நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மானே தேனே மயிலே


மானே,,,,,,, மலைத்தேனே-- உனைக்கண்டு மலைத்தேனே
எனைநானும் மறந்தேனே

மலைத்தேன் சொட்டச் சொட்ட
மலர்கள் கொட்டக் கொட்ட
மூச்சுக்காற்று முட்ட முட்ட
மனசுக்குள் வந்ததென்ன

கண்ணாம்பூச்சி ஆட்டத்தில
கண்ணிரெண்டும் கட்டிவிட்டு
கண்ணெதிரே நின்றுகொண்டு
கண்ணிமைக்காமல் ரசித்தென்ன

பஞ்சியில் நெருப்பாகி
பற்றிக்கொண்டு எறிந்ததென்னெ
நெருப்புக்குள் நீராகி
நெஞ்சிக்குள் நின்றதென்ன

தேனே,,,,,,,, திகைத்தேனே- தினம் தினம் தொடர்ந்தேனே
உனைநானும் நினைத்தேனே

உள்ளத்துக்குள் நீயும் துள்ள -உன்
மெளனம் என்னைக்கொல்ல
எனையே நான் மறந்து
மரம்போல் நின்றதென்ன

மெல்லிய காற்றாகி
மேனியில் படர்ந்ததென்ன
வண்டுக்குள் பூவாகி
என்னை நீ வதைத்ததென்ன

ஆழ்மனம் ஆர்பரித்து அதில்
ஆசைகள் கூத்தடிக்க
அடிநெஞ்சை தொட்டு தொட்டு
அடி அத்தனையும் கோர்த்ததென்ன


மயிலே,,,,, மறுக்காதே-- எனை நீயும் மறக்காதே
உனை நீயே மறைக்காதே...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

உலகில் உள்ள அனைத்து தமிழ்நெஞ்சங்களுக்கு அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்,










அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்


கலைக்காகவா!


அடி ஓவியப்பெண்ணே
உன்னையும் விட்டுவைக்கவில்லை
இந்த நவநாகரீக உலகம்

ஓவியத்தில்கூட
ஒளிவு மறைவு வேண்டாமென்கிறது
ஒட்டுத்துணி
கலைக்காகத்தானே என்று
கலைந்து எறிப்படுகிறது
கன்னியமான ஆடை

உலகமே
அசந்துபோய் பார்க்கிறது
ஆதாம் ஏவாளின்
அந்தகால ”நிஜமாய்”
இந்தக்கால உருவ
அழகியை

இறைவன் கொடுத்த
அற்புதபெண்ணழகு
கலைகளுக்காக பலவிதத்தில்
காவுகொடுக்கப்படுகிறது
கற்பு என்ற மானமே
காற்றில் பறக்கவிடப்படுகிறது..

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது