நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஒலிவடிவில் என்கவிதைகள் [இணைய தமிழ் ரேடியோவில்]

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

உங்கள் அனைவருக்கும் தெரிந்ததிருக்கும் என் முதல் கவிதைதொகுப்பான ”உணர்வுகளின் ஓசை” வெளியானது. அது வெளியானதிற்கு பின்பு கற்றறிந்தவர்களும். கவிமேதைகளும். நல்லுள்ளம் நிறைந்தவர்களும். என்னை வாழ்த்தியும், என் எழுத்துக்களைபற்றி பாராட்டியும் நிறைய மெயில்வழி கடிதங்கள் வந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த மகிழ்ச்சியும் புகழும் இறைவன் ஒருவனையே சேரும்.

அப்படி வந்த மெயிலில்  சந்தோஷசெய்தியையும் சுமந்துவந்த மெயில்தான். சாத்தாங்குளம்  பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்.மற்றும். திரு.அப்துல் ஜப்பார் அவர்களிடமிருந்து வந்த அந்த மெயிலைகண்டதும் மனம் சந்தோஷபட்டதுடன் உடனே சஜதாவிலும் விழுந்தேன் இறைவனுக்கு நன்றி சொல்லி,

இறைவன் தந்த இந்த உலகவாழ்க்கையில். மனம் நிறைந்த மணவாழ்க்கை, முத்தான குழந்தைகள். பாசம் மிகுந்த குடும்பத்தார்கள். என எல்லாத்தையும் தந்த இறைவன். எனக்குள் எழும் எண்ணங்களுக்கும் மதிப்பளித்து அதையும் உலகறிசெய்ய வாய்ப்பளித்துள்ளானே இதைவிட ஒரு பெண்ணுக்கு என்ன வேண்டும் நிறைவு. இப்படி ஒரு நிறைவான வாழ்க்கையைதந்த இறைவனை அனுதினமும்   நேசிப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

 ”அப்படி என்ன எழுதியிருந்தார்கள்  என்று கேட்கிறீர்களா?” இதோ அவர்கள் எழுதிய அன்பான  கடிதத்தலிருந்து சிலவற்றை  இங்கே உங்கள் பார்வைக்கு

அன்புள்ள ‘பேத்தி’
அஸ்ஸலாமு அலைக்கும்,
.உங்களின் படைப்பான “ உணர்வுகளின் ஓசை” என் கைகளில் கிடைத்தது.
நேற்று உங்கள் நூலை வாசித்தேன். பாசாங்குகள் இல்லாத பாணி. எளிய-இனியநடை. சொல்லும் முறையில் ஒரு துல்லியம். உணர்வுகளின் வெளிப்பாட்டில் ஓர் அடர்த்தி.அதன் வடிவமைப்பில் ஒரு நேர்த்தி. புலம் பெயர்ந்தும் - கட்டுப்பாடுகள் கொண்ட சூழலில் வாழும் என் இனப் பெண் ஒருத்தி இவ்வளவு கெட்டிக்காரியா...?-----வியந்து போனேன். One time wonder - ஆக நின்று விடாமல் இனியும் பல நல்ல படைப்புகளைத் தரவேண்டும் என்பது என்னுடைய ஆசை - ஆசி. வாழ்க....வளர்க...தொடர்க...!

இன்ஷா அல்லாஹ் நான் தாயகம் திரும்பியதும் உங்களின் சில கவிதைகளை தேர்ந்தெடுத்து ஒலிபரப்புச் செய்ய எண்ணியுள்ளேன். உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பையும் சலாத்தையும் தெரிவியுங்கள்.
வஸ்ஸலாம். ஹுதா ஹஃபிஸ் -
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

அவர்கள் சொன்னதுபோல் இதோ இன்று என் கவிதை தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள் http://worldtamilnews.com/ இணைதளத்தில்,
திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் கம்பீரக்குரலால் வாசிக்கப்பட்டு ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
அவர்களில் கம்பீரக்குரலால் வாசிக்கப்படுவதை கேட்டு, என் உடலும் உள்ளமும் சிலிர்கிறதுது . இன்னும் அடுத்தடுத்து இடையிடையில் மற்ற தேர்வுக் கவிகளும் வாசிக்கப்படுமாம்
அந்த இணையத்தில் கவிதை கேளுங்கள் லிங்கை கிளிக் செய்தால் கேட்கலாம். முடிந்தால் அங்கிருக்கும் ஃபீட் பேக்கில் என் கவிதைகளைபற்றி உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்..

எத்தனையோ கவிபடைப்போர்களுக்கிடையில் என்னுடைய கவிதைகளையும்படித்துவிட்டு அதனை பாராட்டி கடிதம் எழுதியதோடில்லாமல், தான் சொன்னதையும் சொன்னபடி நிறைவேற்றிய ”அப்பா” அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் தந்து இன்னும் என்னைபோன்ற வளரும் படைப்பாளிகளை ஊக்குவிக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதோடு .

என்கவிதைகளையும் தேர்ந்தெடுத்து ஒலிப்பரப்புச்செய்துக்கொண்டிருக்கும் http://worldtamilnews.com/ இணைதளத்திற்க்கும் இதற்க்கு காரணமான சாத்தாங்குளம் திரு.அப்துல் ஜப்பார் அவர்களுக்கும் எங்களின்   அன்புநிறைந்த நன்றிகளை பாசத்தோடு சொல்லிக்கொள்கிறோம் ..

இன்ஷா அல்லாஹ் இன்னும் இதோன்று நல்லுள்ளங்களின் வெளிப்பாடுகளை இடையிடையே வெளியிடுவேன்.

என் மகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் தாங்கள் அனைவருக்கும் பங்குண்டு.
அன்பாலும் பாசத்தாலும் ஊக்கமென்னும் கருத்துக்களாலும் தாங்கள் அனைவரும் என்னை தூண்டிக்கொண்டிருக்கிறீகள். இன்னும் பல நல்ல ஆக்கங்களை தருவதற்கு தூண்டுகோல் இருக்கவேண்டுமெனவும். இறைவனிடம் வேண்டும் உங்களின் பிராத்தனைகளில் எங்களுக்கும் சேர்த்து வேண்டும்படியும் கேட்டுகொள்கிறேன்...


என்றும் உங்கள் அன்பில் வாழநினைக்கும்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது