நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தறிகெட்ட[து] சுதந்திரம்




விலைமதிக்கமுடியா
மாணிக்கப்பெண்கள் பலர்
விடுதிகளிலும் மட்டுமல்ல
வீதிகளிலும்

விரலிடை போதைக்கும்
சதையுடல் தேவைக்கும்
விலையா[போ]கும்
மாந்தர் கோலத்தில்!

பாரதிக்கேட்ட
புதுமைப் பெண்கள்
பலர் பரக்கோலத்தில்
பலர் அலங்கோலத்தில்

ஆடையணிந்தும்
ஆடையற்றவர்களாகி
ஆண்களை மிஞ்சும்
அழுத்தங்கள் கூடி

பேதைகளல்ல
போதை அடிமைகளாய்
கோதைகளல்ல
கேவல பெண்மைகளாய்!

மேலை மோகம்
மேம்பட்டு மேம்பட்டு
பாழபட்டுப் போகுதோ
பாவையின் நடத்தைகள்

அச்சம் மடம் நாணம் பயிர்
இவையனைத்தும்
அக்கால பெண்கள் சிறப்பு
அழிந்துபோனதோ
இக்கால நவநாகரீத்தில்!

வெட்கமும் நாணமும்
வெட்கி நாணியது
வெக்கங் கெட்டலையும்
வெக்கைகள் முன்னே!

அச்சமும் மடமும்
அஞ்சிப் போனது
அஞ்சாமல் நடக்கும்
அடங்காப்பிடாரிகளின் பின்னே!

சுதந்திரமெனச் சொல்லி
நாகரீக கொள்ளிக்கட்டையால்
சூடுவைத்துக் கொல்லும்
நாகரீக  நங்கையர்கள்

நாளை
நரக படுகுழியினை நோக்கி
இன்றே பயணத்தை தொடங்கும்
நவீன யுவதிகள்........

--------------------------------------

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

களையெடுத்தால்!



உடல் திண்ண ஓடியாடி அலையும்
ஓநாய் கூட்டங்கள்
மலக்கழிவுகள் என்றபோதும்
மாங்கு மாங்கென்று தின்றுதீர்க்கும்
மனிதப் பன்றிகள்

இரக்கம் இச்சைக்கு முன்
இரக்கமற்று கிடப்பதால்
ஈட்டிகளாய் மாறிடும்
ஈனப் பிறவிகள்

பச்சிளங்களைக்கூட
விட்டு வைக்காத
பாதகர்களின் கண்கள்
காமத்தால் மறைக்கப்படுவதால்
மேடையமைக்கும் கொடூரங்கள்

காணும் இடமெங்கிலும்
கவர்ச்சிகளின் அலங்கோலம்
கண்ணோரம் மோகமமர்வதால்
கண்ணியமெல்லாம் காததூரம்

கற்புகள் கலைக்கப்படுவது ஒருபுறம்
காணாமல்போகும் கற்புகள் மறுபுறம்
மானக்காப்பது மிக மிக கஷ்டம்
மானமிழப்பதோ மிக சர்வசாதாரணம்

நாளுக்கு நாள் சீரழிவுகளின்
நாட்டியமரங்கேற்றம்
நாய்களுக்கும் நரிகளுக்கும்
நாகரீக சிம்மாசனம்

காட்டேறிகள் வசிக்கும் பூமியில்
கற்புகள் சூரையாடப்படுவது மிகுதம்
கண்ணியம்
காக்கும் பொருப்பை பலப்படுத்தி
கலாச்சாரம் காப்பது சிறப்பாகும்

கற்பழிப்பவர்களை
தூண்டிவிடும் உணர்ச்சிகளை
துண்டித்து
காரணிகளை களையெடுத்தால்
கற்பழிப்பார்களா இனி?

இல்லையெனில்

கற்பை துச்சமென நினைக்கும்
துஷ்மன்களின் உயிர்களை
துகிலுரித்து துவேசித்தால்
கற்பழிக்க எண்ணுவோருக்கும்
கதிகலங்க வைக்காதோ மதி...
--------------------------------------

குறிப்பு:
இதுபோன்ற கொடூரங்களுக்கு தண்டணை கடுமையானால்தான்
தவறுகள் குறையவாவது நினைக்கும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தகுதியற்ற தார்மீகம்!



நேசிக்கத்தான் நினைக்கிறது
ஆனால்
நிலைதவறிய தந்தையை
நேசிப்பதற்கே தெரியாமல்!

அன்பு பாராட்டத்தான் துடிக்கிறது
ஆனால்
அரவணைக்க தகுதியற்ற தந்தையை
அன்புகொள்ளவே முடியாமல்!

உறவென சொல்லதான் தவிக்கிறது
ஆனால்
வெறுத்தொதிக்கி சென்ற தந்தையை
உறவுக்கொள்ள மனம் ஏற்காமல்!

தார்மீக பொறுப்பற்று
கட்டியவளை தண்டிப்பதாயெண்ணி
பெற்ற குழந்தைகளையும் தண்டிப்போருக்கு
தந்தையர்களென்ற
மகத்துவத்துக்கு தகுதியில்லை!

குழந்தைகளின் மனங்களை
கொலைசெய்துவிட்டு              
குடும்பத் தலைவனென
கொக்கரிக்கும் சில தறுதலை[தந்தை]கள்!

கோடாரியாய் தான்மாறி
குடும்பவேரை சாய்த்துவிட்டு
தான்மட்டும் நிம்மதிதேடும்
தன்னலவாத பச்சோந்திகள்

இல்லையில்லை
மனக்கொலைகள் புரிந்துகொண்டு
மகத்தானாவனென சொல்லித்திரியும்
மன்னிக்கமுடியா தீவிரவாதிகள்....


டிஸ்கி// இது கவிதையல்ல, திருமணமணமுடித்து,கருகொடுத்து உருவந்தபின், கனவுகள் கலைந்ததுபோல் காணாமல் போகும், சிலது கூடயிருந்தே பிரயோசனமற்று வாழும்,  தறுதலை[தந்தை]களின் உண்மைநிலை!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தீராத தீவிரவாதம்!


அச்சங்களோடு அனுதினமும் போராடி
அவதிகளின் பிடியில் கண்ணீர் நீராடி
ஆயிரமாயிரம் உயிர்கள் அடியோடு
அழிந்து போகுதே மண்ணோடு!

உள்ளுக்குள்ளே புகைந்து
உலகெங்கும் வெடிக்குதே!
உள்ளுணர்வ கொதிக்கவச்சு
உயிர்களெல்லாம் சிதையுதே!

அச்சமச்சம் கொண்டு
நித்தம் நித்தம் வேகுதே!
அஞ்சாநெஞ்சு கூட்டமெல்லாம்
ஆணவத்தில் அலையுதே!

வாதங்களை பேசியே
வஞ்சனைகள் செய்யுதே!
தீவிர வாதங்களை தூண்டியே
தீவிரவாதிகளா மாத்துதே!

சாதிபேரச் சொல்லி
சாகடிக்குதுங்க ஒரு கூட்டம்!
மதம்பேரச் சொல்லி
மாழுதுங்க மறுகூட்டம்!

தீவிரமா யோசிச்சி
தீர்க்குதுங்க ஒரு கூட்டம்!
திண்டாடி திணறியே
தீயாக்குதுங்க மறுகூட்டம்!

ஆத்தாடி மனிதமெல்லாம்
அடியோட அழியுதே!
பாத்தாலே மனசெல்லாம்
பதறித்தான் துடிக்குதே!

தீராதோ தீராதோ
தினந்தோறும் நடக்கும் தீவிரவாதம்
தீரவேண்டும் தீரவெண்டுமென
தினம் நடக்குதே 
இறையிடம் மன்றாட்டம்...


”ஈகரை”க்காக எழுதியது..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

உறவில்லா ஒரு உறவு!


உனக்கும் எனக்குமான உறவு
தொப்புள்கொடி வழி வந்தல்ல
நட்புக் கிளையில் வளர்ந்தது
உறவில்லாமல் உருவான
ஒரு உன்னத உறவு

அக்கொடி வெட்டியபின்பே
வளர்கிறது அளவுகடந்த பாசம்
இக்கொடி வளர்வதிலேதான்
உயிர் உருகித்தொடர்கிறது  நேசம் 

பள்ளியில் உருவானாலும்
பாதையில் உருவானாலும்
தொண்டு தொட்டு நீளவே
நீயும் நானும் விரும்புகிறோம்

இடையில் இடைவெளியோ
எப்போதாவது இடைவெளியோ
அதை விரும்புவதில்லை
ஒருபோதும் நீயும் நானும்!

காற்றடிக்கும் திசைகளில்
மண்மணக்கபெய்யும் மழைகளில்
உனக்கும் எனக்குமான நட்பினை
ஒரு நொடியாவது நினைவில்
வந்துபோகமலிருப்பதில்லை!

காலசூழலில் காணமல்போகும் சில 
கனவுகளைப்போல்
கண்காணா தூரங்களில்
மறைந்துவாழ்கிறோம் அதுதானே தவிர 
மறந்து வாழ்வதில்லை!

வாழை !
வாழையடி வாழையாக
வாழாமல் வீழ்வதில்லை..




அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது