நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இனியபொழுது..



தை திங்கள் வந்தது
தமிழருக்கு மகிழ்வைத் தந்தது

ஏர்பிடித்து உழுதிடும் உழவரின் உழைப்பின்
ஏற்றங்களை உலகுக்கு உணர்த்திட
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்

உழைப்பவரின் மனதினை உற்சாகப்படுத்தி
ஊக்கமும் உறுதியும் தந்திட
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்

கலப்பையின் உழைப்பே
அகப்பையில் சோறு
காட்டையும் பொன்னாய்
ஆக்கிடும் பாரென்று சொல்ல
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்

விஞ்ஞானங்கள் பல வந்தாலும் -இந்த
விவசாயின் வேர்வைக்குத் தனி
விலைமதிப்புள்ளதென்பதைச் சொல்ல
வந்தது திங்கள் தந்தது பொங்கல்

ஆடு மாடுகளுக்கும் அலங்காரம்
அது விலாங்கா போதிலும்
அதற்கும் மதிப்பளிக்க
வந்தது திங்கள் தந்தது பொங்கல்

கரும்பும் மஞ்சளும் மங்களமாய் இனித்திட
கன்னிகள் சத்தம் களைக்கட்டிட
கூட்டமாக கூட்டமாய் கூட்டாஞ்சோறு
கூடிப் பொங்கி உண்டிட
வந்தது திங்கள் தந்தது பொங்கல்

தமிழரின் பெருமை தளைத்து ஓங்கிட
தன்னிறைவுபெற்று செழித்து வாழ்ந்திட
ஏழைகளற்று ஏற்றம் பெருகிட
ஏழ்மையை அடித்து தூரத்தி விரட்டிட
எல்லாம் வல்ல இறைவனை தொழுது
என்றும் கேட்போமே இனியபொழுது....

உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கும். தமிழினத்துக்கும். உழவர்களுக்கும். உழைப்பாளிகளுக்கும்.
உளமார்ந்த வாழ்த்துக்கள்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

16 கருத்துகள்:

  1. பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. //கலப்பையின் உழைப்பே
    அகப்பையில் சோறு//

    பதிலளிநீக்கு
  3. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. பொங்கல் பற்றிய அனைத்து விஷயங்களையும் கவிதையில் தொட்டுக்காட்டியுள்ளீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  5. //கலப்பையின் உழைப்பே
    அகப்பையில் சோறு//

    கலக்கல்!
    "கவிக்கும்" கவி குடும்பதாருக்கும் என்
    உளம் மார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கும். தமிழினத்துக்கும். உழவர்களுக்கும். உழைப்பாளிகளுக்கும்.
    உளமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...

    நல்லா இருக்குங்க கவிதை....

    பதிலளிநீக்கு
  7. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. மனம் நிறைந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள் தோழி.நீங்களும் வீட்ல பொங்குவீங்கதானே !

    பதிலளிநீக்கு
  9. விவசாயிகளின் வேலையின் உயர்வுகளையும்
    உழவனின் பணிச் சிறப்புக்களையும் வடித்த கவிதை!
    பொங்கல் வாழ்த்துக்கள்!

    -கலையன்பன்.

    (இது பாடல் பற்றிய தேடல்!)
    சிரிச்சா கொல்லி மலைக் குயிலு!
    !

    பதிலளிநீக்கு
  10. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. மிக மிக அசத்தலான அழகான வரிகளாலான கவிதை .

    பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் மலிக்கா..

    பதிலளிநீக்கு
  12. பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் மலிக்கா....

    பதிலளிநீக்கு
  13. உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது