நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கிடைக்குமா ஓர்வரம்



நம் விழிகள் இரண்டும் விபத்துக்குள்ளானபோது
இடம் மாறிக்கொண்டன இதயங்கள்

எடுத்துசென்ற இதயத்தில் எவ்வித எண்ணங்களையும்
இணைத்துவிடாமல் திருப்பித்தந்துவிடு

தடுமாறி வந்த இதயத்தில் இருக்கிறதாம் ஒரு ஓட்டை
இனி கொஞ்சநாள்தான் நான் சுவாசிக்க முடியுமாம் காற்றை

"ஆதலால்"


தாழ்மையுடன் கேட்கிறேன் தயங்காமல் தந்துவிடு

என் இறப்புக்குப்பின் நீ இயந்திரமாக வாழ்வதை
நான் விரும்பவில்லை

விரும்பி வந்தவளே நான் வெறுத்துவிட்டேன் என்றெண்ணி
உன் வாழ்க்கையை வசந்தமாக்கிக்கொள்-என்று
உன்னிடம் சொல்லிவிட்டேனே தவிர

தவிக்கின்றேன் தினம் தினம் -உன்னோடு
இணைந்து வாழ கிடைக்குமா ஓர்வரம்
என நினைத்து ஏங்குது என்மனம்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது