நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உன்னோடு நான்.

அன்பே!

உனை நினைத்து உருகும்
உன் நினைவோடு இயங்கும்
உனை நினைத்து துடிக்கும்
இதயத்தை கேட்டேன்.
இறைவனிடம்

மறுப்பின்றி
மறுமொழியின்றி
மாண்போடு தந்தான்
மனதிற்கு தாளின்றி.

உனைவிட்டு
ஊர் சென்றபின்னும்
தங்கு தடையின்றி
ஊஞ்சலாடும்
உன் நினைவுவோடு
உலா வருகிறேன்.

உன்னோடும்
உன் நினைவோடும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

 நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

விசித்திர இயந்திரம்.

கண்ணுக்குள் குடிகொண்டு
காணும் காட்சியாவும்
நீயாகிப் போனாய்-எனைவிட்டு
நீங்காமலே

நினைவுகளை சுமந்துக்கொண்டு
நிலாவின் வெளிச்சத்தில்
நித்திரையின்றித் தவித்தேன்

நான்போகும் வழியெங்கும் -உன்
நிழலில் பிம்பம் எனைத்தொடர்ந்து
நீந்திவர
நீயாகவேயானேன் நான்

எனையும் உனையும்
இணைத்தது எதுவென
என்மனதிடம் கேள்விகேட்டால்
எதுகை மோனையோடு
எகத்தாளமாய் பதிலளிக்கிறது

இதுகூட தெரியா ஏமாளியா நீ
கோடையில்லாமல் எரியும்போதும்
வாடையில்லாமல் குளிரும்போதும்
தெரியவில்லையா!
இது அதுதானென

ஆணானப்பட்ட ஆட்களே இதனால்
ஆடிநிற்கும்போது
அடிப்பெண்ணே நீமட்டுமென்ன
விதிவிலக்கா?

விரட்டாமல் மூச்சுவாங்கி
விழாமல் அடிவாங்கி
விளக்கம் தெரியாமல்
விழித்து நிற்கவைக்கும் வினோதம்

அதுதானுனக்கு அவஸ்தையாய்
அதிசயமாய் தெரியும் விசித்திரம்
அதுதான் காதலென்னும்.
அன்பை இயக்கும் இயந்திரம்..

டிஸ்கி//கடல்கடந்து வந்து கானகத்தில் தங்கி மீண்டும் கடல்கடந்து
தாயகம் சென்று திரும்பிவரும்வரையில். கவிதைகள் வந்துகொண்டிருக்கும்.அதற்கு கருத்துக்களென்னும் ஊக்கம் தந்துகொண்டிருங்கள்.
வந்ததும் உற்சாக பதிலளிக்கிறேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

அன்புள்ள தமிழ்நாடே...

இரண்டு வருடங்கள் கழித்து
இளைப்பாற வருகிறேன்
இனிப்பாய் இளநீர் தந்து
இன்பமுறச் செய்வாயென

தங்கத்தமிழ்நாடே உனைக்கான
தகதகக்கும் வெயிலை
துடச்சி எரிஞ்சிவிட்டு
தவிப்பாய் ஓடிவருகிறேன்

தாய் தங்கைகண்டு எனைத்
துரத்தி விளையாண்ட
தோழிகளைக் கண்டு
சுகத்தையும் சோகத்தையும்
பகிர்ந்துவிட்டு

மீண்டும்
பாலைவனம் வந்துசேரவேண்டும்
பட்டினியில்லா சோறுதிங்கவும்
பந்தங்கள் பாசமாய் எங்களோடு
ஒட்டி உறவாடவும்

மீண்டும்
ஓடிவரவேண்டும்
ஓயாது உழைக்கும் என்னவனுக்கு
ஒத்தாசையாக இருக்கவேண்டும்

ஆகையால்

அன்புள்ள தமிழ்நாடே-என்னை
ஆசையாய் வரவேற்று
அன்போடு உபசரித்து
இன்முகத்தோடு திரும்ப அனுப்பிவை

ஏனெனில் நான் என்றுமே
என் தாயகத்தின் திருமகளே....
நீரோடையில் நீந்த மீண்டும் 15 நாள் கழித்து வருவேன் அதுவரை மறந்துவிடாதீங்கப்பா நீங்க மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். மீண்டும் வருவேன் எழுத்தாய். வரியாய். கவிதையாய். கவிதைகள் அப்பப்ப வந்துகொண்டிருக்கும். கருத்துக்கள் எழுதாமல் போய்விடாதீர்கள். அனைத்துக்கும் திரும்பியதும் பதில் தருவேன்.
அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடைபெறுவது

உங்கள்
அன்புடன் மலிக்கா
இறைவனைநேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது