ஆண்பிள்ளைங்களே! உசாரு! உசாரூ!
1-கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும்டும் டும். நிறுத்துங்கடா, சத்தம் வந்த திசையை நோக்கினால்!!!!!!!! எதிரே நம்ம ஹீரோ.உடனே நம்ம ஹீரோயினி மாலையை கழட்டி வீசிட்டு ஸ்லோமோசனில் பறந்து வருவா.
வெளியில் பைக்கோ காரோ நிற்கும் ஏறி பறந்து போயிடுவாங்க
பாவம்! அந்த நிமிசம்வர தன்னோட மனைவியாகப்போகிறவ அவதானென்ற கனவோடு அங்கே காத்திருந்த, உப்புக்கு சப்பானியான மாப்பிள்ளை.
[ என்னங்கடா இது, கொஞ்சங்கூட பேசல, லேசாக்கூட தொடல, பழககூட விடல, இப்படி ஓட்டிட்டாளே என்ன செய்யிறதுன்னு. சாலமன் பாப்பையா போல மனசுக்குளேயே பேசிக்கிட்டு] பேஏஏஏஏஏஏ என்று முழித்துக்கொண்டிருப்பான்.
பேக்ரவுண்ட் பாடல்
”போறாளே பொட்டபுள்ள
என்னக்கூட பார்க்கவில்ல
மாலய கலட்டி இங்க வீசிவிட்டு
கண்ணீரும் கம்பலையுமா
என்னவிட்டு
நானிங்கே நிக்கிறேனே
வெக்கங்கெட்டு”
2-கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும் டும். நிறுத்துங்கப்பா.
சத்தம் வந்த திசையை நோக்கினால் எதிரே நம்ம ஹீரோவின் நண்பனோ, நண்பியோ நிற்பாங்க. அப்படியே அண்ணாந்து பாப்பாங்க ஃபிளாஷ்பேக் ஓடும்.
நம்ம ஹீரோயினி மாலையைக்கூட கிளட்டாமல் கதறி ஓடிவருவாள்.
அங்கே வந்தவங்ககூட அழுதுகொண்டே கிளம்பிடுவாள் திரும்பிக்கூட பாக்காம.
பாவம்! அதே இடத்தில் சமஞ்சபொண்ணுபோல திரு திரு முழிச்சிக்கிட்டு [தலையில் கைவைத்தபடி என்ன கொடுமைங்க ஐய்யரே! இப்படி நாவொருத்தன் குத்துக்கல்லாட்டம் இருக்கேன் என்ன கண்டுக்காம அவபாட்டுக்கு போறாளே என சந்தரமுகி பிரவுபோல், ஐய்யரிடம்கேட்பதுபோல் நினைத்து.] பேக்கோவாட்டம் பேஏஏஏஏஏஏஎ என அமர்ந்திருப்பான் மாப்பிள்ளை.
பேக்ரவுண்ட் பாடல்
”போடிப் போடி புண்ணாக்கு
நீ
போயிட்டா தள்ளிரும்
என்நாக்கு
கிருக்கு எனக்கு புடிக்கும்
நீ இல்லாடித்
தல வெடிக்கும்
போடிப் போடி புண்ணாக்கு
நீ போனாக்க தொடருவேன்
வழக்கு”...
3-கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும் டும். இப்போது சத்தமே இல்லாமல் ஹீரோ வருவார் அவரைக்கண்டதும் பெண்ணின் தந்தை கைகட்டி வாய்பொத்தி ஒதுங்கிடுவார். ஊர்காரங்களே எழுந்து மரியாதை தருவாங்க.
ஹீரோ மணமேடைக்கு எதிரே நின்றதும் ஐயர் தாலியெடுத்து உதவாக்கரை மாப்பிள்ளையிடம் தராமல் எதிரே நிற்கும் ஹீரோவிடம் கொடுப்பார். அம்மணியும் இறங்கி வந்து அழகாய் தாலியை கழுத்தில்வாங்கிட இப்போது மீண்டும் கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும் டும்.
அங்கேயும் அப்பாவி மாப்பிள்ளை அய்யனாருக்கு நேந்துவிட்ட அப்புரானி ஆடுபோல்.[ஸ்சொய்யின் இந்த ரையிங் அயம் ஸ்சொய்யிங் இந்த ரையின் என வடிவேலு பாணியில் மனசுக்குள் சொல்லிக்கொண்டு ]நிற்பான்
பேக்ரவுண்ட் பாடல்
”போகுதே போகுதே
என் பச்சகிளி பறந்துதான்
நானும் இங்கே இருப்பதே
அதுக்குதெரியலையே
என்னப் பாக்கவில்லையே
மறந்துபோகுதே
என்னைய
உதறிப்போகுதே”
இன்னும் நெறய சீன் இருக்குதுங்கோ அதெல்லாம் உங்களுக்கே தெரியும் சாம்பிளுக்கு ஒன்னு ரெண்டு சொல்லிருக்கேன் புரிஞ்சதன்னோ?
இதிலிருந்து என்ன தெரியுது, கல்யாணம் ஆனாலும், ஆகலைன்னாலும்,
ஆகமொத்தத்தில் ஆண்பிள்ளைகளா, லட்சணமா, பெயருக்கு மட்டும் மண்டய மண்டய ஆட்டிக்கிட்டு [உப்புக்கு சப்பானியா. அப்புரானியா. அப்பாவியா. பேக்கோவா.இருங்கோன்னு] இருக்காங்கன்னு தெரியுது.
எத்தன படத்தில பாத்திருப்போம் இப்படியெல்லாம் நடக்குறத்த,
மணமேடை வருகிற வரைக்கும் எதுவும் சொல்லமாட்டாக. அதேபோல கல்யாண காலைல வரைக்கும் காதல சொல்லமாட்டாக. மணமேடையிலத்தேன் சொல்லுவாக, இல்லையின்னா நடுசாமத்துல ஓடிடுவாக.[இதயே இப்போ ஃஃபாலோ பண்ணுறாங்களாம் ஃபாலோவர்ஸ்கன்னு கேள்வி] [அச்சோ நீரோடை ஃபாலோவர்ஸ்கள் அல்லங்கோஅவங்களெல்லாம் ரொம்ப நல்லவங்கோ]
இதுல பாவம் இதபோல அப்பாவி மாப்பிள்ளைகளும், பெத்தவங்களும். இதமாதரி எங்கதான் இருப்பாங்களோ. தலையில துண்டமட்டுந்தேன் போடல, சிலதுகளில் அதுவும் போட்டதா நினைவு.
படமாலூஊஊஉம். நிஜமானாலூஊஊஊம். சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளைதானே? இதல்லாம் ஆருங்க கேட்குறது,,,,,,,,
என்ன நான் சொல்லுரது புரியுதா!!!!!!!!!!!!!!!!!!!!! .
ஏதோ நம்மாளா முடிஞ்சது [பத்தவெச்சிட்டோம்] என்னயிருந்தாலும் மனசு கேக்கல அதேன் இப்படி. சொல்லுரத சொல்லியாச்சி. திருவிழாவுல காணாப்போன புள்ளைகளாட்டம். தர்க்கு புர்க்குன்னு முழிச்சிக்கிட்டு நிக்காமா சட்டுபுட்டுன்னு யோசிங்க.
//இளிச்சவாய்களாக இருந்தா எலிகூட எட்டி ஒதைக்குமாம்...
”எலே அங்கவை”
“என்னங்கம்மணி.
எல்லாத்தையும் அங்கவச்சிட்டியா”
தோ முடிஞ்சிட்டேங்கம்மணி”
”நீங்க”
நான் இங்க பொங்கவச்சிட்டேன் தோ வாரேன்ன்ன்..
[டிஸ்கி.. கவித கதயின்னு போய்கிட்டேயிருக்குதேன்னு நெனச்சி, அதேன் இப்புடி தமாஸ்ல இறங்கிட்டோம். ”அட இது தமாஸா? என்ன கர்மம்டா கடவுளேன்னு! கூட்டத்துல சல சலக்குது..
நம்புங்கோ தமாஸுக்குத்தேன்.
தமாஸா சொன்னாவாச்சிம்??????????????.]
[ஹா ஹா வில்லங்கத்த சொல்லிபுட்ட வெவரமான ஆளுபுள்ள]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
மீண்டும் வேண்டுமோ!!!
சாதிகள்
வேண்டாமடிப் பாப்பா
பாரதியார்
சொல்லிச்சென்ற
பாடம்
சாதிகள்
வேண்டுமடிப் பாப்பா
சாதூர்த்தியங்கள்
சொல்லுகின்ற
சோகம்
சாதி சாதியென்று
போட்டுக்கொண்டான்
சாமர்த்திய
வேலி
சாதிமல்லி
என்று சொல்லி
மலரைக்கூட
பிரித்துவிட்டான்
பாவி
ஆங்காங்கே
முளைக்குது
சாதிகளின்
சங்கம்
சக்கையாக
பிழியப்படுது
தாழ்த்தப்பட்டோரின்
அங்கம்
மனிதம்
மனிதத்தை
இணைத்துக்கொள்ள
மீண்டுமோர்
பாரதியா!
வேண்டும்
பிறப்பு இறப்பு
ஒன்றென்ற
போதும்
மனிதனை
மனிதன்
பிரித்துப் பார்த்தல்
பாவம்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
என்னை வாழ்த்திய நல்ல உள்ளங்கள்
காவியத்திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள்.
நான் எழுதிய மரணிக்கும்போது[சங்கமம் உரைநடைப்போட்டிக்காக நானெழுதிய கவிதை] மற்றும் ”வலி”யென்ற இருகவிதைகளை வாசித்துவிட்டு.
மிகுந்த மகிழ்வோடு அவர்கள் மேடையில் பகிர்ந்துக்கொண்ட பகிர்வு இதோ உங்களிம் பகிர்ந்துகொள்வதில் ஆனந்தம் அடைகிறேன்..
“மகள் மலிக்காவின் கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இக்காலத்தில் யாப்பிலக்கணத்தை கற்றுவிட்டு கவிதைஎழுதுபவர்களுக்குகூட
இதுபோல் எழுதவருவதில்லை. ஆனால் சிலருக்கு வருகிறது. அப்படி வருவது தெய்வம் கொடுத்த வரம்! அப்படித்தான் மலிக்காவின் கவிதைகளும்!
அவர் எனக்கு அறிமுகப்படுத்தபட்டபோது அவ்வளவாக படித்தவராக அறிமுகம் படுத்தப்படவில்லை. ஆனால் அவருடைய கவிதைகளை படித்தபோது அவருக்குள் இருக்கும் ஆளுமையையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடிந்தது.
நான் ஒரு மரபுக்கவிதைக்காரன்! புதுக்கவிதையில் நாட்டமில்லையென்பது அல்ல ஆனால் நான் புதுக்கவிதை செய்வதில்லை. 10,000 மரபுக்கவிதைகளை எழுதியிருக்கிறேன்!
இருந்தாலும்கூட இடையிடையே புதுக்கவிதைகளையும் வாசிப்பதுண்டு
அதில் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன் சிலகவிதைகளில் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். மலிக்காவின் கவிதைத்தொகுப்பை வாசித்தபோது சில கவிதைகளில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன்.
அதன்பின்புதான் அவரை தொலைபேசியில் அழைத்து
“மகளே உன்கவிதைகளை வாசித்தேன். மிக நன்றாக எழுதியிருக்கிறாய்! அதில் சில சில கவிதைகளை செப்பனிடல்கள் செய்தால் நீ ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பை வெளிடலாம் என அவருக்கு ஊக்கம் கொடுத்தேன். இன்று அவரை ஊக்குவிக்க காரணமும் அதுவே என்று நினைக்கிறேன்.
என்ன கவிதையை படித்துவிட்டு இவர் இப்படி சொல்கிறா?ர் என நீங்கள் கேட்கலாம். நான் ஏற்கனவே மரபுக்கவிதைக்காரன் என்று சொல்லிவிட்டேன், அப்படியிருந்தும் அவரின் கவிதைகளில் பலவற்றில் இரண்டுகவிதையை தற்போது வாசிக்கிறேன். கேளுங்கள்...
அதில் ஒன்று “மரணிக்கும்போது” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தகாலத்திலே படித்த பெண்கள் பெண்ணியம் என்ற ஒன்றை பிடித்துக்கொண்டு அலைகிறார்கள். பெண்களெல்லாம் கணவரை மதிக்கக்கூடாது. ஆணுக்கு சரிசமம். ஆணைவிட பெண் உயர்ந்தவள் என்று பேசுகிறார்கள்.
ஆனால்
இங்கே இந்த கவிதையிலே மலிக்கா சொல்லியிருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. இதோ உங்களுக்கும் சொல்கிறேன். கேளுங்கள்.
உனக்காகவே நானென்று
என்னை நீ
உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்
சாந்தி அடையக்கண்டேன்
நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்க
வரம்கேட்டாய்
நமதன்பின் வெளிப்பாடாய்
நம்வாரிசுகளின்
வரம்கேட்டாய்
எத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன
[அதாவது மேற்சொன்ன அத்தனையும் கேட்டதும் கிடைத்தது]
என்னவனே!
எனக்கு
வரமாக கிடைத்தவனே!
எனக்காக
ஒருவரம் இறைவனிடம்
கேட்பாயா?
[தன் கணவனை விழித்து அதாவது நினைத்து அவனிடம் கேட்கிறாள். மேற்சொன்ன அத்தனையும் உனக்காக நீ கேட்டாய், இதைமட்டும் எனக்காகக் கேள். என்கிறாள் இதற்குபிறகுதான் இக்கவிதை உணர்வுப்பூர்வமான கவிதையாக மாறுகிறது கேளுங்கள்.
இங்கே பெண்ணியம் பேசுபவர்கள் இருந்தால் உருகிப்போவார்கள்.
இல்லையென்றால் அதை மறந்தே போவார்கள்.]
என்விழிநீர் உன்னைத்தழுவ
உன் மார்புக்குழிக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...
இது ஒரு நல்ல கவிதையல்லவா?
உன்நெஞ்சில நான் சாஞ்சிருக்கும்போது
இதுபோன்றுதான் எனக்கு மரணம் வரவேனுமென்று விரும்புகிறாள். பூவோடும் பொட்டோடும் போகணும் என்றால் இப்படிதான் போகணும். அதையும் தன் கணவனிடமே சொல்லி இறைவனிடம் கேட்கச்சொல்கிறாள். எவ்வளவு ஒரு நல்ல கவிதை! என்று அவர்கள் பேசியபோது நெஞ்சம் நெகிழ்ந்துபோனேன்...
மகளே!
கவிதை படித்தேன்
களிப்புற்றேன்
நன்றியொடு வாழ்த்துக்கள்
நவின்றேன்.
இன்று
என் தாய்நாடு
ஏகுகின்றேன்
இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடுவான்
மீண்டும் சந்திப்போம்.
--வாப்பா--
அமீரக தமிழ் கவிஞர் பேரவைத்தலைவர். அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகத்தலைவர்.
அவர்கள் என்னை வாழ்த்தி எழுத்திய கவிதை.
இல்லை-துணிவுடன்
அல்லவா சொன்னார்!
இது போதுமே
இல்வாழ்வும்
கவிதையாக!
இவரின்
’இறுமாப்பு’தான்
இவர் துணையை
கவி புனைய
வைத்ததோ?
இறை நாடின்
அந்த நாளும்
விரைவில்
வர வேண்டும்!
கவிதை யாத்தவரே
காவியங்கள் படைக்க
இவர் பாராட்டைப்
பெற்ற
காவியத்திலகமே
இவர் வரிகள்போல்
இவரைப் பாராட்ட
==================
வாழ்த்துக்களுடன்
அப்துல் கதீம்.
அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக
இலக்கிய அணிச் செயலாளர்
கவிஞர் ப. அத்தாவுல்லா. அவர்கள் வாழ்த்தி எழுதியது
அன்பு மகளே,
அன்புடன்
கவிதையை வடித்த அழகு,
அவையினில்
அதனைப் படித்த அழகு,
அன்பைக் கொண்டே
முடித்த அழகு,
அனைத்துமே
எனக்குப் பிடித்த அழகு.
உங்கள் திறமை மேலும் மெருகேற
இறையை இறைஞ்சுகிறேன்...
ஷேக் சிந்தா மதார்..........
கவிஞர் கமால் அவர்களின் வாழ்த்துக்கவிதை
சகோதரி திருமதி மலிக்கா அவர்களே
கவிதாயினி சகோதரி மலிக்கா......
வஞ்சப்புகழ்ச்சி செய்பவர் நடுவே
நெஞ்சப்புகழ்ச்சி செய்பவர் இவர்
இவர் பேனாவும் பேசும்
- இந்தப்
பெண்“நா”வும் பேசும்
பெண் நா நீளமென்பர்
இவர் நாவோ ஆழம்
பேனா மட்டுமே நீளம்
நீல மையால் இவர்
செய்வதெல்லாம்
எழுத்துக் கோலம்
பேதையைக் கவிதை என்பர்
இலக்கியத்தில்
கவிதையே கவிதை
செய்தால் என்னாகும்
இவர் கவிதைகள்
எல்லாம் பொன்னாகும்.
திரைக்குப் பின்னால்
கவிதை வடிப்பார்
முகத்திரை போட்டு
கவிதை படிப்பார்
சமூக அவலங்களை
ஒரு பிடி பிடிப்பார்
பலர் முகத்திரையைக் கிழிப்பார்
– மொத்தத்தில்
எல்லா மேடைகளிலும்
முத்திரையைப் பதிப்பார்
அற்புதமான கவிதை வடித்தீர்
நற்கவிகளை மேலும் படைப்பீர்
என் வாழ்த்துக்களைப் பிடிப்பீர்...
வாழ்க! வளர்க! வாழ்த்துக்களோடு
அன்புடன்
சகோதரர் கமால்.
பத்திரிக்கை ஆசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான சகோதரர்
திருச்சி சையது அவர்கள் எழுதிய வாழ்த்துக்கவிதை
அன்பு நெஞ்சங்கள் எனக்காக எழுதிய கவிகளும், வாழ்த்துக்களும். எனக்கு மிகுந்த மகிழ்வைத்தருகிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். பெரியவர்களின் துஆக்களும். ஆசிகளும். வாழ்த்துக்களும். பாராட்டுக்களும். இன்னும் இன்னும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் துணைபுரியவேண்டும்
இறைவனின் துணையுடன் நல்கவிகளையும். நல்லெண்ணத்துடன் கூடிய நற்செய்திகளை இவ்வுலகிற்கு இன்னும் சிறப்பான படைப்புகளை கொடுக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியவேண்டும்.இங்கு வந்து பார்வையிட்டு கருத்துக்களை தெரிவிக்கும். இன்னும் என் பதிவுகளைபார்த்துச்செல்லும் தாங்களனைவருக்கும். என் உள்ளம் கனிந்த நன்றிகள் பல..தாங்கள் அனைவரின் வாழ்த்துக்களும்.ஊக்கமும், கருத்துக்களும். என்றும் வேண்டும்
என்றென்றும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
நான் எழுதிய மரணிக்கும்போது[சங்கமம் உரைநடைப்போட்டிக்காக நானெழுதிய கவிதை] மற்றும் ”வலி”யென்ற இருகவிதைகளை வாசித்துவிட்டு.
மிகுந்த மகிழ்வோடு அவர்கள் மேடையில் பகிர்ந்துக்கொண்ட பகிர்வு இதோ உங்களிம் பகிர்ந்துகொள்வதில் ஆனந்தம் அடைகிறேன்..
“மகள் மலிக்காவின் கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இக்காலத்தில் யாப்பிலக்கணத்தை கற்றுவிட்டு கவிதைஎழுதுபவர்களுக்குகூட
இதுபோல் எழுதவருவதில்லை. ஆனால் சிலருக்கு வருகிறது. அப்படி வருவது தெய்வம் கொடுத்த வரம்! அப்படித்தான் மலிக்காவின் கவிதைகளும்!
அவர் எனக்கு அறிமுகப்படுத்தபட்டபோது அவ்வளவாக படித்தவராக அறிமுகம் படுத்தப்படவில்லை. ஆனால் அவருடைய கவிதைகளை படித்தபோது அவருக்குள் இருக்கும் ஆளுமையையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடிந்தது.
நான் ஒரு மரபுக்கவிதைக்காரன்! புதுக்கவிதையில் நாட்டமில்லையென்பது அல்ல ஆனால் நான் புதுக்கவிதை செய்வதில்லை. 10,000 மரபுக்கவிதைகளை எழுதியிருக்கிறேன்!
இருந்தாலும்கூட இடையிடையே புதுக்கவிதைகளையும் வாசிப்பதுண்டு
அதில் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன் சிலகவிதைகளில் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். மலிக்காவின் கவிதைத்தொகுப்பை வாசித்தபோது சில கவிதைகளில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன்.
அதன்பின்புதான் அவரை தொலைபேசியில் அழைத்து
“மகளே உன்கவிதைகளை வாசித்தேன். மிக நன்றாக எழுதியிருக்கிறாய்! அதில் சில சில கவிதைகளை செப்பனிடல்கள் செய்தால் நீ ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பை வெளிடலாம் என அவருக்கு ஊக்கம் கொடுத்தேன். இன்று அவரை ஊக்குவிக்க காரணமும் அதுவே என்று நினைக்கிறேன்.
என்ன கவிதையை படித்துவிட்டு இவர் இப்படி சொல்கிறா?ர் என நீங்கள் கேட்கலாம். நான் ஏற்கனவே மரபுக்கவிதைக்காரன் என்று சொல்லிவிட்டேன், அப்படியிருந்தும் அவரின் கவிதைகளில் பலவற்றில் இரண்டுகவிதையை தற்போது வாசிக்கிறேன். கேளுங்கள்...
அதில் ஒன்று “மரணிக்கும்போது” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தகாலத்திலே படித்த பெண்கள் பெண்ணியம் என்ற ஒன்றை பிடித்துக்கொண்டு அலைகிறார்கள். பெண்களெல்லாம் கணவரை மதிக்கக்கூடாது. ஆணுக்கு சரிசமம். ஆணைவிட பெண் உயர்ந்தவள் என்று பேசுகிறார்கள்.
ஆனால்
இங்கே இந்த கவிதையிலே மலிக்கா சொல்லியிருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. இதோ உங்களுக்கும் சொல்கிறேன். கேளுங்கள்.
உனக்காகவே நானென்று
என்னை நீ
உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்
சாந்தி அடையக்கண்டேன்
நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்க
வரம்கேட்டாய்
நமதன்பின் வெளிப்பாடாய்
நம்வாரிசுகளின்
வரம்கேட்டாய்
எத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன
[அதாவது மேற்சொன்ன அத்தனையும் கேட்டதும் கிடைத்தது]
என்னவனே!
எனக்கு
வரமாக கிடைத்தவனே!
எனக்காக
ஒருவரம் இறைவனிடம்
கேட்பாயா?
[தன் கணவனை விழித்து அதாவது நினைத்து அவனிடம் கேட்கிறாள். மேற்சொன்ன அத்தனையும் உனக்காக நீ கேட்டாய், இதைமட்டும் எனக்காகக் கேள். என்கிறாள் இதற்குபிறகுதான் இக்கவிதை உணர்வுப்பூர்வமான கவிதையாக மாறுகிறது கேளுங்கள்.
இங்கே பெண்ணியம் பேசுபவர்கள் இருந்தால் உருகிப்போவார்கள்.
இல்லையென்றால் அதை மறந்தே போவார்கள்.]
என்விழிநீர் உன்னைத்தழுவ
உன் மார்புக்குழிக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...
இது ஒரு நல்ல கவிதையல்லவா?
உன்நெஞ்சில நான் சாஞ்சிருக்கும்போது
இதுபோன்றுதான் எனக்கு மரணம் வரவேனுமென்று விரும்புகிறாள். பூவோடும் பொட்டோடும் போகணும் என்றால் இப்படிதான் போகணும். அதையும் தன் கணவனிடமே சொல்லி இறைவனிடம் கேட்கச்சொல்கிறாள். எவ்வளவு ஒரு நல்ல கவிதை! என்று அவர்கள் பேசியபோது நெஞ்சம் நெகிழ்ந்துபோனேன்...
மகளே!
கவிதை படித்தேன்
களிப்புற்றேன்
நன்றியொடு வாழ்த்துக்கள்
நவின்றேன்.
இன்று
என் தாய்நாடு
ஏகுகின்றேன்
இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடுவான்
மீண்டும் சந்திப்போம்.
--வாப்பா--
அமீரக தமிழ் கவிஞர் பேரவைத்தலைவர். அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகத்தலைவர்.
அவர்கள் என்னை வாழ்த்தி எழுத்திய கவிதை.
அதிகம்
படித்தவரில்லை
என் துணைவி
பணிவுடனா சொன்னார்
பாரூக்?இல்லை-துணிவுடன்
அல்லவா சொன்னார்!
இது போதுமே
இல்வாழ்வும்
கவிதையாக!
இவரின்
’இறுமாப்பு’தான்
இவர் துணையை
கவி புனைய
வைத்ததோ?
இறை நாடின்
அந்த நாளும்
விரைவில்
வர வேண்டும்!
கவிதை யாத்தவரே
காவியங்கள் படைக்க
இவர் பாராட்டைப்
பெற்ற
காவியத்திலகமே
இவர் வரிகள்போல்
இவரைப் பாராட்ட
==================
வாழ்த்துக்களுடன்
அப்துல் கதீம்.
அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக
இலக்கிய அணிச் செயலாளர்
கவிஞர் ப. அத்தாவுல்லா. அவர்கள் வாழ்த்தி எழுதியது
குமுதம் ஆனந்தவிகடன். போன்ற பத்திரிக்கைகளில் 20 வருடங்களாக சிறுகதைகள் எழுதிவரும் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர்
திரு ஷேக் சிந்தா மதார்
அவர்கள் எழுத்திய வாழ்த்துக்கவிதை
அன்பு மகளே,
அன்புடன்
கவிதையை வடித்த அழகு,
அவையினில்
அதனைப் படித்த அழகு,
அன்பைக் கொண்டே
முடித்த அழகு,
அனைத்துமே
எனக்குப் பிடித்த அழகு.
உங்கள் திறமை மேலும் மெருகேற
இறையை இறைஞ்சுகிறேன்...
ஷேக் சிந்தா மதார்..........
கவிஞர் கமால் அவர்களின் வாழ்த்துக்கவிதை
சகோதரி திருமதி மலிக்கா அவர்களே
கவிதாயினி சகோதரி மலிக்கா......
வஞ்சப்புகழ்ச்சி செய்பவர் நடுவே
நெஞ்சப்புகழ்ச்சி செய்பவர் இவர்
இவர் பேனாவும் பேசும்
- இந்தப்
பெண்“நா”வும் பேசும்
பெண் நா நீளமென்பர்
இவர் நாவோ ஆழம்
பேனா மட்டுமே நீளம்
நீல மையால் இவர்
செய்வதெல்லாம்
எழுத்துக் கோலம்
பேதையைக் கவிதை என்பர்
இலக்கியத்தில்
கவிதையே கவிதை
செய்தால் என்னாகும்
இவர் கவிதைகள்
எல்லாம் பொன்னாகும்.
திரைக்குப் பின்னால்
கவிதை வடிப்பார்
முகத்திரை போட்டு
கவிதை படிப்பார்
சமூக அவலங்களை
ஒரு பிடி பிடிப்பார்
பலர் முகத்திரையைக் கிழிப்பார்
– மொத்தத்தில்
எல்லா மேடைகளிலும்
முத்திரையைப் பதிப்பார்
அற்புதமான கவிதை வடித்தீர்
நற்கவிகளை மேலும் படைப்பீர்
என் வாழ்த்துக்களைப் பிடிப்பீர்...
வாழ்க! வளர்க! வாழ்த்துக்களோடு
அன்புடன்
சகோதரர் கமால்.
பத்திரிக்கை ஆசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான சகோதரர்
திருச்சி சையது அவர்கள் எழுதிய வாழ்த்துக்கவிதை
அன்புத்தங்கையே
அழகிய நடையில் கவிதை
அதை கோர்க்கும் வரிகள் அருமை
தெளிவுடன் எழுதும் திறமை
அதை செயல்படுத்தும்
முறையும் அருமை
நலமுடன் அனைத்தும் பெற்று
நானிலம் போற்றிட வாழ்வீர்
நல்கவியினை உலகுக்குத்தந்து
நற்பண்புடன் சிறந்து வளர்வீர்.
அன்புடன் அண்ணன்
சையது முஸ்தபா
அன்பு நெஞ்சங்கள் எனக்காக எழுதிய கவிகளும், வாழ்த்துக்களும். எனக்கு மிகுந்த மகிழ்வைத்தருகிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். பெரியவர்களின் துஆக்களும். ஆசிகளும். வாழ்த்துக்களும். பாராட்டுக்களும். இன்னும் இன்னும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் துணைபுரியவேண்டும்
இறைவனின் துணையுடன் நல்கவிகளையும். நல்லெண்ணத்துடன் கூடிய நற்செய்திகளை இவ்வுலகிற்கு இன்னும் சிறப்பான படைப்புகளை கொடுக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியவேண்டும்.இங்கு வந்து பார்வையிட்டு கருத்துக்களை தெரிவிக்கும். இன்னும் என் பதிவுகளைபார்த்துச்செல்லும் தாங்களனைவருக்கும். என் உள்ளம் கனிந்த நன்றிகள் பல..தாங்கள் அனைவரின் வாழ்த்துக்களும்.ஊக்கமும், கருத்துக்களும். என்றும் வேண்டும்
என்றென்றும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






