நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உன்னால் என்னில் மாற்றம்...


மனமுடுக்கெங்கும்
புல்லாங்குழலில் புஷ்பராகம்
ஏன் ஏனிந்த மாற்றம்...

உணர்வுகளுக்குளெங்கும்
ஊதக்காற்றினை மீறிய உஷ்ணம்
ஏன் ஏனிந்த மாற்றம்...

உயிருக்குள் அடிக்கடி
ஊடுருவி அசைத்தாட்டும் பூகம்பம்
ஏன் ஏனிந்த மாற்றம்...

நேர்நோக்கு பார்வையெல்லாம்
கீழ்நோக்கி கோலம்போடும்
ஏன் ஏனிந்த மாற்றம்...

எங்கெதில் நோக்கினும்
என்னெதிரில் தெரிவதெல்லம்
உன்னுருவத் தோற்றம்
ஏன் ஏனிந்த மாற்றம்...

உலவும் என்னுடல் கூடு மட்டும்
உயிரெங்கோ உனை நாடியே சுற்றும்.

ஓஓஒ
உன்னால்தான் என்னில் மாற்றம்
காதல் தந்த மன மாற்றம்
கனவெல்லாம் நினைவுகளின் பூந்தோட்டம்



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இனி ஒரு விதிசெய்வோம்...




விழுந்தாயோ மதியே எழுந்து வா !வா!
வீழ்ந்தே கிடக்காது
வீருகொண்டெழுந்தே வா! வா!
வீணேபொழுதை கடத்தியதுபோதும்
வேர்விட்ட சதியை வேரறுத்திட வா வா

விட்டத்து நிலவை வெறித்ததுபோதும்,,,
வெட்டிப்பேச்சு கொட்டியதுபோதும்,,
தட்டிக் கழித்த தடைகளையெல்லாம்
தட்டி முட்டிட வா வா  வா வா  !!

எட்டிமிதித்த பந்தைபோல்
எங்குநோக்கினும் மிதிகள்வாங்கி
குட்டுப்பட்டே கூனியது போதும்,,
சுவற்றிலடித்த பந்தாய் எம்பி 
சட்டென தாக்கிட வா வா வா வா

பொட்டைகூவி பொழுதெப்போ விடியும்
பாலியலியலுக்கு மோட்சம் கிடைக்குமாயெனவும்
பேசிப்பேசி கழித்ததுபோதும்
செவிடங்காது திறக்காது நாளும்
செயல்முறைபடுத்தி சீராக்கிக் காத்திட
செங்கோலெடுத்து சீறி[வி]ட வா வா

விதியென்ற பேரில் போர்வையை போட்டு
சதிகளின் போரில் மாய்திடுவோரை
சாமர்த்தியங்கொண்டு சாய்த்திட வா வா
மாற்றம்காண மாற்றம்கொண்டு
மமதை போதையில் திரிந்திடுவோரை    
மடமை மாற்றி மனிதம் போற்றிட வா வா வா வா!

  
இனியொரு பிறவி இப்புவியினிலில்லை      
இறை எழுதிய விதியோ அழிவதற்கில்லை!
தலைவிதியிதுவென தட்டுக்கெடுவதை நிறுத்தி
தனக்குளிருக்கும் திடத்தை முறுக்கி
சதியின் விதியை சரித்துப்போட்டு-புது
சரித்திரம் படைத்திட வா வா வா வா விரைவா...


அன்புடன் மலிக்கா
இறைய நேசி இன்பம் பெறுவாய்..

புதுவருட முதல்பரிசும் பட்டமும்.

அன்பும் அறனும் நம் வாழ்வின் நற்பண்புகளாகும்.

கவிக்குள் வாழ்வதும் கவியாய் வாழுவதும் கருத்தரிக்கும் தாய்மைக்கு நெருக்கம் கல்புக்குள் {நெஞ்சுக்குள்} களிப்பினை புகுத்தும்... நீண்ட நாட்களாகிறது நீரோடையில் நீராடி, முகநூல் மக்களை ஆட்கொள்வதால் வலைதளங்கள் சற்றே முடக்கங்கள்தானென சொல்லவேண்டும் அதனுள் நானும் மூழ்கிவிட்டேனவும் சொல்லலாம். என்ன இருந்தாலும் நம் குழந்தை நம் வலைதளம் அதனை பராமரிக்காது விட்டுவிட்டால் செழுமையற்று போகுமல்லவா இனி தொடர்வருகைதந்து நீரோடையில் நீர்வரத்தை அதிகரித்து கவிமீன்களை நீந்தும்படி செய்ய வேண்டுமென எண்ணியுள்ளேன். இறைநாடின்.. இதோ இந்த இனிய ஆண்டின் முதல் பரிசாய் கவிபரிசலும் ”கவிநிலா” பட்டமும்,முகநூலில் கவியருவி குழுமத்தால் நடத்தப்பட்ட கவிப்போட்டியில் என கவிதைகான பட்டமும் பரிசலும் பெற்றுதந்தது மனத்தை நெகிழச்செய்தது எழுத்தறிவித்த இறைவனுக்கே புகழைனைத்தும்.. கவியருவி நிர்வாக குழுவிற்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்... முடிவுகள் இதோ: கவியருவி மலிக்காஃபாரூக், வழக்குரைஞர் கவிஞர் ஷாந்தி மீனாக்‌ஷி இருவர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு மிகச் சிறந்த கவிதைகளாகத் தெரிவு செய்யப்பட்டுளவைகளாகும். இருவர்க்கும் தலா உருபா 500/= வீதம் எம்குழுவின் பொருளாளர் கவிஞர் சாராபாஸ் அவர்கள் அனுப்பி வைப்பார்கள். பரிசுக்குரியோர் இருவரும் பொருளாளர் கவிஞர் சாராபாஸ் Sara Bass அவர்களைத் தொடர்பு கொண்டு இருவரின் வங்கி விவரம் அளிக்க வேண்டுகிறேன் வெற்றி பெற்றோர்க்கும், பங்குபற்றியோர்க்கும் உளம்நிறைவான வாழ்த்துகள்!

அன்புடன் மலிக்கா இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது