நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முதுமையின் தாக்கம்.



ஆறடி
ஆறுபோல் வளையும்போது
ஆறுதலுக்கு
ஆள்தேடுது!
அறணுமிழந்து செயலுமிழந்து
அன்பு கொள்ள
தோள்தேடுது!
ஊண்குறைந்து
கூன்விழுந்தபோது
ஊன்றி நடக்க
ஒரு கொம்பை நாடுது!

வாசம் வீசிய
வாலிப வாழ்க்கை
வலுவிழந்து
வெருச்சோடித்தெரியுது
ஊட்டி ஊட்டி
வளர்த்த பிள்ளை
வீட்டிலொரு
மூலைகொடுக்குது
முணுமுணுக்கும் சத்தம் கேட்டால்
முகத்தை சுழிக்குது!

கெஞ்சிக் கெஞ்சி
கொஞ்சிபேச
பேரப்புள்ளையின்
துணையை நாடுது!
பேரன்பேத்திகளின்
பேச்சு குளிருது!
முதிர்ச்சி எட்டி
முதுமை தட்டி
மூச்சிறைக்குது!
முந்தையகாலம் நினைத்து
புலம்பும் நெஞ்சம்
மெளனம் காக்குது!
முதுமையின் தாக்கம் புரியுது...
------------------------------------

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

5 கருத்துகள்:

  1. // கெஞ்சிக் கெஞ்சி
    கொஞ்சிபேச
    பேரப்புள்ளையின்
    துணையை நாடுது!
    பேரன்பேத்திகளின்
    பேச்சு குளிருது!
    முதிர்ச்சி எட்டி
    முதுமை தட்டி
    மூச்சிறைக்குது!
    முந்தையகாலம் நினைத்து
    புலம்பும் நெஞ்சம்
    மெளனம் காக்குது!
    முதுமையின் தாக்கம் புரியுது... //

    முதுமையின் தாக்கம் அற்புதமாக குறிப்பிட்டு உள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு

  2. you have explained one aspect of old age.please read my muthumaiyin parisu written some time back. Also I request you to visit my postings. It is a long time since you last visited my blog. Thanks

    பதிலளிநீக்கு
  3. முதியோர் இல்லங்கள்
    முளைத்து
    புற்றீசல்போல்
    பெருகிக் கொண்டிருக்கும்
    காரணிகளை
    விளக்கும் கவிதை...

    நன்று...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. அக்கா...
    கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது