நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இந்திய விடுதலையில் சிந்திய குருதிகள்


.

சுதந்திரம் சுதந்திரம் என்றே பேச்சு
சுதந்திரத்திற்காக போனதே 
எங்கள் முன்னோர்களின் பல பல மூச்சு
செங்குருதிகள் அன்று ஆறா ஓடிச்சிச்சே- அதில்
சிதைந்த சிதையப்பட்ட உடல்கள் ஏராளமாச்சே

மூவர்ணத்தில் மூச்சுவிட்டு பறக்கும் தேசியக்கொடியே - எங்கள்
முன்னோர்கள் சிந்திய குருதிகளும் 
உங்கள் கம்பதிற்க்கு இன்றும் உரமாகுதே!

ஆங்கிலேய அடிமாட்டுத் தொழுவத்தில் 
அடகுவைக்கப்பட்ட அடிமைத்தனத்தை
ஆயிரமாயிரம் உயிர்பலிகொடுதல்லவா மீட்டுக்கொண்டோம்

இந்திய வீட்டுதோட்டத்து கனிகளுக்கு 
எங்கிருந்தோ வந்தவர்கள் விலைநிர்ணயிக்க
வாயில்லாப்பூச்சிகளாய் வக்கத்து நின்றதினை தகர்தெரிய
வாலெடுத்து விரட்டியல்லவா 
எங்கள் விலாசங்களை வாங்கிகொண்டோம்

அந்நியர்களை அப்புறப்படுத்தி 
அடிமைத்தனதிலிருந்து விடுதலைபெற
அனைவரோடிணைந்து அயராது பாடுபட்டபோதும்

எங்களின் சுதந்திர சரித்திரம் மட்டும்
இன்றளவும் மறைக்கப்பட்டும் மறுக்கபட்டும்
இந்திய மண்ணின் சுதந்திர வாசனையில்
இஸ்லாமியர்களின் குருதிகளின் வாடையும் 
இரண்டரவே கலந்திருக்கும்

இரட்டிப்புகள் செய்தாலும் 
இல்லையென்று மறுத்தாலும்
வீசும் காற்றிலது கலந்தே மணம் பரப்பும்

எதுவென்றபோதும் நாம் வென்றோம்
நம்மினம் வென்றோம், நம்மிடம் வென்றோம்
வாருங்கள் ஒன்றாய் இணைந்து நம்பாரதம் காப்போம் 
வந்தே மாதரம் என்போம்....

##முகநூலில் போட்டிக்கவிதை##


 https://m.facebook.com/photo.php?fbid=762736270429017&id=100000779522721&set=gm.1438304153124982&ref=bookmark

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கருவறைக் கணவன்



உனக்கும்
எனக்குமான பந்தம்
அழகினை உண்டதல்ல
ஆத்மார்த்தம் கொண்டது
என்பதை நிரூபிக்க
என் கருவறை நிரப்பிய நீயே
உன் மனக் கருவறைக்குள்
எனையும் காப்பதில்
வெட்டவெளிச்சமானது
வெளியுலகிற்கு ;;.



அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வேர்களைத்தேடி.






மலேசிய தொலைகாட்சியில் முதன் முறையாக மலிக்காஃபாரூக்.

மலேசிய தொலைக்காட்சியான ஆஸ்த்ரோ டிவி.மற்றும் நம்பிக்கை மாத இதழ் இணைந்து வழங்கும் "வேர்களைத்தேடி" நிகழ்ச்சியில் மலேசியாவிற்க்கும் இந்தியாவிலுள்ள எங்கள் ஊரான முத்துப்பேட்டை க்கும் உள்ள தொடர்பு சம்பந்தமான உறவுப்பாலம் அமைந்ததை வெளியுலகிற்க்கு எடுத்துரைகும்படியான நிகழ்ச்சியில் எங்கள் வீட்டில் பெருநாள் கொண்டாட்டதோடு மலேசிய மண்ணில் எங்கள் உழைப்பின் வேர் எவ்வாறு விரிச்சமடையச்செய்தது என்பதின்
பின்னனிய நிகழ்வுகளும் பகிரப்பட்டது. 

இன்ஷா அல்லாஹ் இன்று மலேசிய நேரம் இரவு எட்டு 8. மணிக்கு இந்திய நேரப்படி மதியம் 5,மணிக்கு ஆஸ்த்ரோ தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துகொள்கிறேன்

..இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கும் அதன் நிர்வாகத்தார்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது அன்பு நிறைந்த ஈத் பெருநாள் வாழ்த்துகள்..

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது