நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எதிரும் புதிரும்.

 
இருக்கு என்கிறேன்
இல்லை என்கிறாய்!

நெருப்பு என்கிறேன்
புகை என்கிறாய்!

நீர் என்கிறேன்
கானல் என்கிறாய்!

கவிதை என்கிறாய்!
கிறுக்கல் என்கிறேன்

மனம் என்கிறேன்
சிறை என்கிறாய்!

எதிர் என்கிறேன்
நீ புதிர் காண்கிறாய்!

நான் காதல் என்கிறேன்
நீ மோதல் கொள்கிறாய்!

நீ எனக்கு என்கிறேன்
நீ எதற்க்கு என்கிறாய்!

இருவருக்குள் எப்போதும்
எதிரும் புதிருந்தான்!

இருந்தபோதும் 
இனிக்கிறதே!இல்ல[ற]ம்..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது