நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கொஞ்சம் கேளுங்களேன்



உங்களின்
கட்டிலறை சந்தோஷங்களால்
எங்களுக்கு
கருவறையே கல்லறையானது

”இனியாவது”

கலந்து ஆலோசியுங்கள்
கருகலைப்புகள்
என்ற பெயரில்நாங்கள்
கொல்லப்படாமலாவது
இருப்போம்

உருவமற்ற குழந்தைகளின்
உருக்கமான வேண்டுகோள்




அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

உயிரே உயிரே உருகாதே


மனபாரம் அதிகமாவதால்
மருந்துக்கு பதிலாக
விசமென்று தெரிந்தும்
விதைக்கிறாய்
உன் உதட்டில்


உதடு காய்யும்போதெல்லாம்
நாக்கால்
உமிழ்நீர்கொடுத்து உதவுகிறாய்
அதை
உள்வாங்கிய குழாய்
உள்ளுக்குள் சென்று
உருக்குலைக்கிறது
உன்குடலை

நெருபென்று தெரிந்தும்
கொழுத்திகொள்கிறாய்
குடலை வருத்திக்கொல்கிறாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்துபோகிறாய்
உயிரை இழக்கப்போகிறாய்


உன்வசம் நீனில்லை
எதற்க்கிந்த புகையிலை
புண்பட்ட நெஞ்சிற்கு
தீ,, பந்தம் எதற்கு
இதை உணர்ந்தால்
நீ  என்றும் உனக்கு
இல்லையேல்
விடியாது கிழக்கு

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

புகைவண்டி



கோ ஓஓஒஒஒ என்ற ஓசையுடன்
தன் பரிவாரங்களை
பின்னால் இழுத்துக்கொண்டு

புறப்பட தயாரானது
புகைவண்டி

இருவரிக்கவிதைகளாய்

இணைந்திருந்த
தண்டாவளத்தின்மேல்

தன்நீண்ட இரும்பு உடலை
இழுத்துக்கொண்டு தனக்கு

இணையில்லை
என்பதுபோல்

தன்னை ஆட்டி ஆட்டிச் செல்கிறது

அதன் ஓசைகள்

ஏழு ஸ்வரங்களையும்
ஒன்றாய் இணைத்ததுபோல்

ஒவ்வொரு சமயத்திலும்
ஒவ்வொரு ஓசை எழுப்பியபடி

ஒய்யாரமாய் ஓடும்

அதன் உள்ளுக்குள் அமர்ந்திருக்கும்
அத்தனை பேருக்கும் ஆனந்தத்தில்
ஆழ்த்துவதுபோல் மனம் ஆர்ப்பரிக்கும்


கூட்டமாய் போகும்போது

கும்மாளம் அடிக்க,

காத[லி]லன் கூடபோகும்போது
பார்வைகளை பறிமாறிக்கொள்ள,

கணவருடன் போகும்போது

தோள்களே தூளியாக்க,

தனியாய் போகும்போது
மனதின் நினைவுகளை
அசைபோட்டுக்கொள்ள,

தன்னை சன்னலோரம் சாய்த்தபடி
சந்தித்தவைகளையும் சிந்தித்தவைகளையும்
நினைவுகளுக்குள் நிலைநிறுத்திக்கொள்ள,
புதியவர்களாக இருந்தால்
நட்புகளை பகிர்ந்துகொள்ள
என


அதனுள்

பலவித பரிமாணங்களை
பார்க்கலாம்
ரயில் ஸ்நேகம்

சிலநேரம் நம் ரணங்களுக்கு
மருந்தாகும்
அதுவே சில நேரம்

நம் உணர்வுகளை ரணமாக்கும்


பாலங்களை கடக்கும்போது

தடக் தடக் டடக் டடக்
ஒரு அச்சம் கலந்த இம்சை
அதுவும் ஒருவகையில்

ஆனந்த அவஸ்தை


எதிரே அசையும்

பச்சை புடவையை பார்த்ததும்
ஜிஜிக் ஜிஜிக் ஜிஜிக் ஜிஜிக் ஊஊஉம்

என்ற உருமலோடு
இந்த இரும்பு மனிதனும்

தன் உடலனைத்தைம்
தன் கட்டுக்குள் கொண்டுவந்து

சன்றென்று நிறுத்திடுவான்


எதையோ

விட்டு விட்டுபோவதுபோல்
இதுவரைகூட வந்த
அத்தனை

நிஜங்களையும் நிழல்களையும்
நினைத்தவாறு

நின்ற இடத்திலிருந்து
திரும்பித்திரும்பி பார்த்தபடி போவோம்

இந்த
நிலையில்லா உலகை நினைத்தபடி”

அன்புடன் மலிக்கா


இறைவனை நேசி இன்பம் பெருவாய்


அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது