நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நம்பவே முடியவில்லை 401



அன்பான அன்புகளுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள். ஏன் திடீரென்று நன்றியெல்லாம் அப்படின்னு பார்க்கிறீங்களா? எல்லாம் காரணமாத்தான். இந்த நீரோடையில் நான் எழுதத்தொடங்கிய பொழுது தந்த ஊக்கங்களும் கருத்துகளும் அன்பு பரிமாற்றங்களும் நட்புவட்டங்களும் சொல்லில் அடங்காதவைகள். அவைகளின் தொடர்ச்சியால் இன்றோடு எனது 400 வது பதிவை முடித்து 401 வது தொடங்குகிறேன். எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே! அதிகம் கற்றறியாத எனக்கு அவன் அறிவைத் தந்தான் அதனில் நின்றும் எழுதறிவையும் எழுத்தாக்கத்திற்கான எண்ணங்களில் அறிவையும் தந்தான். அதன்மூலமே பற்றிப்பிடித்துக்கொண்டேன் எழுத்தாற்றலை ஆகவே எனது எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரனான இறைவனுக்கே புகழ் அனைத்தும் உரியவைகள்..

நம்பவே முடியவில்லை நானா எழுதுகிறேன் என்று..

மேலும்  நீரோடையில் மட்டும் இது 401 வது பதிவு. இதற்க்கு ஒத்துழைப்பு தந்துகொண்டிருக்கும் உலக்கிலுள்ள அனைத்து நல் நெஞ்சங்களுக்கும் எந்நாளும் எனது நன்றியென்னும் அன்புகலந்த நட்பு பாசம் அனைத்தும் இம்மியளவும் குறையாதிருக்கும் என்றும் அன்புடன் மலிக்கா ஆனந்தகண்ணீரோடு தங்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளைகூறிக்கொள்கிறேன்..

டிஸ்கி//
பொதுநலவாதி சொன்னது…
விழிப்புணர்வு அதுவும் பெண்கள் சமூக விழிப்புணர்வுக்கு விழிப்புணவை ஏற்ப்படுத்த பேசுவதற்க்கும். நீங்கள் தொகுப்பதற்க்கும் பணம் வாங்கிகொண்டுதானே செயலாற்றியிருப்பீர்கள். பணம் இருப்பின் விழிப்புணர்வுகள் தானாக வரும் பணம் படைத்தவன் எந்நேரமும் விழிப்புணவோடும் இருப்பான் விழி மூடாமல்கூட இருப்பான்.. பணமிருந்தால் விழிப்புணர்வு மாநாடென்ன உலக மாநாடே போடலாம்.. தொகுத்து வழங்குனதற்கு எவ்ளோ கொடுத்தாங்க பணம் அதை வைத்துக்கொண்டு விழிப்புணர்வோடு இருங்க இல்லாவிட்டால் அதையும் ஆட்டய போடும் உலகமிது..// அன்பு சகோதரே!  மனிதர்களில் செயல்கள் அனைத்தையும் அறிந்தவன் இறைவன்  . பெருமைக்காவோ அல்லது புகழ்ச்சிக்காவோ சொல்லவில்லை. நான் தொகுத்தளித்த இரு நிகழ்ச்சிகளுக்கும் பணம் வாங்கியதில்லை. இதற்க்கு முன் March 03, 2012 இலக்கிய மாநாடு நடந்தது அதற்க்கும் நான்தான் தொகுத்து வழங்கினேன். இதோ 12-5-2012 அன்று நடந்த சமூக விழிப்புணர்வு மாநாட்டையும் நான்தான் தொகுதளித்தேன் ஆகவே! தாங்களைபோல் என்னைப்பற்றி தவறாக எண்ணியுள்ள ஒருசிலருக்கு[ அட சிலர் இங்கிட்டும் இதபோல முணுமுணுக்குறாங்கப்பு] இதன்மூலம் சொல்லிக்கொள்கிறேன் பணம் இன்று வரும் நாளைபோகும். நான் முதலில் செய்தது என் தமிழுக்காக! தற்போது செய்தது என் மார்க்கத்திற்காக!. பணம் வாங்கிக்கொண்டு நான் செய்திருந்தாலும் அது தவறில்லையே! இருந்தபோதும் நான் செய்யாத ஒன்றை செய்ததாக சொல்வது. கதை கட்டுவதெல்லாம் நல்லதில்லீங்கோ! அதுசரி இப்படி எத்தனைபேர் கிளம்பிருக்கீங்க.. ஹா ஹா.. அதவிடுங்க முதலில் நான் எப்படி தொகுத்து வழங்கினேன் மாநாட்டையின்னு இங்கு சென்று பார்த்துவந்துவிட்டு கருத்துகளை பகிருங்கள் ஓகேவா! அனைவரும் சென்று பார்த்துவிட்டு கருத்துகளை சொல்லுங்கள். மீண்டும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். என் எழுத்துகள்
எங்கும் ஒலிக்கட்டும்
ஏகயிறையோனின் அருள்கொண்டு
நீரோடை என்றும் 
தெளிந்த நீராய் ஓடட்டும்
எண்ணிலடங்கா உங்களின் 
ஏற்றமிகு கருத்துகளைக்கொண்டு..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

21 கருத்துகள்:

  1. மாஷா அல்லாஹ் 400 ஆ.. இன்னும் பக்கத்தில் ஐந்து பூஜ்ஜியங்கள் வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
  2. நானூறு பதிவு என்பது ஒரு இமாலயச் சாதனையே
    இது ஆயிரமாய்ப் பெருக
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நானூறு என்பது போதாது இன்னும்
    பலநூறு படைக்க வாழ்த்துகிறேன்

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  4. 400க்கு வாழ்த்துகள் அக்கா

    //பணம் வாங்கிக்கொண்டு நான் செய்திருந்தாலும் அது தவறில்லையே! //
    அதானே... நிகழ்ச்சி தொகுக்குறதுக்கு பணம் கொடுப்பதோ அல்லது அதை பெறுவதோ என்ன தப்பு இருக்கு???

    அவனவன் ஐபிஎல்ல சூதாட்டம் வச்சு பணம் சம்பாதிக்கிறான். ஒலக அளவுல 2G ல கோடிகோடியா அமுக்கி சாதனை படைக்கிறான். சுவிஸ்ல மலைமலையா பணம் சேர்த்து வைக்கிறான். இதுல காட்டாத பொதுநலத்தை நிகழ்ச்சி தொகுத்து வழங்குறதுலையா காட்டணும்... அடகொடுமையே!

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் மலிக்கா.இன்னும் பன்னூறு பதிவுகளிட்டு தங்கள் ஆக்கங்கள் வெளிவரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. இனிய வாழ்த்துகள் மலிக்கா.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. இன்று... 400 ...!

    நாளை..... 4000....!

    நாளை மறுநாள்...??? .....00000000வா...!

    வாழ்த்துக்கள்...!
    வாழ்த்துக்கள்.....!
    வாழ்த்துக்கள்.......!


    டிஸ்கி : "எங்க அண்ணாதையே காணோம்...! என்ன கோவமோ...! என்னாச்சோ...! ஏதாச்சோ...!"அப்படீன்னு ஒருத்தர் புலம்பிட்டிருந்தாங்க...!

    ஆனா...!

    400 பதிவுக்கு முதல் வாழ்த்து...! அவரோடதான்...!

    என்னாத்த இருந்தாலும்...
    அண்ணாத்த
    அல்லவா...???????

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் ..எண்ணிலடங்கா ''

    கவி பாடி (கருத்துள்ள கவியாய் .சமூக பொறுப்புள்ள கவியாய் )

    எண்ணில் அடங்கா வாசகரை பெற்று புகழ் பெற இறைஞ்சுகிறேன்

    பதிலளிநீக்கு
  9. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  10. vaazththukal menmeelum sirkkavum pala paldaippukala tharavum vaazththukal.

    neesamudan
    siyaan

    பதிலளிநீக்கு
  11. 401 க்கு அன்பான வாழ்த்துகள்.
    தாங்கள் மேலும் பல வெற்றிகள் பெறவும் ஆண்டவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப ரொம்ப சந்தோஷம் அக்கா...
    வாழ்த்துக்கள்...
    நிறைய எழுதுங்கள் சிகரம் தொட...

    பதிலளிநீக்கு
  13. 401 ஆஆஆ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள் இன்னும் 4001 ஆக வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  14. பல வெற்றிகள் பெறவும் ஆண்டவன் அருளட்டும்// rippeeeeeeeeeeet

    பதிலளிநீக்கு
  15. சுஜி என்ற சுஜாதா20 மே, 2012 அன்று AM 7:03

    இன்னும் பல படைப்புகள் தந்து மென்மேலும் பல வெற்றிகள் குவிக்க வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  16. அன்பின் பகிர்தலாய் "விருது" ஒன்றை பகிந்துள்ளேன்
    நேசத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் (:

    பதிலளிநீக்கு
  17. வலைச் சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகம் செய்துள்ளேன்
    நேரம் இருப்பின் வாருங்கள் (வலைச்சரத்திற்கு )

    பதிலளிநீக்கு
  18. 400ஆ... கேக்கவே சந்தோஷமா இருக்கும்மா... இன்னும் நிறைய நிறைய வெற்றிகளை நீ குவிக்கணும்னு மனசார மகிழ்ச்சியோட வாழ்த்தறேன்.

    பதிலளிநீக்கு
  19. வலைச்சரம் வாங்க
    http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_26.html

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது