
என்ன தத்துவமா அப்படினெல்லாம் கேட்கக்கூடாது.
பாலைவன வாழ்க்கைக்கு குட்பாய் சொல்லும் நாள் இன்று. இறைவன் நாடினால் மீண்டும் அக்கரையிலிருந்து இக்கரைக்கு..
ஓகே நான் ஊருக்கு போகிரேன் ஊருக்கு போறேன்.
இன்று மதியம் கிளம்புகிறேன்..அப்பாடா போயிட்டு வாம்மா நாங்க கொஞ்சநாளைக்கு நிம்மதியாயிருக்கோம் கவிதைங்கிறபேர்ல திணராமா அப்படினெல்லாம் நெனப்பிங்களோ! ச்சே சே நினைக்கமாட்டீங்க.. மச்சான் கொஞ்சம் லேட்டா வருவாங்க அவங்களை பத்திரமா அனுப்பிவைங்கப்பா.
கொஞ்சநாளைக்கு நீரோடை மற்றும் உங்கபக்கமெல்லாம் வரமுடியாதுன்னு நினைக்கிறேன். இருந்தாலும் நேரம் கிடைக்கிறப்ப வந்து உங்க எல்லாரையும் எட்டிப்பார்த்துவிட்டுபோவேன். நீங்களும் நம்மள மறந்துடாதீங்கோ..
அன்பைகொண்டு இவ்வுலகம் சுழலுமாயின் எம்மனிதரின் உள்ளமும் அழுக்கடையாது ஆனந்தத்தில் திழைத்திருக்கும்..
நான் பலநேரம் தாங்களின் கருத்துரைகளுக்கு பதிலளிக்காதிருந்திருப்பேன் நேரமின்மை காரணமாக அதையும் பொருந்திக்கொள்ளவும் எவ்வகையிலாவது உங்கள் மனம் சங்கடப்படும்படியோ! வருத்தப்படும்படியோ நடந்திருந்தால் இறைவனுக்காக என்னை மன்னியுங்கள். உங்கள் அனைவரின் நினைவுகளிலும் அன்பிலும் பிராத்தனையிலும் எனக்கான பங்கு எந்நாளும் இருக்கட்டும்...
இறைவா!
எங்களின் பயணத்தை எவ்வித சிரமமும் இன்றி உனது துணையோடு அமைத்துதருவாயாக!
உலகிலுள்ள அனைவருக்கும் சாந்தியையும் அருளையும் தந்தருள்வாயாக!!!
உங்கள் அனைவரின் ஆசிகளும். வாழ்த்துகளும். எந்நாளும் எதிர்பார்ர்க்கும்
உங்கள் அன்பு மலிக்கா
அன்புடன் மலிக்காஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.