நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
உணர்வுக்கவிதைகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணர்வுக்கவிதைகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தகுதியற்ற தார்மீகம்!



நேசிக்கத்தான் நினைக்கிறது
ஆனால்
நிலைதவறிய தந்தையை
நேசிப்பதற்கே தெரியாமல்!

அன்பு பாராட்டத்தான் துடிக்கிறது
ஆனால்
அரவணைக்க தகுதியற்ற தந்தையை
அன்புகொள்ளவே முடியாமல்!

உறவென சொல்லதான் தவிக்கிறது
ஆனால்
வெறுத்தொதிக்கி சென்ற தந்தையை
உறவுக்கொள்ள மனம் ஏற்காமல்!

தார்மீக பொறுப்பற்று
கட்டியவளை தண்டிப்பதாயெண்ணி
பெற்ற குழந்தைகளையும் தண்டிப்போருக்கு
தந்தையர்களென்ற
மகத்துவத்துக்கு தகுதியில்லை!

குழந்தைகளின் மனங்களை
கொலைசெய்துவிட்டு              
குடும்பத் தலைவனென
கொக்கரிக்கும் சில தறுதலை[தந்தை]கள்!

கோடாரியாய் தான்மாறி
குடும்பவேரை சாய்த்துவிட்டு
தான்மட்டும் நிம்மதிதேடும்
தன்னலவாத பச்சோந்திகள்

இல்லையில்லை
மனக்கொலைகள் புரிந்துகொண்டு
மகத்தானாவனென சொல்லித்திரியும்
மன்னிக்கமுடியா தீவிரவாதிகள்....


டிஸ்கி// இது கவிதையல்ல, திருமணமணமுடித்து,கருகொடுத்து உருவந்தபின், கனவுகள் கலைந்ததுபோல் காணாமல் போகும், சிலது கூடயிருந்தே பிரயோசனமற்று வாழும்,  தறுதலை[தந்தை]களின் உண்மைநிலை!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பிரிவின் துயர் [2]


விரல்கள் பிரித்து
விடைபெறும் பொழுது
விழிகள் நான்கும்
விபத்துக்குள்ளாகியது!

நெற்றி முகர்ந்து
உனக்குள் வலிப்பதை
எனது உதடும்!

எனக்குள் வலிப்பதை
உனது உயிரும் 
உணர்ந்து துடித்தது!

நீ அழுதிடக்கூடாதென நானும்
நான் அழுதிடக்கூடாதென நீயும்
நமது மனதுக்குள் பிரத்தானை!

கண்ணீர்களை மறைக்க - நமது
கன்னங்கள் அணிந்தது
பொய் புன்னகைகளை!

தொலைதூரம் போனபின்பும்
திரும்பி பார்த்தலை
எதிர்நோக்கிய - நமது
நிலைகொள்ளாப் பார்வைகள்!

பிரிவின் துயர்களை
தாங்கிக்கொள்ள முடியாமல்
பரிதவிக்கும் உனது முகம்!

தாங்கிக் கொண்டதாய்
பாசாங்குகாட்டி
பதபதைக்கும் எனது மனம்!

பிரிவுகள் நமதுறவை
பலப்படுத்தும் என்ற நம்பிக்கையில்
பிரியாவிடைகள்
பிரிவின் துயர்தாங்கி!...

பிரிவின் துயர் 1

 

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தூர்வாரச்சொல்லி.



விழிகள் துயில்கொள்ளும்நேரம்
வான்[நிலா]விளக்கு துயிலெழும்பி
இருளுறக்கத்தைக்  களைத்து
விளையாட அழைக்க

ஆர்ப்பரிக்கும் அலைகடல்
அலைகளற்று அமைதியாயிருந்தபடி
ஆசுவாசப்படுத்திக்கொண்டே
நுரைத்து நுரைத்து கரையைத் தடவ

நிலவும்  இருளும்
கலந்தன
கடலும்  நிலவும்
மிதந்தன

தூங்காமல் தவிக்கும் உணர்வுகளோ 
தூந்துக் கிடக்கும் மனக்கிடங்கை
தூர்வாரியிறைக்கச்சொல்லி
தவித்தன

 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் .

