நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பரிசு


தேடி தேடி பெற்ற சுகத்துக்கு
தனக்குத்தானே தண்டனை
உடலையே உருக்கிக் கொல்லும்
ரணமான மரணம்

இறைவன் வகுத்த நியதியை மீறி
திகட்டாமல் தேடிய இன்பத்திற்கு
இறைவைன் தந்த பரிசு
திக்குமுக்காடவைக்கும் வியாதி

மாற்றான் தோட்டத்து மல்லிகையில்
தேனெடுக்க சென்ற வண்டுக்கு
அந்த மல்லிகை தந்த பரிசு
இந்த எய்ட்ஸ்

தவறென்று தெரிந்தும் தத்தித்தாவி
தவறிப்போகும் மனங்களே
உயிருள்ளவரை உள்ளச்சத்துடன் வாழுங்களேன்....

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

தாய் மனசு





தங்கமே வந்துவிடு
என் தாமரையே வந்துவிடு
தாலாட்டி
நான் வளர்த்த
என் தாரகையே வந்துவிடு
உன்னை
நான் சுமந்த வேலையில்
பட்ட துன்பங்கள்
ஒன்றல்ல இரண்டல்ல!

சூடாக சாப்பிட்டால்
அதுஉனை சுட்டுடுமோ
என்றெண்ணி
சுரத்தே இல்லாமல்
நானுண்டேன் பலமாதம் -
ஆனாலின்று
நீ சுட்டுசுட்டு தள்ளுவதாய்
மற்றவர்
சொல்லக்கேட்கின்றேன்

மரத்தா விட்டது
ஒன்மனசு
என்மாரணைத்துதானே
பால்கொடுத்தேன்!
மறந்தா விட்டது
ஏனெப்பு
என் மனசுக்குள்ளேதானே
பொத்தி வளர்த்ததேன்!

தீராத
வலியெடுத்தல்லவா!
உனை பிரசவிச்சேன்-அதற்கு
கைமாறாகத்தான்
நீ தீவிரவாதியானாயோ!
ஒரு பாவமும் அறியாமல்
நான்னுனை பெற்றெடுத்த
பாவியடா!
பல பாவங்கள்செய்கிறாய்
நீயென
செய்தித்தாள்களில்
கண்டேனடா!

பதைபதைத்து
நானிருக்கேன்
பரிதவித்துப்போயிருக்கேன்
நான்பெற்றெடுத்த
பாவமோ!
இல்லை யார்
கொடுத்தசாபமோ!
இந்நிலைஉனக்குவர
அந்ததெய்வந்தான்
காரணமோ!
வயிற்றுக்குச்
சோறில்லையென்று
வக்கிரபுத்திக்காரர்களின்
வசியத்தில்
வழிதவறிபோனாயோ!

இந்த
லகுக்கே நீ
பொல்லாதவன் என்றாலும்
என்றைக்கும்
பெற்றவளுக்கு நீதான்
பிள்ளையடா!
ஒன்றும் புரியாமல்
புறப்பட்டு போனவனே!
போனதெல்லாம் போகட்டுண்டா
பொழுதுவிடியுமுன்னே
பொசுக்குன்னுவந்திடடா!

செய்தபாவம்
அத்தனைக்கும்
அந்ததெய்வமென்னை
தண்டிக்கட்டும்.
செய்தவினைபோதுமடா!
இனி
சிறப்பாய் வாழவந்திடடா!

என்கண்ணீரும் ஓயவில்லை
என்கண்களும் மூடவில்லை
என்புலம்பலும் தீரவில்லை
இன்னும்

எம்பொழுதும் விடியவில்லை
இருட்டோடு இருட்டாக
நம்துயரங்கள் போகட்டும்
வெளிச்சம் உருவாகி
நம்வாழ்க்கை செழிக்கட்டும்

வந்துவிடு
என் மகனே
என்னுயிர்
போகும்முன்னே..........

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது