அன்பு நெஞ்சங்களே
அரவணைக்கும் உள்ளங்களே
ஆனந்தமாய் ஓடிவந்து
ஆவலோடு கேட்கின்றேன்
அனைவரும் நலமா
அனைவரும் சுகமா
இந்தியா சென்றுவிட்டு
இளைப்பாறி வந்துவிட்டேன்
இருந்தும் போதவில்லை
இன்னும் இளைப்பாற சமயமில்லை
இந்தியாமீது கொண்ட
ஈர்ப்பு மட்டும் குறையவில்லை
நானில்லாத சமயத்திலும்-என்
கவிதைகளை கண்டுவிட்டு-என்னை
கெளவுரவித்து கருத்துதந்தீர்
இதைநான் என்றென்றும் மறக்கமாட்டேன்
இதற்கு எந்நாளும் நன்றி சொல்வேன்.
என்தாயைக் கண்டுவிட்டு
என்தாய்நாட்டைக் கண்டுவிட்டு
மீண்டும் வந்துவிட்டேன்
மிகுதியாய் புத்துணர்வும் பெற்றுவிட்டேன்
அன்பெனும் ஆதரவாலே
அள்ளித் தருவேன் ஆக்கங்களை
நீங்கள் தரும் ஊக்கத்தாலே-இனி
நீரோடையை நிரப்புவேன் கவிதைகளாலே.....
டிஸ்கி/// என்னம்மாஎல்லாரும் எப்படியிருக்கீங்க.
உங்கள் அனைவரின் நலமறிய மிகுந்த ஆவல்.
வந்தாச்சி வந்தாச்சி வசந்தம் கண்டுவந்தாச்சி. கூடவே
வசந்தமும் கொண்டு வந்தாச்சி. இனி விளையும் என்மூன்று தளத்திலும் முப்போகம்.
தற்போது நோன்புக் காலமாக இருப்பதால் என் இறைவனோடு அதிகதொடர்புகொள்ளவேஆசை. அதனால்.அடிக்கடி என்தளம் மற்றும் பிற தளங்களின் பக்கம் வருவது சிரமம். நோன்பு முடிந்ததும் எப்போதும்போல் வருவேன் அதுவரை உங்கள் அனைவரின் ஊக்கமும் ஆதரவும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தொடர்ந்து கவிதைகளுக்கு கருதிட்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.