”ப்பூ”




நிலவுமில்லாமல் ஒளியுமில்லாமல்
இருள் இரவை கவ்விக்கொண்டிருந்த நேரம்
நடுநிசியில் நாயொன்று ஊலையிட
நெடுநெடுயென வளர்ந்திருந்த
தென்னை கீற்றுக்கிடையிலிருந்த
தேவாங்குகள் திருத்திருவென விழித்திருக்க

ஊரடங்கிடந்த வேளையில்
உரத்த குரலெழுப்பி
உளறத் தொடங்கியபடியே
ஊரை வலம் வந்தது ஒரு உருவம்

கேட்பாரற்று பார்ப்பாற்று கிடக்கிறேன்
கேடுகெட்ட இம்மனிதர்களுக்கிடையில்
நாதியற்று நான் தங்கிட வீடற்று
நடுவீதிகளில்  நிற்க்கிறேன்

கந்தல் துணி அணிந்ததினால்
காரித் துப்பப்படுகிறேன்
நாலுகாசு இல்லையென்று
நாயைபோல நடத்தப்படுகிறேன்.

வேடிக்கையான உலகினிலே-பல
வேடிக்கைகள் காண்கிறேன்
வேசம் கண்டும் மோசம் கண்டும்
வெடுக்குச் சிரிப்பு சிரிக்கிறேன்

வேசிகளும் தாசிகளும்
வீட்டுத் தலைவியாக
வேசம் கட்டி நடிக்கிறார்
ஊரையடிச்சி உலையில்போட்டு
வட்டியோடும் குட்டியோடும்
வீட்டுதலைவனென்று  நடக்கிறார்

நாலுகாசு கையிலிருந்தா
நாயைக்கூட மதிகிறார்
நாறிப்போன மனிதரெனத்தெரிந்தும்
நட்புகொண்டு  அலைகிறார்

உள்ளே அழுக்கு வெளியே மினுக்கி
உலகிற்காக வாழ்கிறார்
நாளும் வேசம் பொழுதும் மோசம்
நாணிக்கோனி நடிக்கிறார்

வீதியிலிருக்கும் என்னைப்பார்த்து
விதியே வேதனையே என்கிறார்
வீட்டுக்குள்ளே இருந்தபோதும்
வீட்டுக்கு விலக்காய் கிடக்கிறார்

புத்தி சரி யில்லையென்று
என்னைக் கண்டு
பயந்து விலகி போகிறார்

பாவம் புரியவில்லை
புத்தியே அவருக்கில்லையென்பதை
புரிந்துகொள்ள மறுகிறார்
இந்த பூமி உருண்டை என்பதை மறக்கிறார்

“ப்பூ”

இந்த வாழ்க்கை
போலியென்பதையும் உணராது தவிக்கிறார்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.  .

உணர்ந்துபார்!



உனக்குள் இருப்பதென்ன!
உன்னையே கேள்விகேட்க
உனக்கே தயக்கமென்ன!

உணர்ந்துபார்!
சந்தோஷங்களை
சந்தேகங்களுக்கு இறையாக்குவதை!

உணர்ந்துபார்!
உயிர்க் காதலை
உடல்காமத்திற்க்கு பலியாக்குவதை!

உணர்ந்துபார்!
உயர்ந்த நட்பை
உப்புசப்புக்காக ஒதுக்குவதை!

உணர்ந்துபார்
உன்னத உறவை
உதாசீனப்படுத்தி உதறுவதை!

உணர்ந்துபார்!
ஒப்பற்ற உதவிகளை
உணராது இருப்பவைகளை!

உணர்ந்துபார்!
ஒன்றுமில்லாதவைகளுக்கெல்லாம்
ஒரேடியாக அலட்டிகொள்வதை!


உணர்ந்துபார்!
வறட்டு கெளரவத்திற்கு
வாழ்வை தொலைப்பதை!

உணர்ந்துபார்!
பிறரை வசைபாடியே
பொழுதுக்கும் வம்பளப்பதை!

உணர்ந்துபார்!
விட்டுகொடுக்க முடியாமல்
வெட்டிக்கொண்டேபோவதை!

உணர்ந்துபார்!
கேவலம் பாராது
கேலிக்கூத்து ஆடுவதை!

உணர்ந்துபார்!
தனது அகத்தை உணராது
பிறர் முகத்தை பழிப்பதை!

உணர்ந்துபார்!
இன்னெதென்றே அறியாது
எப்படியோ வாழ்வதை!

உணர்ந்துபார்!
ஒழுக்கமில்லாது
புழுக்கையாய் அலைக்கழிவதை!


உணர்ந்துபார்!
ஒவ்வொரு நொடியும்
ஓய்வின்றி நகர்வதை!

உணர்ந்து சரிபார்!
உன்னைத் திருத்திக்கொள்ள
உன்னுள்ளத்தில் தயக்கமென்ன!


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தனிமை

 


தவிக்கவைக்கும் நினைவுகள்
தவிடுபொடியாகி
தகிடுதத்தோம் பாடியபடி
தலைகீழாய் தொங்கும் வவ்வாலானது!

உயிரின் நிலவறைக்குள் ஒருவித
உணர்ச்சிகளின் தாக்கம்
நிலை[ல]நடுக்கம் கண்டதுபோல்
நிலவறை நிலைதடுமாறியது!

நாவறண்டு உதடு
உமிழ்நீரைத் தடவியது
நீருண்ட மயக்கத்தில்
நீண்டது நிலவொளியில் இரவு!

நிம்மதி நாடிய நெஞ்சுக்குள்
நீட்டி முழங்கிய மெளனம் மட்டும்
நிம்மதியாய்
நித்திரைகொண்டது

நெஞ்சம்மட்டுமேனோ!
நித்திரையை தொலைத்து
நெடுநேரம் கண்விழித்திருந்து
கானல் உண்டது!..



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மெளனத்தின் வெளிப்பாடு..


உள்ளத்தின் ஆழத்தில்
ஓராயிரம் சொற்கள்
ஒளிந்து கிடக்கின்றன
ஒன்றுமறியாத உதடு
ஊமைக்குருவியாகி
மெளனித்துக்கிடந்தும்
முணுமுணுத்துவிடுகிறது

அர்த்த ஜாமத்தில்
அனைத்துமே
அடங்கிக் கிடக்கும்போது
அலறத்துடிக்கிறது மெளனம்
ஆனபோதும்
அர்த்தங்களற்ற செயல்களாகி
அமைதி காத்துகிடக்கிறது
ஆழ்மனதின் அர்த்தமறிந்து

பலநேர மெளனம்
பலனைத் தருமென்றும்
சிலநேர மெளனம்
சிக்கலைத் தருமென்றும்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அனுதினமும்..

                                                                                  கிளிக்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

”கல்”லாப்பெட்டி


நான்தான் கல்லாப் பெட்டி
நானில்லாமல் இதோ இந்த
எதிர்பெட்டிகளெல்லாம் காலிப்பெட்டி
எல்லாருக்கும் என் தயவுவேண்டும்
இன்னும் சொல்லபோனால்
என் தயவில்லாத 

வியாபாரமேயில்லை நாளும்

கோடிகள்முதல் தெருக்கோடிகள்வரை 
சுருக்குப்பை தொடங்கி 

இரும்புப் பெட்டிவரை
விதவித கோணங்களில் 

பலபல வகைகளில்
வசதிக்கேற்ப வீற்றிருப்பேன் 

என்னை உருவாக்கியவன் மனிதன்தான்
அவன் மனதிற்கேற்ப 

நான் திறந்து மூடப்படுவேன்
என்மேல் வந்துவிழும் சில்லரையும்
அதன்மேல்வந்துவிழும் 

காகிதங்களில் மட்டும்தான்
என் காதலும் என் கவனிப்பும்

ஏற்றமுள்ள மனதிடம் நானிருந்தால்
இயன்றளவு நிரம்பி வழிவேன்
மனிதனாயிருந்தும் 

மரத்துபோனவனிடம் நானிருந்தால்
என்னை நிரப்புவதே சிரமம் -அடிக்கடி
என்னை  திறக்கப்படாமல் 

திணறியும் போவேன்

கல்லாப் பெட்டி என்று சொல்லியே
”கல்”லாக்கி விட்டார்களோ என்னை
கல்லுக்கு ஏது உணர்வு
கல்லுக்கு ஏது கசிவு

உணர்வற்றவையின் மதிப்பைமட்டுமே 

எனக்கு உணர்த்தப்பட்டதால்-அது
உழைத்து வருகிறதா? 
ஊரையடித்து வருகிறதா?
என்றெல்லாம் நான் உணர்வதில்லை
அது நல்லபணமா? அல்லது கள்ளப்பணமா?
அதுவும் எனக்குத் தெரிவதில்லை!

நான் திறக்கப்படும்போதெல்லாம்
என்னுள் போடப்படும் 

சில்லரைகளின் சப்தத்தில்
சிலிர்த்து போவேனாயென்றால் 

அதுவுமில்லை
சிரித்து மகிழ்வேனென்றால் 

அதுவும்கூட இல்லை

என்னிடம் வரும் காதிதங்களில் பல
கசங்கியும், கசிந்தும் வந்துவிழும் -அது
கண்ணீரால் கசங்கியதா?

செந்நீரால் கசிந்ததாயென
ஏதும் அறியேன்   

ஏனெனில் ’கல்’ லா நான்

என்றாலும் நான்தான் 

முதலாளி வர்க்கம்
என்னோடு யாரும் 

செய்யமாட்டார்கள் தர்க்கம்

கல்லா[வா]க நானிருந்து
இருப்போரின் இரும்புப் பெட்டியாய்
இதயம் நொறுங்குகிறேன்
இல்லாதோரின் சுருக்குப் பையாய்
இன்பம் காண்கிறேன்

எப்படியாகிலும் ஏதோ ஒருவகையில்
எல்லோருக்கும் உதவிசெய்கிறேன்
’கல்’லாவாக இருந்து
கண்ணியமாய்
என்னை காத்துக்கொள்கிறேன்...




என்ன ”கல்”லாவாகிவிட்டேன் என பார்கிறீர்களா? இந்த கவிதை சங்கமம் டீவியில் கவிராத்திரிக்காக எழுதியது. நான்குபேர்கொண்ட குழுவாக எனக்கு தரப்பட்ட தலைப்பு கல்லாப்பெட்டி. தலைப்பு கொடுத்த மதியமே எழுதிய கவிதையிது. மற்றவர்களுக்கு கொடுத்த தலைப்புகள். அஞ்சரைப்பெட்டி. வாக்குப்பெட்டி. சவப்பெட்டி. இரு ஆண்கள் இருபெண்கள் என தேர்வுகள். கடைசியில் ஒரு பெண் வரயியலாச்சூழல், அதனால்ஆண்களுக்கு மத்தியில் நான் தனித்து  சென்று கவிபாட விருப்பமில்லாததால் போகவில்லை.சூழலை தெரிவித்துக்கொண்டேன்..  அக்கவிராத்திரி நிகழ்ச்சி  இரண்டு நாள்களுக்கு முன் துபை டைம் இரவு 10,மணிக்கு தமிழன் டீவியில் ஒளிப்பரப்பானதாம்.நான்கு ஆண்கவிகளோடு.[அதையும் பார்க்கமுடியவில்லை]  நிகழ்ச்சியில் சென்றுதான் கலந்துகொள்ளயியலவில்லை இதோ இங்க நீந்தவிடுவோமுன்னு ”கல்”லையே ஓடையில் நீந்தவிட்டாச்சி.. எப்புடி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சுயநலப் பார்வையில்..



ல்லவர்கள் போர்வையில்
தீயவர்களின் ஆட்டம்
நல்லவைகளைக் கூட
கெட்டவைகளாக்கும்

சுயநலத்தின் பார்வையில்
வசதியுள்ளோரின் நட்பு
தூய்மையின் சின்னம்
வசதியற்றோரின் நட்பு
அசிங்கத்தின் அங்கம்
தாயிமைக்கு ஈடாகும் நட்பையும்
தரம் பிரித்து தவறாக்கிப் பேசும்

துன்பப்படும்போது என்னெவென்று
கேட்காத உறவுகள்
தோள்கொடுப்போரையும் சேர்த்து
தூற்றிப் பேசும்போது
உள்ளம் உருத்தாத சுயநலவா[வியா]திகள்

கெட்டவர்களெல்லாம்
நல்லவர்களாகிறார்கள்
இது நாகரிக காலத்தின் சாபம்
நல்லவர்கள்கூட
கெட்டவர்களாக்கப் படுகிறார்கள்
இதுதான் நல்லவர்களுக்கு
கிடைக்கப்படும் லாபம்

டைத்தவனுக்கு பயந்தவர்
கைவிடப்படுவதில்லை
படைப்பினங்களுக்கு பயப்படவேண்டிய
கட்டாயமில்லை

தூற்றியவர்கள் ஒருநாள்
போற்றும் பொற்காலம் வரும்
அப்போது
தூற்றியது மன்னிக்கபடும்
ஆனால் மறக்கப்படுவதில்லை...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பிரிவின் துயர்!

  

டிவயிற்றில் 
அமிலம் சுரக்கும் உணர்வு!
நெஞ்சுப் பகுதிக்குள்
நிலநடுக்கம் வந்த அதிர்வு!
 தொண்டைகுழியில்
துளிநீரின்றி துவழும் தவிப்பு!

லைகள்     
கிளைகளைவிட்டு உதிர்வதுபோல்
இதயத்தை விட்டு 
ஏதோ நழுவதுபோன்றொரு துடிப்பு!

 டந்தவைகள் அனைத்தும்
 நினைவுகளாகி துயர் தருதே
 இதுதான் பிரிவின் வலியா!
 இதயமது 
இல்லாதது போலாகுதே!
இதுதான் பிரிவின் துயரா!
   
 பூக்களின் வாசத்தை 
நுகரும் நெஞ்சம்
 சிறு முள்குத்தலில் துடிப்பதுபோல்  
பாசத்தின் பிடிப்பை
 பற்றிக்கொள்ளும் மனம்
சிறு பிரிவில்கூட துடிக்கிறதே! 
     
வாழ்க்கையில் பல பிரிவு 
சில பிரிவு சிலாகிக்கிறது
சில பிரிவு சிக்கலாக்கிறது
சில பிரிவு சிந்திக்க வைக்கிறது
 சில பிரிவு கண்ணீர் சிந்த வைக்கிறது

பிரிவுகளின் பட்டில் 
பல வகையிருந்தாலும்                                       
அதன் வலிகளின் ரணங்கள்
ஆழ்மனதை
காயப்படுத்தாமல் இருப்பதேயில்லை!

தனால்தான் என்னவோ                                    
எந்நிலையிலும் எப்பிரிவையும்
எந்த உள்ளமும்                                       
ஏற்க விரும்புவதேயில்லை!...

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பட்டாம்பூச்சியின் தேடல்..




ட்டுச் சிறகை விரித்து
படபடக்கும் பட்டாம்பூச்சி
பறக்கும் வழியெங்கும்
பதபதைப்போடு தேடுவதை
பார்த்தபடி நின்றேன்

ண்ணெதிரே பறந்த பட்டாம்பூச்சி
களைத்து கிளையில்
என்னெதிரில் அமர்கையில்
கைவிரல் தொட்டு மெல்லவருடி
கண்ஜாடையில் கேட்டேன்
எதை தொலைத்து தேடுகிறாயென!

ளைத்த போதிலும்
சலைக்காமல் சொன்னது
மனிதமுள்ள மனதையும்
மனநோய்யில்லா மனிதரையும்-இம்
மண்ணில் தேடுகிறேனென்று!

ருடிய விரல்
வெடுக்கென வலித்தது
களைப்பு நீங்கிய பட்டாம்பூச்சி
கண்ணடித்து காற்றில் மிதந்தது
கைவிரல்வழியே  இதயமும் கனத்தது..


அமீரக தமிழ்தேர் மாத இதழுக்காக எழுதியது..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

நிறைவேறா ஆசை!.


மூடிய விழிகளுக்குள்
மழையில் நனையாதிருக்க
முந்தானைக் குடைப்பிடித்தாள்
அன்னை
நனையாத போதும்
விழிகள் வடித்த
கண்ணீரில் நனைந்தது
அனாதை தேகம்
கனவில் தோன்றிய
காட்சிகள்
கண்திறந்து பார்க்கையில்
காணாது போகவே..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
.

கண்ணீரால்...


ருவமில்லாச் சோகம்
உள்ளத்தின் வழியே உதிரத்தில்
ஊடுருவிச் சென்று -நிம்மதியை
உதிர்க்கப் பார்த்து

வாடி உதிரும் வருத்தம்
வகை வகையாய்
வரிசைப் படுத்தி
வஞ்சையில்லாமல் வதைத்து

ரறியா மனஉளைச்சல்
உள்ளுக்குள் உருகியோடி
உடலை வாட்டி
உயிரை உலரவிட்டு உதிர்த்து

ன்னம்பிக்கையை தளரச்செய்ய
தாரை தாரையாய் –தாடையைத்
தடவி தவிக்க வைத்து

சொட்டு சொட்டாய்
பட்டுக் கன்னம் வழியே
உதட்டை உரசிசென்று
உப்புக் கரிப்பால்
உள்ளத்தை சிதைக்கப் பார்த்து

சியும் மவுனமாய்
கரையும் கண்ணீர்-மன
கஷ்டத்தை கடைந்தெடுத்து- பின்
மெல்ல மெல்ல மனதை தேற்ற
கரைந்த கண்ணீரே ஆறுதலும் தருகிறது..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அடைக்காதே! அடையாதே!


கிளிக் கிளிக்

அப்புறம் ஒருசந்தோஷ செய்தி
வேண்டுகோள் விடுக்கிறது.என்ற என்கவிதை முதல் சுற்றில் தேர்வாகி இரண்டாம் கட்டதேர்வுக்கு செல்கிறது. என்கவிதைக்கான ஓட்டுகளையும் கருத்துகளையும் அளித்து முதல் சுற்றில் தேர்வாக்கியதுபோல் மற்ற இரண்டு சுற்றிலும் தேர்வாக்க தாங்களின் ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது