நீ என் ஆதிமூலம்
நான் உனது அங்க நாளம்
உன்னையன்றி
என் பயணம் போக
வேறு வழியில்லை
நீதானே
என் வாழ்க்கையின்
வரையறுத்த எல்லை
உன்மீது நான்போடும்
ஆட்டமெல்லாம்
என் ரத்தநாளங்கள்
அடங்குவரையே தொடரும்
உன்னைப்போலவே நானும்
பொறுமை காக்கிறேன்
பொறுக்க முடியா நிலையில்
சிதறி உடைகிறேன்
புன்னகையென்னும்
பூக்கள் பூக்கிறேன்
வாடும் நிலைதனில்
வதங்கி சிதைகிறேன்
பாச நீரூற்ற
படர்ந்து வாழ்கிறேன்
பாசம் வேசமாக
பட்டுப்போய் சாய்கிறேன்
..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நான் உனது அங்க நாளம்
உன்னையன்றி
என் பயணம் போக
வேறு வழியில்லை
நீதானே
என் வாழ்க்கையின்
வரையறுத்த எல்லை
உன்மீது நான்போடும்
ஆட்டமெல்லாம்
என் ரத்தநாளங்கள்
அடங்குவரையே தொடரும்
உன்னைப்போலவே நானும்
பொறுமை காக்கிறேன்
பொறுக்க முடியா நிலையில்
சிதறி உடைகிறேன்
புன்னகையென்னும்
பூக்கள் பூக்கிறேன்
வாடும் நிலைதனில்
வதங்கி சிதைகிறேன்
பாச நீரூற்ற
படர்ந்து வாழ்கிறேன்
பாசம் வேசமாக
பட்டுப்போய் சாய்கிறேன்
..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.