
காதல் மிகப்புனிதமானது,
அதை விளையாடி வீணாக்கிவிடாதீர்கள்
சிறுவயதிலும்
சின்னப்பிள்ளைத்தனத்திலும்
செய்வது காதலல்ல
காதல் கடலைப்போன்றது
திருமணத்திற்குமுன்
செய்யும் காதல்
கரையை மட்டும்
தொட்டு நிற்கவேண்டுமே தவிர,
அலைகளுடன் விளையாடினால்
சுனாமிபோல்
சுருட்டிகொண்டு போய்விடும்
திருமணத்திற்குப்பின்
வளரும் காதல் ...
பேரலைகளையும்
தொட்டுக் கூத்தாடினாலும்
அதனுள்
மூழ்கியபோதும்
முத்துடன்தான் வருவோமே
தவிர
மூச்சடைத்து விடமாட்டோம்
திருமணத்திற்குபின்
காதல் செய்துபாருங்கள்
அதனின் ஆழம் தெரியும்,
அதனின் அன்பு புரியும்,
அதனின் மதிப்பு தெரியும்
காதல் கண்ணியமானது
அதை
கலங்கப்படுத்தி விடாதீர்கள்!!
கணவருடன்
காதல்
செய்து பாருங்கள்,
காதலுடனே
வாழ்ந்துபாருங்கள்!!
நம்
வாழ்க்கைக்குப் பின்னும்
காதல் வாழும்!!
அன்புடன்மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்