நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கற்றறிந்தவர்களும் கத்துக்குட்டியும்..


சிறுகதை எழுத்தாளரும். பத்தரிக்கை ஆசிரியருமான
 திருச்சி சையது அண்ணன் அவர்களின்
புகழ்பெற்றவர்களைப் பற்றி ஒரு ரசிகனின் பதிவுகள்
என்ற 367 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில்
 மிகப்பெரும் புகழ்பெற்றவர்களைப் பற்றி தொகுத்துள்ளார்கள்.
இந்நூல்மிக அருமையாக வந்துள்ளது அதில் என்னப்பற்றியும் சில,,,
கண்ணே! கண்மணியே! 


கருவறையில் என்ன
கண்ணாம்பூச்சி ஆட்டம்
அதனால் என் உள்ளத்தில்
தினமும் தொடருது தேட்டம்

கருச்சோதனைக் கருவியோடு-என்
வயிற்றுக்குள் நடக்குது போராட்டம்
உன்உருவத்தைப் பார்க்க
என் உள்மனதிற்குள் ஏக்கம்
உனக்கு உயிர்கொடுக்கச்சொல்லி
இறைவனிடம் மன்றாட்டம்

அன்னை அழுது புலம்புகிறேனே
அமுதே என் அழுகுரல்
உனக்கு கேக்கலையா!
புலம்பித்தான் தவிக்கின்றேன்
தேனே என் தவிப்பு
உனக்கு புரியலையா!

பூமியைப் பார்க்க உனக்கு
விருப்பமில்லையா -இல்லை
இந்த அப்-பாவித் தாயை
பார்க்கப் பிடிக்கவில்லையா!

மருவித் தவிக்கின்றேன்
மன்றாடித் துடிக்கின்றேன்
உருவமில்லா உனக்காக
உருகித்தான் போகின்றேன்

பதுமையே பதுமையே
எனை காணக் வருவாயா!
பட்டுப் பூவினமே
என்னை பதறவைப்பாயா!

காத்திருக்கிறேன் கண்மணியே
உயிருக்குள் உருகியபடி
வசந்தமான உனைக்காண
என் வயிற்றை வருடியபடி

ஒவ்வொரு பெண்ணுக்கும்
தாய்மைதான் முழுமையின்
அடையாளம்
அதை பெருவது பெண்மைக்கு
இறைவன் தரும் பெரும் வரம்..




அறம் செய மற

அன்பை மற
ஆணவத்துடன் நட
இறுமாப்புடன் இரு
ஈகை செய்யாதே
உதாசினப்படுத்து
ஊதாரியாய் இரு
எதிர்த்து பேசு
ஏளனமாய் நட
ஐயப்படாதே
ஒருவருக்கும் உதவாதே
ஓரவஞ்சனை செய்
ஔவையாராய் ஆகாதே..

எதை ஒன்றை செய்யச்சொன்னாலும்
அதற்கு எதிர்மறையாய்
செய்வதுதானே மனிதகுணம்
தயவுசெய்து இதையும் படித்துவிட்டு
இதற்க்கும் எதிர்மறையாகவே

செய்து பாருங்களேன்........

அதில் என்றும் இளமைக் காதல்எங்களுக்குள் மற்றும் திரு தந்தை ஜின்னாஹ் ஷ்ரிபுதீன் அவர்கள் எனக்கு விருதுகொடுத்து வாழ்த்து தெரிவித்த நிகழ்வு என்று, நமளோட கவிதைகளும். கட்டுரைகளும்  வந்துள்ளது.பெரும் புகழ்பெற்ற  ஜாம்பவான்களுக்கு மத்தியில்.
மிக சாதரணமான இந்த கத்துக்குட்டியும் இருப்பதை நினைத்து மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.  பெரும் புகழ்பெற்ற பெரியவர்களுக்கு மத்தியில் என்னையும் இணைத்தமைக்கு திருச்சி சையது அண்ணன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நூலினை சுடர் வம்சம் தொண்டு நிறுவனம் துபாய் கெனடியன் பல்கலைக்கழக அரங்கில் 11.2.2011 அன்று வெளியிட்டது. முதல் பிரதியினை தொழிலதிபர் கருணாகரன் வெளியிட தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான சீனா தானா அவர்கள் பெற்றுக் கொண்டார். விழாவில் கலைமாமணி டாக்டர் சாரதா நம்பி ஆரூரான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். சுடர் வம்சம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ரகுராஜ் தலைமை தாங்கினார். புத்தகத்தைபற்றி மிகச்சிறப்பாக பாராட்டி பேசினானார்  திரு அத்தாவுல்லா அவர்கள்.
விழாவில் சிறுமி வித்யாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. செல்வி நிவேதிதா தொகுத்து வழங்கினார். விழாவில் துபாயில் உள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

நூல் விற்பனை மூலம் கிடைக்கும் முழுத்தொகையும் ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்பட உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.!
நூல் வாங்க விரும்பும் உள்ளவர்கள் சுடர் வம்சம் திரு. ரகுராஜ் அவர்களை (050 2164375) தொடர்பு கொள்ளவும். ஈமெயில் முகவரி :
sudarvamsam@yahoo.co.in

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது