நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

உலகில் உள்ள அனைத்து தமிழ்நெஞ்சங்களுக்கு அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்,










அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்


கலைக்காகவா!


அடி ஓவியப்பெண்ணே
உன்னையும் விட்டுவைக்கவில்லை
இந்த நவநாகரீக உலகம்

ஓவியத்தில்கூட
ஒளிவு மறைவு வேண்டாமென்கிறது
ஒட்டுத்துணி
கலைக்காகத்தானே என்று
கலைந்து எறிப்படுகிறது
கன்னியமான ஆடை

உலகமே
அசந்துபோய் பார்க்கிறது
ஆதாம் ஏவாளின்
அந்தகால ”நிஜமாய்”
இந்தக்கால உருவ
அழகியை

இறைவன் கொடுத்த
அற்புதபெண்ணழகு
கலைகளுக்காக பலவிதத்தில்
காவுகொடுக்கப்படுகிறது
கற்பு என்ற மானமே
காற்றில் பறக்கவிடப்படுகிறது..

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

ஈழத்தின் குரல் ஈனமாய்


இறந்தோம்

இறக்கிறோம்
இறந்துகொண்டே இருக்கிறோம்
இறந்தவர்களுக்கும் எண்ணிக்கையில்லை
இனிஇறப்பது எத்தனையென்பதும் தெரியவில்லை
இறப்பிற்க்குகூட எங்கள்மேல் இரக்கமில்லை
இறுதிநாளுக்குள் இந்தஇறப்புக்கள் நின்றிடுமா?
இல்லை” இந்த இறப்பே எங்கள் ஈழத்ததை தின்றிடுமா?
ஈழத்திலிருந்து பலகுரல் ஈனமாய் ஒலிக்கிறது..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது