கதிரவனின் கதிர்வீச்சை கண்ணடித்தது சிரித்தது
காலைதென்றலுடன் கைகுழுக்கி நடந்தது
அன்னை ஊட்டிவிட அழகாய் உண்டது
ரெட்டை பின்னல்போட்டு ரெக்கைகட்டிப்பறந்தது
மழையுடன் காதல் கொண்டு மறைந்து நின்றது
பட்டுபாவாடை கட்டி பட்டாம்பூச்சியானது
பல்லாங்குழியாடி பரவசம் அடைந்தது
பச்சைக்குதிரை தாண்டி பட்டென விழுந்தது
பாண்டியாடி கோட்டை தவறாய் மிதித்தது
பளிங்கி [கோலி]விளையாடி பத்து பத்தாய் சேர்த்தது
ஒளிந்து விழையாடி ஒப்பீ சொன்னது
கபடியாடி கொண்டு குதூகலம் அடைந்தது
கயிறு தாண்டித்தாண்டி களைத்துப்போனது
தட்டாம்பூச்சி பிடிச்சி மீண்டும் பறக்கவிட்டது
தட்டாமலைச் சுற்றி துள்ளிக்குதித்தது
உயரத்திலிருந்து குளத்தில் குதித்தது
இக்கரையிலிருந்து அக்கரைக்கு சென்றது
முதுகில் ரெண்டடி வாங்கிக்கொண்டது
முனுமுனுத்துக்கொண்டே மீண்டும் ஓடியது
மனதிற்குள் புதைந்துள்ள மகிழ்ச்சிகளை
மீண்டும் புதுப்பித்து சிறுபிள்ளையாய்
தோன்றி சிறகடிக்கிறது மனம்
இப்படியே இருந்துவிடச்சொல்லி ஏங்குது தினம்...
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்