அம்மாவிற்கே!
கவனமாக கரு சுமந்து
கருவறைக்குள் சுவாசம்தந்து
கண்ணயராது விழித்திருந்து
கரைந்தது தேகம்
குழந்தையைக்காண
வளரும்போது வாசல்பார்த்து
வராதபோது மனம் பதபதைத்து
வறுமையையும் பொறுத்திருந்து
வலிகளையும் ஏற்றது உள்ளம்
குழந்தைக்காக
அழகாய் வளர்த்த பிள்ளை
அடுக்கடுகாய் கொடுத்தது தொல்லை
அன்னையின் மனவேதனை
அறிந்தும் செய்தது சோதனை
அதனால் கிடைத்தது
அன்னைக்கு திண்ணை
அன்றுசுமையிலும் சுகம் கண்டாள்
அன்னை
இன்றுசுகத்திலும் சுமையாய் கருதினான்
இளம்பிள்ளை
அம்மாவிற்கே இந்நிலை
அப்படியானால் -இனி
அவன்
எதிர்காலம் எந்நிலை???
அம்மா.
அன்பின் அஸ்திவாரம்
ஆனந்தத்தின் ஆணிவேர்
இன்பத்தின் நிழற்கொடை
ஈகையின் உதாரணம்
உண்மையின் உறைவிடம்
ஊஞ்சலின் தாலாட்டு
எதார்த்தத்தின் நிதர்சனம்
ஏகன் தந்த ஏஞ்சல் வரம்
ஐம்பூதங்களின் அடக்கம்
ஒற்றைப்பூவில் உலகவாசம்
ஓர் உறவில் ஒட்டுமொத்தநேசம்.
இப்படி
அனைத்திலும் அவளே
அவளில்லையேல் எனக்கேது
நிழல் பூமியிலே!
டிஸ்கி// அம்மாவைப்பற்றி கவிதை எழுதத்தலைப்பு முகநூலில்.[facebook]
அம்மாவே ஒருகவிதை அதை எப்படி வார்த்தையில் எழுதுவது ஆனபோதும்,எழுத்துக்களால் இயன்றவரை.
அனைவரும் அம்மாவை போற்றும்போது அதில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள் என்பதற்காகதான் மாற்றுக்கருத்தோடு ஒரு கவிதை.
கண்கூடாக பார்க்கும் விசயங்களை சற்று மனதயக்கத்துடன் எழுத்துக்களால் கவிதையென்ற பெயரில்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
இதயசாரலில் இனிக்கும் எண்ணங்கள்
மரகத பெண்பூவே!
மஞ்சம் தந்த மாமயிலே
தாய் மடித்தேடி வந்த
மஞ்சள் நிலவே
தாய் தந்தையின்
தாரகை மலரே
தேகங்கள்
மையம் கொண்டிட
தேவதையாய் வந்தவளே!
தேன்சிந்தி நின்றவளே!
நீ
பிறந்த பொன்தினம்
பாரெங்கும்
பைந்தமிழ் ஓசைக்கேட்டதடி
எங்கள் காதினில் வந்து
அவை ஒலித்ததடி
நீ
வளர்ந்த ஒவ்வொரு நாளும்
வாசல்தேடி வசந்தங்கள் வந்ததடி
எங்கள்
வாழ்க்கையில் வண்ணங்கள் பூத்ததடி
வண்ணமயிலே
நீ வாழ்ந்திடு
பல ஆண்டுகாலம்
உன் வாழ்க்கை முழுதும்
சிறந்து விளங்கட்டும்
ஆனந்த விழாக்கோலம்
அன்பு மகளே!
அடுத்தவர் ஆயிரம்கோடி
அள்ளிக்கொடுத்தாலும்
அடங்காது எங்கள்
ஆருயிர் நெஞ்சம்
அன்போடு நீ,,
கிள்ளிக்கொடுத்தால் போதும்
அதுபோதும்
எங்களுக்கு எப்போதும்
இதயங்கள் இணைந்ததால்
இனியசாரல் அடிக்குதடி
உன்னால் -எங்கள்
இதயக்கூட்டுக்குள்
எண்ணங்களெல்லாம்
இனிக்குதடி.........
டிஸ்கி// இந்த கவிதை என் அன்பான நட்பின்
மகள் சாருஸ்ரீ யின். பிறந்தநாள் பரிசாக நான் எழுதிய கவிதை.
இணைய இதழ் தமிழ்குறிஞ்சியிலும் வெளிவந்துள்ளது..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
மஞ்சம் தந்த மாமயிலே
தாய் மடித்தேடி வந்த
மஞ்சள் நிலவே
தாய் தந்தையின்
தாரகை மலரே
தேகங்கள்
மையம் கொண்டிட
தேவதையாய் வந்தவளே!
தேன்சிந்தி நின்றவளே!
நீ
பிறந்த பொன்தினம்
பாரெங்கும்
பைந்தமிழ் ஓசைக்கேட்டதடி
எங்கள் காதினில் வந்து
அவை ஒலித்ததடி
நீ
வளர்ந்த ஒவ்வொரு நாளும்
வாசல்தேடி வசந்தங்கள் வந்ததடி
எங்கள்
வாழ்க்கையில் வண்ணங்கள் பூத்ததடி
வண்ணமயிலே
நீ வாழ்ந்திடு
பல ஆண்டுகாலம்
உன் வாழ்க்கை முழுதும்
சிறந்து விளங்கட்டும்
ஆனந்த விழாக்கோலம்
அன்பு மகளே!
அடுத்தவர் ஆயிரம்கோடி
அள்ளிக்கொடுத்தாலும்
அடங்காது எங்கள்
ஆருயிர் நெஞ்சம்
அன்போடு நீ,,
கிள்ளிக்கொடுத்தால் போதும்
அதுபோதும்
எங்களுக்கு எப்போதும்
இதயங்கள் இணைந்ததால்
இனியசாரல் அடிக்குதடி
உன்னால் -எங்கள்
இதயக்கூட்டுக்குள்
எண்ணங்களெல்லாம்
இனிக்குதடி.........
டிஸ்கி// இந்த கவிதை என் அன்பான நட்பின்
மகள் சாருஸ்ரீ யின். பிறந்தநாள் பரிசாக நான் எழுதிய கவிதை.
இணைய இதழ் தமிழ்குறிஞ்சியிலும் வெளிவந்துள்ளது..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
யாதுமாகி…...
அனைத்து அன்னையர்க்கும்
[அன்னையாக்கிய தந்தைகளுக்கும்]
என்மனமார்ந்த
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...!!
அகிலமதை கண்டேன்
அதையுணர்ந்த போதினிலே
மனம் மகிழ்ந்து கொண்டேன்
நான் பிறக்கும் வேளைதனில்
வேதனைகள் கொண்டாள்
நாள்தோறும் எனக்காக
கண்விழித்து நின்றாள்
தாயவளாள் மட்டுமே -
தன்னிகரற்ற அன்பைத் தரமுடியும்
தந்தையின் அன்பினையும்
சேர்த்து தர இயலும்
அகிலத்தை காட்டிடவே
அன்னையவள் வந்தாள்
அனுதினமும் நினைதிடவே
அன்னையென ஆனாள்
அன்னையவள் நெஞ்சினிலே
அன்பொழுகக் கண்டேன்
அணைத்து எனை நிற்கயிலே
அசையாது நின்றேன்
நான் வளரும் வேளைதனில்
வேலியாய் நின்றாள்
நம்பிக்கை ஊட்டியே
எனைக் காத்துக் கொண்டாள்
காயங்கள் நான்படவே
ரணமாகிப் போனாள்
கண்ணுக்குள் எனைத்தாங்கி
கலங்காமல் பார்த்தாள்
காலங்கள் கடந்திடவே
நான் தாயாகிப் போனேன்
கண்ணிமைக்காமல் அப்போதும்
எனைப்பார்த்துக்கொண்டாள்
அன்னையவள் காலடியில்
சொர்க்கமதை உணர்ந்தேன்
அதையுணர்ந்த போதினிலே
அகிலத்தை மறந்தேன்
யாதுமாகி எனக்காக
தன் வாழ்க்கை வாழ்ந்தாள்
சேயாகி நானுமதை
உணர்ந்திடவே வைத்தாள்
தாயாக எனைத்தாங்கி
செய்தஅத் தனையும்
தள்ளாட்டம் வரும்
வயதில் முடியாமல் போகும்
சேயாக நானிருந்த போதும் –
செய்வேன் பணிவிடைகள் அத்தனையும்
தாயாகி நானும்....
டிஸ்கி// ராகத்தோடு படியுங்கள் ரம்மியமாய் இருக்கும்.
ஒருவார உடல் இன்னல்களுக்கு பின் புத்துயிர்தந்தது அன்னையை நினைத்து எழுதிய கவிதை..
இன்று ஒருநாள் போதுமா? அன்னையை வாழ்த்த!
வாழும் காலம்தோறும் மறந்திடாத பாசம் அன்னையின் அன்பானநேசம் மட்டுமே!
அது சரி தந்தையர்கள் தினம் எப்போது?//
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






