நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சுடாமல் சுடுதே!.

 சூடா ஒரு டம்ளர்  டீ கிடைக்குமா? என்னது டீயாஆஆஆஆஆஆஆஆஆஆஅ


இனி அடிக்கடியென்ன ஒருகடிக்கூட டீக்குடிக்க யோசிக்கனுமோ???? 

 [”அம்மா பால்”. ”போப்பா வாரம் ஒருதரம் வந்தாபோதும் போயிட்டுவா].
அடிய்யே தங்கப்பொண்ணு டீயா போட்டிருக்கே தலைய வலிக்கிறமாதரியிருக்கு ஒரு கப்பில் கொஞ்சம் தருகிறாயா இதோ வாரேன்..]


ஆகாகா இனி பக்கத்துல போகிற  பஸ்ஸை பாக்குறத்துக்கும் யோசிக்கனுமோ????


[பஸ்ஸில் ஏறினா நிக்கிறவங்களுக்கு அதே காசுதான்! உக்காந்துள்ளவங்களுக்கும் அதேகாசுதான்! அப்ப இனி பாக்குறவங்களுக்கும் கேப்பாங்களோன்னுதேன் அதுவும் டபுல்மடங்கில்]


அதைவிட இனி பதிவுபோடக்கூட யோசியோ யோசின்னு யோசிக்கனுமோ????


பின்ன பில் எலக்டிக் பில் எகிரிடுமாமே அப்ப பதிவுபோட கணினிக்கும் கரண்ட் தேவை அதை ஆப்ரேட் பண்ணுகிற நம்ம கண்ணுக்கு வெளிச்சவேணுமுன்ன ஒரு லைட் தேவை அப்போ டபுள் டிபுளாகிடுமேன்னுதாங்கோ!..
-----------------------------------------------------------------
அடடா எப்படியெல்லாம் சோதனை சுத்தி சுத்தி அடிக்குது
இதெல்லாம் நீ ஊருக்குள் வந்ததால்தானா. அதுசரி..
“ஏண்டிமா மல்லி ஊருக்குள்ள காலெடுத்து வெச்சே நீ துபாயிலே இருந்திருக்ககூடாதா இப்ப பாரு இங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு.”
ஹூம் இன்னும் என்னனமோ நடக்குமோ தெரியலையே!சரி சரி எப்போ போறே!
விஷா ரெடியாச்சா இல்லயா? கெளம்பு கெளம்பு நீ ஊருக்கு வந்திருந்ததுபோதும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பொசு[ங்]க்காதே!


பெண்ணுக்கு பெண்ணே
பேரெதிரியாகுமோ!
பொல்லாத பொறாமையால்
பூமியே புதைந்து போகுமோ!

பொருமைக் கடலென்றும்!
பூமித் தாயென்றும்!
சாந்த சொரூபமென்றும்!
சர்வமே நீயென்றும்!

சொல்லிச் சொல்லியே
சாந்தமான நீ
சர்வதிகாரியாகிறாயோ!-பிறரை
சந்தியில் நிறுத்தப்போகிறாயோ!

வீசுதடி விசக்காற்று-உன்
வார்த்தைகளில் வீரியத்தில்
குத்திக்காட்டல் வழியாக!
குடும்பம் குலைக்கும் கருவியாக!
வழியசென்று வம்பிழுக்கும்
வரைமுறையற்ற பேச்சாக!

உள்ளம் கொல்லும் விசக்காற்று
வளைத்து வளைத்து வீசுதடி!
ஊதலில்லாமல் பரவிப் பரவி
உலகையே அழிக்க நினைக்குதடி!

உன்னிணத்தை எப்போதும்
எண்ணனுமோ எதிரியாக
எண்ணிவிட்டு இருந்திடுமோ
உன்னுள்ளம் அமைதியாக!
பொல்லாத பெண்மையாக
பூமியில் வாழனுமா?
பூவோடு நாரும் சேர்ந்து
பொழுதுக்கும் மணக்கனுமா?

பொசுங்காதே பொறாமையில்
பொசுக்காதே பிறைரை தீயில்...

டிஸ்கி// இதை அப்படியே ஆணினத்துக்கும்[அதாவது ஆண்பாலுக்கும்] மாற்றிக்கொள்ளலாம். 
நாங்களெல்லாம் நல்லபிள்ளைங்கப்பா அப்படியெல்லாம் சொன்னா யாரும் நம்பமாட்டாங்கப்பா ஹா ஹா]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது