வாங்க வந்து தீர்ப்பச்சொல்லுங்க
மாப்புள்ள உடைச்சா அது கைதவறி
பொண்சாதி உடைச்சா அது கொழுப்புளடி!
[அச்சோ பழமொழிகூட வருதே. திகிரேட் டி” மலிக்கா]
அப்படின்னு சொல்லுவாங்க அதேபோல்.
”சரி சரி மேட்டர் என்னான்னு சொல்லு சீக்கிரம் அப்படித்தானே கேக்குறீங்க!
”என்னயிருந்தாலும் எப்படி சொல்லுரரரரரது”.
/ஏன் இந்த இழுவ
”இல்ல இது ஆம்புளைங்களைப்பத்தி இருக்கே அதேன் பயந்து வருது.
அவுகள குத்தம் சொல்லுறமோன்னு ஆளாளுக்கு அனானியா மாறிடுவாங்களோன்னு.
/ச்சேச்சே அப்படியெல்லாம் செய்யமாட்டாங்கா ரொம்பபப நல்லவங்கப்பா”
/சொல்லு சொல்லு மேட்டர் என்ன
”அதுவா? அது இதுதான் படிங்க.’
பையனுக்கு பெண்பார்க்கும்போது. [பணம் நகைக்கு அப்பாற்பட்டு]
நல்லகுடும்பமா?
பெண் நல்லவளா?
நல்ல குணமுடையவளா?
கொஞ்சமாவது அழகுள்ளவளா?
[இப்பவெல்லாம் வெள்ளவெள்ளேர்னுதான் பொண்ணுவேணுமாம்]
அனுசரனையாக நடப்பவளா?
காதல் கீதல் எதிலும் மாட்டாதவளா?
குடும்பத்துக்கு ஏற்றதுபோல் நடப்பாளா?
கட்டுக்கோப்புடன் இருப்பாளா?
எனசகலமும் நோண்டி நொங்கெடுத்து தெரிந்துகொண்டு அதில் சிறுகுறையிருந்துட்டா. [அட இதுதானே. சின்னப்புள்ளையில யார்தான் தப்புபண்ணல இதெல்லாம் ஒரு குத்தமா. அப்படியெல்லாம் எதிர்பார்க்ககூடாது ஓகே] இது நமக்கு சரிவராது சரிவராது வேறுயிடம் பார்ப்போம் என சொல்லிவிடும்போது,,,,,,,,,,
பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது.
பையன் நல்லவனா?
.குணமுடையவனா?
.நல்லமனமுடையவனா?
.வேலையில் இருக்கிறானா?
சம்பாதிக்ககூடியவனா?
குடும்பத்திற்கு ஏற்றவனா?
கருப்பானாலும் [யார்ப்பா அது கருப்ப பத்திமட்டும் ஸ்ஸ்ஸ் மூச்சிவிடக்கூடாது]
எந்த கெட்டபழக்கவழக்கங்களும் இல்லாமலிருக்கா?
என ஒன்றுவிடாமல் ஆராயோ ஆராயின்னு ஆராயப்படுகிறது, அப்போது சின்னவயதில் சிலபல தவறுகள்தான். அது திருமணத்திற்குபின் எல்லாம் சரியாகிவிடும்[சரியாகலைன்னா அதுவிதிவிட்ட வழி அதெயெல்லாம் பத்திப்பேசக்கூடாது] என சொல்கிறார்களே!
அதையும் ஏற்றுக்கொண்டு திருமணம் முடிக்கிறார்களே!
அது சரியா?
இதே சிறுதவறை பெண் சிறுவயதில் அறியாமல் செய்திருந்தால் ஏற்றுக்கொள்வார்களா?
தவறெனும் பட்சத்தில் அது ஆண்செய்திருந்தாலும் பெண்செய்திருந்தாலும் ஒன்றில்லையா?
இல்லை விதிவிலக்கிருக்கா?
திருமணம் ஆனவரானாலும் நோ பழாபழம். ஆகலைனாலும்
நோ பழாபழம். நியாயத்த சொல்லுங்க. இது சும்மா பேச்சிக்காக மட்டும்சொல்லிட்டு போறதில்லைங்க.அல்லாரோட
வாழ்க்கைக்காவும்தான்.
கொஞ்சம் விபரமாக விளக்குனீங்கன்னா இந்த அறியாத பச்சபுள்ளயும்
அல்லாரோடவும் சேந்து அறிஞ்சிகுவ்வேன். [நாட்டாமேங்களா தீர்ப்ப சொல்லுங்க] அதான் மேட்டரு வேரஒன்னுமில்ல நிஜமா வெளிக்குத்து, உள்குத்தெல்லாம் ஒன்னுமில்லங்கங்கோகோ கோ........
[டிஸ்கி: மலிக்கா வித்தியாசமா யோசிக்கிறாங்களாமா.. ஹி ஹி ஹி. ஏதாவது வித்தியாசம் தெரியுதுங்களா?]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
முகமூடி
அன்பென்ற அருமருந்து
அகிலமெங்கும்
அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தும்
அதையள்ளி
அருந்த மறந்து
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுமினம்
பணக்காரனென்றால்
ஒருமுகம்
பாமரனென்றால்
ஒருமுகமென
பிரித்துப் பார்க்கும்
முகமூடி
மனிதகுலத்தையெண்ணி
மனத்துக்குள்
மிரள்கிறேன்
மனிதமிதுவோவென
மலைக்கிறேன்
தேடித் தேடிப்பார்க்கிறேன்
தெளிவான முகங்களையும்
தெளிவான மனங்களையும்
அதிலெது
தெளிவென்றுதான்
இன்றுவரை புரியவில்லை
சிலநேரம்
என்னையும் விளங்கவில்லை
அத்தனை
முகங்களுக்குள்ளும்
மனங்களுக்குள்ளும்
"அன்பும் உண்டு.
ஆணவமும் உண்டு.
"ஆதங்கமும் உண்டு
ஆன்மீகமும் உண்டு.
"ஆற்றாமையும் உண்டு
ஆளுமையும் உண்டு.
"அதிகாரமும் உண்டு
அனுசரணையும் உண்டு.
’ஆதலால்’
எந்த மனிதருக்குள்
எது இருந்தபோதிலும்
பொய்முகங்கள் புணையாமல்
பெயருக்காக பழகாமல்
இருதயத்தின் கூட்டுக்குள்
எள்ளளவும்
பிறருக்கின்னல்தராமல்
மனம் பொருந்திய அன்போடு
மாசில்லா நற்குணத்தோடு
மனிதகுலத்தோடு
முகமூடியணியாத
மனிதர்களாய்
வாழ்ந்திருப்போம்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அகிலமெங்கும்
அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தும்
அதையள்ளி
அருந்த மறந்து
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுமினம்
பணக்காரனென்றால்
ஒருமுகம்
பாமரனென்றால்
ஒருமுகமென
பிரித்துப் பார்க்கும்
முகமூடி
மனிதகுலத்தையெண்ணி
மனத்துக்குள்
மிரள்கிறேன்
மனிதமிதுவோவென
மலைக்கிறேன்
தேடித் தேடிப்பார்க்கிறேன்
தெளிவான முகங்களையும்
தெளிவான மனங்களையும்
அதிலெது
தெளிவென்றுதான்
இன்றுவரை புரியவில்லை
சிலநேரம்
என்னையும் விளங்கவில்லை
அத்தனை
முகங்களுக்குள்ளும்
மனங்களுக்குள்ளும்
"அன்பும் உண்டு.
ஆணவமும் உண்டு.
"ஆதங்கமும் உண்டு
ஆன்மீகமும் உண்டு.
"ஆற்றாமையும் உண்டு
ஆளுமையும் உண்டு.
"அதிகாரமும் உண்டு
அனுசரணையும் உண்டு.
’ஆதலால்’
எந்த மனிதருக்குள்
எது இருந்தபோதிலும்
பொய்முகங்கள் புணையாமல்
பெயருக்காக பழகாமல்
இருதயத்தின் கூட்டுக்குள்
எள்ளளவும்
பிறருக்கின்னல்தராமல்
மனம் பொருந்திய அன்போடு
மாசில்லா நற்குணத்தோடு
மனிதகுலத்தோடு
முகமூடியணியாத
மனிதர்களாய்
வாழ்ந்திருப்போம்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
மனதார மனம்கொடு.
வானவில்லின்
வருகைக்காக காத்திருக்கும்
வானம்போல்,,
வாழ்க்கையின்
வசந்தத்திற்காக காத்திருக்கும்
வாலிபம்!
வரன்கள்
வந்துகொண்டுதான் இருக்கிறது
வந்த இடத்தில்
வயிற்றை நிரப்பிக்கொண்டு,
வயது
போய்கொண்டுதான் இருக்கிறது
வரதட்சணை
கொடுக்க வழியில்லையே என்று!
உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ?
பழமுதிர்
சோலையாகவேண்டிய
பாவையர்களின் நிலை
பாலைவனமாக மாறுமோ?
முதிர்க் கன்னிகளின்
காத்திருப்புக்கு
முடிவேயில்லையா?
முதுகெலும்பில்லாதவருக்கு
கல்யாணம் தேவையா?
கொடுமையான வரதட்சணையைக்
கொன்று போடுங்கள்
கன்னியர்க்கு வாழ்வுதந்து
கண்ணியமாகுங்கள்.
கல்யாணத்தின் கடமையினைக்
கருத்தில் கொள்ளுங்கள்
கணவரென்ற உறவுக்கு
கெளரவம் சேருங்கள்....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
வருகைக்காக காத்திருக்கும்
வானம்போல்,,
வாழ்க்கையின்
வசந்தத்திற்காக காத்திருக்கும்
வாலிபம்!
வரன்கள்
வந்துகொண்டுதான் இருக்கிறது
வந்த இடத்தில்
வயிற்றை நிரப்பிக்கொண்டு,
வயது
போய்கொண்டுதான் இருக்கிறது
வரதட்சணை
கொடுக்க வழியில்லையே என்று!
உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ?
பழமுதிர்
சோலையாகவேண்டிய
பாவையர்களின் நிலை
பாலைவனமாக மாறுமோ?
முதிர்க் கன்னிகளின்
காத்திருப்புக்கு
முடிவேயில்லையா?
முதுகெலும்பில்லாதவருக்கு
கல்யாணம் தேவையா?
கொடுமையான வரதட்சணையைக்
கொன்று போடுங்கள்
கன்னியர்க்கு வாழ்வுதந்து
கண்ணியமாகுங்கள்.
கல்யாணத்தின் கடமையினைக்
கருத்தில் கொள்ளுங்கள்
கணவரென்ற உறவுக்கு
கெளரவம் சேருங்கள்....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

