நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தீ,,,,,,,,ண்டாமை






அசுரனை ஒழித்ததால்
அமர்க்களப்பட்ட பட்டாசுகள்
அசுரவேகத்தில் பறந்து
ஆகாயத்தை
கீறிப் பார்க்க முயன்று
தோற்றுப்போய் சீற

அடுக்கடுக்காய்
சிதறிய  காதிதங்களோடு-தீயின்
சிறுபொறியொன்றும் சேர்ந்து
கீழ்நோக்கியபோது

தீட்டென 
தள்ளிவைத்திருக்கும் கூரையை 
தீண்டிப் பார்த்தும்
சீண்டாமல் சென்றது

 ”தீ”ண்டாமையால்
தீண்டப்பட்ட அக்குடில்
தகதவென எரிந்தது
எரியூட்டப்பட்ட தீயினால் அல்ல
ஏற்ற இறக்கம் தந்த நோயினால்

பட்டாசு வெடிச்சும்
புத்தாடை அணிந்தும்
பலகாரம் செய்தும்
பரிபூர்ண பயனில்லை

”ஏனெனில்”
 பலயிடங்களில்
அரக்ககுணமான தீண்டாமையெனும்
அசுரன்[கள்]  இன்னும் அழியவில்லை..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

ஈ ரோடா நீங்க!



ஈ ரோடு எவிடயானோ அதே அ ரோடு ஏது ரோட்டில் போனாலும் வரும்.
ஹய்யோடா!

என்னாதிது சம்மந்தமேயில்லாம அப்படின்னு நெனக்கிறீகளா!!!!
அ ரோடு போய்வந்து  சொல்கிறேன்.
ஆங் அப்புறம்
அங்கே யாரையாச்சிம் [அ இ] ரோட்டுக்கு
அப்பாலோ இப்பாலோ பாத்தாலும் வந்து சொல்லுறேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது