நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தமிழ்குடும்பம் தந்த பொக்கிஷம்




என்னுடைய படைப்புகள் முதலில் http://www.tamilkudumbam.com/தமிழ்குடும்பம்.காம் அதிலிருந்துதான் வெளியானது எனக்கு ஊக்கமும். ஆதரவும்.
தோழிகளும் தோழமைகளும் அங்கு நிறைய நிறைய.
அவர்களின் ஊக்கம்தான் இந்தளவு என்னை கவியெழுத தூண்டியதே!
என் கவிப்பயணைத்தையும் கலைபயணத்தையும் தொடரவைத்த தமிழ்குடும்பத்திற்க்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.


என் படைப்புகளை ஊக்கவிக்கும் பொருட்டாக எனக்கு.ரூ 500 மத்திப்பிளான புத்தங்களை பரிசாக வழங்கியுள்ளார்கள். அதுவும் நாமாக தேர்ந்தெடுத்துகொள்ளும்விதமாக http://www.udumalai.com//உடுமலை. காம்மில் லிங்க் தந்தார்கள் அதில் நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள்


இதோ எனது புத்தகத்தேர்வுகள்.


மூ மேதாவின் - நாயகம் ஒரு காவியம்
கனிமொழியின் - கருவரை வாசனை
வைரமுத்துவின் - கள்ளிக்காட்டு இதிகாசம்
பிரபஞ்சனின் - முதல் மழைத்துளி
அகிலனின் - சிநேகிதி
தன்னம்பிக்கை - வெற்றியின் சிறகுகள் விறியட்டும்
கவிதைகள் - என் ஜன்னலின் வழியே .


இத்தனைஅற்புத பொக்கிஷமான புத்தங்களைத்தந்து என்னை இன்னும் ஊக்கப்படுத்தி உற்சாகம் தரும் தமிழ்குடும்பத்திற்கும் அதன் உறுப்பினர்கள் அத்தனைபேருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்..


இது நான் முதன்முதலில் தமிழ்குடும்பத்தில்
தமிழ்குடும்பத்தைபற்றி எழுதிய கவிதை
முகப்பிற்கு
உள்ளே சென்ற
அக்குடும்பத்தில்
உள்ளவர்களை பார்வையால்
பதிவுசெய்துகொன்டேன்


ஆண்கள் ஸ்பெசல்
பெண்கள் ஸ்பெசல்-என்ற
பகுதியில்
அழகுக்கு அழகுசேர்த்து
நொடியில் ரெடியாகிய
டிப்ஸ்களை எடுத்துக்கொண்டு


சிந்தனைசெய்த மனமாய்
மற்றவைக்குள் புகுந்து
மகளீர் மன்றத்திற்கு
பழகலாமென்று வந்தேன்
வந்தயிடத்தில்


நகைச்சுவையாய்
வாசகர் டைரியைப்படித்து
கண்டதும் கேட்டதுமாய்
செய்திகள் தெரிந்துகொண்டேன்


அறுசுவையாய் பல்சுவையும்
கைவினைப்பொருள்களையும்
வர்ணவேலைப்பாடோடு
தையற்கலையும்
கற்றுக்கொண்டு
மழழையர் பக்கம்வந்து
மகிழ்சியோடு
போட்டோக்கள் கண்டு


குறிப்புகள் தெரிவிக்கலாமென்று
தமிழில் எழுதவந்துள்ளேன்


தமிழ்குலம் செழிக்க
தமிழ்குடும்பம்
தந்துள்ள
அத்தனையும் அருமை
இது அறிவியலின் புதுமை


பாலைவனத்தில்
நாங்களிருந்தாலும்
பசுமை கொஞ்சும் தமிழை
கண்களால் கண்பது குளுமை
அதை தனித்தமிழில்
எழுதுவது
இனிமையிலும் இனிமை


இவை அத்தனைதிற்கும்
துணையிருக்கும்
தமிழ்குடும்பத்திற்கே சாரும்
கோடானகோடி
பெருமை பெருமை பெருமை


தாய் மொழியை வளர்க்க
ஒன்றிணைவோம்
தமிழர்களாய் வானுயர்வோம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

ஏன் விடிந்தாய்!


அறியாத வயது
ஆசைகள்
நிறைம்பிய மனது


சிறகுகளில்லாமல்
இறக்கைகட்டிப்
பறந்தது
இரவில்


எப்போது விடியும்
எப்போது
விடியுமென


விடிய விடிய
விழித்திருந்தன
விழிகள்
தந்தையின்
வரவுக்காக


பொழுதும் புலர்ந்தது
விழியும் ஒளிர்ந்தது
வந்தது தந்தையல்ல


தந்தை
தவறிவிட்டாரென்று
துயரத் தந்தி


கதறிக் கதறி
அழுதது கண்கள்
கருமணிகள்
கழண்டு
விழுமளவிற்க்கு


பதறித் துடியாய்
துடித்தது மனது
பொழுது
ஏன் விடிந்ததென்று........




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

வீரம் வென்றது

ஐந்தறிவு ஜீவன்
அரண்டு துடிக்க

ஆறறிவு ஜீவன்
அடக்க நினைக்க

கையிரண்டைக் கொண்டு
கொம்பிரண்டைப் பிடிக்க

கோபம்கொண்டு
கொதித்தெழுந்து
குடல்தனை சரிக்க


குற்றுயிராய் குனங்கி
உயிர்தனை வதைக்க
வீரம் வென்றது
ஐந்தறிவைக் கொண்டு.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது