நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மெல்ல வெளியேறும் மெளனங்கள்.



மாய உலகத்தின் மர்ம குகையென்னும்
மனதிற்க்குள் மண்டிக் கிடக்கும்
உனது நினைவுகளைச் சுற்றியே
எனது எண்ணங்கள் சுழல்கிறது
அதனைச் சுற்றியே
எனது வாழ்க்கையும் கழிக்கிறது!

ஆறறிவைத் தாண்டி
ஏழாம் அறிவைத் தூண்டி
எட்டாம் அறிவை எட்டி
எனக்குள் ஏதேதோ நிகழச்செய்து
உன்னைப் பற்றிய எண்ணங்களே
என்னை ஆட்க்கொண்டு ஆட்சி செய்கிறது!

உன்னை முதல் முதலாய் கண்ட
என்கண்களுக்கு ஏனோ இதுவரை
வேறொரு பெண்ணின் உருவத்தை
உற்றுநோக்கும் சக்தி உண்டாகவில்லை
உன்னை விரும்பயதுபோல் வேறெதையும்
என் விழிகள் விருப்பமும் கொள்ளவில்லை!

உன் தின வருகையை எதிர்பார்த்து
எதிர்வீட்டு திண்ணையை தேய்த்தவன் நான்
என்னைக் கடக்கும் ஒரு நொடியைக்கூட
நீண்டதொரு  மணிக்கணக்காய் எண்ணி
நீ கடந்த பின்பும்  அவ்விடத்திலேயே
நெடுநேரம் நின்றவன்தான்
 
நீயறியாது உன்னைத் தொடர்வதும்
நீயறிகையில் அவ்விடத்திலிருந்து விலகுவதும்
நீ பயணங்கள் செய்வதை நான் அறிவதும்
நீண்ட தூரமென்றாலும் உன்பின்னே வருவதும்
தேவதை தந்த வரமாக்கிகொண்டேன்
தினம் தினம் அதையும் வேண்டி நின்றேன்!

திருமணமென்ற சடங்குகளால் என்னை
வேறொருத்தியின்,,,,,,,,தொடரும்.


என்னது தொடருமா!!!!!!!! ஆமாம் இது ஒரு[தலைக்] காதல் தொடர்கவிதை. 
காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தெரியாமலும். வாழ்க்கைக்கு தொடக்கப்புள்ளி வைக்கமுடியாமலும் திண்டாடிக்கொண்டிருக்கும் பலமனங்களின் வெளிப்பாடாய் இக்கவிதை.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது