நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஏன் விடிந்தாய்!


அறியாத வயது
ஆசைகள்
நிறைம்பிய மனது


சிறகுகளில்லாமல்
இறக்கைகட்டிப்
பறந்தது
இரவில்


எப்போது விடியும்
எப்போது
விடியுமென


விடிய விடிய
விழித்திருந்தன
விழிகள்
தந்தையின்
வரவுக்காக


பொழுதும் புலர்ந்தது
விழியும் ஒளிர்ந்தது
வந்தது தந்தையல்ல


தந்தை
தவறிவிட்டாரென்று
துயரத் தந்தி


கதறிக் கதறி
அழுதது கண்கள்
கருமணிகள்
கழண்டு
விழுமளவிற்க்கு


பதறித் துடியாய்
துடித்தது மனது
பொழுது
ஏன் விடிந்ததென்று........




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

வீரம் வென்றது

ஐந்தறிவு ஜீவன்
அரண்டு துடிக்க

ஆறறிவு ஜீவன்
அடக்க நினைக்க

கையிரண்டைக் கொண்டு
கொம்பிரண்டைப் பிடிக்க

கோபம்கொண்டு
கொதித்தெழுந்து
குடல்தனை சரிக்க


குற்றுயிராய் குனங்கி
உயிர்தனை வதைக்க
வீரம் வென்றது
ஐந்தறிவைக் கொண்டு.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

நினைவெல்லாம் நீயே


மெளனமாய்
முகம்பார்த்தேன்

முயல்விழியால்
பதிலளித்தாய்

முத்து முத்தாய்
வேர்த்துவிட்டேன்

முடிவென்ன
கேட்டுவிட்டாய்

முழந்தாளிட்டமர்ந்தேன்
அதில்
முகம்புதைத்து
நிமிர்ந்தேன்

என்னெதிரில்
நீயில்லை

எல்லாமே
என்
நினைவுக்குள்


மீண்டும்
மெளவுனச்
சிறைக்குள்

என்னை
முழுவதுமாய்
மூழ்கடித்தேன்..






அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது