்கு.
கவிதைகள் கட்டுரைகள் வெளியிடும்  ஒருபிரபல .காமிற்கு எல்லாரும் அனுப்புகிறார்களே நாமும் அனுப்புவோம் என கவிதைகள் பல அனுப்பியுள்ளேன். அத்தளத்தில் சிலகவிதைகள் வெளியாகி உள்ளது.
அதில் 3.4 கவிதைகள் ”நாட் செலக்டட்” என திரும்பி வந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை சரி ஏன் என தெரிந்துகொள்ளலாமா என மெயில் அனுப்பினேன். பதில் வந்தது மிகவும் ஒன்று பதில் வந்தது  ”பழைய நடைக் கவிதையிது” என
என்னடாயிது கவிதை நடையில் பழையது இல்லாமலா புதியது தோன்றின என நினைத்துக்கொண்டு. சில நாட்கள் கழித்து அந்த கவிதை வேறு தளங்களுக்கு அனுப்பினேன் அங்கே அவை வெளியானது.அந்த கவிதைகள் இவைகள்தான் அடக்கம்      அத்தனைக்கும் ஆமெனில். தற்போது இங்கே வெளியிடப்பட்டிருக்கும் காலம்யாவும்..கவிதையும் சேர்த்து.

முதல் தடவை ரிஜெக்ட் செய்ததும் சோர்ந்துவிடாமல் மீண்டும் மீண்டும் அதேயிடத்திற்கு அனுப்பினேன். ஏன் தெரியுமா? நமது எழுதுக்கள் சரியில்லையா?  அல்லது எண்ணங்களில் எழும் வரிகள் சரியில்லையா? அல்லது நம்முடையது கவிதையே இல்லையா? என்ற எண்ணம் எழுந்ததாலும். என்னமாதரியான கவிதைகளை செலக்ட் செய்கிறார்கள் என தெரிந்துகொள்ளவும்தான்..

இக்கவிதை அனுப்பியபோதும்  அதே பதில் வந்ததும் மீண்டும் மெயில் எழுதினேன்.
//sorry not selected//என்பது ஏனென தெரிந்துகொள்ளலாமா?
கவிதையை எப்படி எதிர்பார்கிறீர்கள். இங்கிலிஸ் கலந்து எழுதும் கவிதைகளையா? அல்லது வரிகளை உடைத்துபோட்டும் எழுதும் கவிதைகளையா? விபரம் தந்தால் அதற்கு தகுந்தார்போல் எழுதலாமில்லையா?
விபரம் தருவீர்களா?

எனக்கேட்டு எழுதினேன் இதுவரை பதில்லை.

நான் யாரையும் குறைசொல்லவில்லை. இங்கிலீஸை தமிழாக்கி கலந்த கவிதைகளுக்கு உள்ள மதிப்பு, தமிழைமட்டும் இழைத்து எழும் கவிதைகளுக்கு கிடைப்பதில்லையோ! என்ற எண்ணம் தோன்றுகிறது. [நான் எழுதுவதெல்லாம் கவிதையென சொல்லவில்லை இருந்தபோது கவிதையென நினைத்து எழுதுவதால் இப்படி தோன்றியிருக்கலாமோ] நிறையபேர்களின் ஆதங்கம் இதுதான். அதைதான் நானும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.. உங்கள் கருத்துகளையும் பகிர்ந்தால் எப்படி எழுதினால் ஏற்றுக்கொள்வீர்கள் அல்லது ஏற்றுக்கொள்வாகள் என தெரிந்துகொள்ளலாமில்லையா?
சொல்லுவீங்கதானே!

அப்படியே கவிதை எழுதுவது எப்படி?ன்னு யாராவது சொல்லிதந்தால் அந்த வகுப்பில் முதல் மாணவியாக நான் சேர்ந்துகொள்வேன்..
அட்ரஸ் ப்லீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இங்கிலீஸில் கேட்டாதான் சொல்லுவீங்கன்னுதான் ஹி ஹி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எதிரி வேறெங்குமில்லை!



உறங்கப்போகும்முன் இவ்வுலகைக்கண்டு  பயப்பட்டு
உறங்கியெழும்போது உதறிவிட்டு விடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

கெட்டவர்களைக் கூட
நல்லவர்களென நம்பிக்கை கொள்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

தைரியமாக முடிவெடுத்தபின்பும்-சிலசமயம்
தடுமாறி தவறாகி விடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

துரோகங்களை கண்டு துவண்டுபோய்
சுதாரிக்கத் தோன்றாமல் கிடக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

தெளிவுகள் கண்ணெதிரே தெரிந்தபின்பும்
மறைவானவற்றையே தேடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

மதிசொல்லும் அறிவுரையை ஏற்கமறுத்து-பலசமயம்
சதிகளை விதிகளென நம்பிவிடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பாசாங்குகளை பாசமென நம்பி
பாதாளத்தில்கூட விழத்துடிகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பசுந்தோல் போர்த்திய புலிகளுக்கு மத்தியில்
பால்மனம் மாறா பச்சிளமாகவே இருக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பொய்யான உலகில் மெய்யாக வாழ
வெள்ளாந்தியான உள்ளம் அடம்பிடிக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

இப்படி

எதிரிகளின் சாம்ராஜ்ஜியத்தில்
எனக்கெதிரி எங்கேயுமில்லையென்று! 
எண்ணும்போதே எழுந்தது எதிரி 
எனக்குள்ளிருந்து....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது