நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தோல்வி!..




தோல்வியின் கைகளில்
வெற்றியின் மாலை
தோல்வியை கைகுலுக்கியே
வெற்றிமாலை தோளைத்தொடும்

தோல்வியின் இலையை
மென்றபின்பே
வெற்றி”லை”யின் சார்
உள்ளிறங்கும்

முயற்சியின் முனையில்
வெற்றிக்கனி அதனிடையே
தோல்வியின் தழுவல்கள்

தழுவலின் பிடியில்
நழுவி நழுவி
வெற்றியின் முனையை
கைப்பற்றும் கைகள்

தோல்வியென
துவண்டு கிடந்தால்
துளிர்விடுவது எப்போது?
துணிந்தபின்
தோல்விகள் தவிடாகும்
தவிடே
வெற்றியின் உணவாகும்

பல வெற்றிகளுக்கு முன்பே
பலபல தோல்விகள்
தொட்டும் தழுவியுமிருக்கும்
தோல்விகண்ட வெற்றியே
தெளிவையும் துணிவையும் தரும்

வெற்றியை வென்றிட
தோல்வியிடம் தோற்றுபோ
இல்லையேல்
தோல்வியை தோற்கடி!....

கவிதை வயலுக்காக விளைந்த கவிதையிது
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

'வாழ்க்கையும் குறிக்கோளும்''



மனிதா!
எத்தனையோ கேள்விக் கணைக்கள்
உன்முன்னே வைக்கப்படுகிறது
எதற்கேனும் பதிலுண்டா
உன்னிடத்தில்!

இச்சையின்பத்தால்
இரண்டரகலந்ததில்
இவ்வுலகத்தை
இருகண்கொண்டு கண்டவன் நீ
இளக்கர தோரணையோடு
இவ்வுலகில் வலம்வருகிறாய்!

நீ வரும்போது
அழுகையைத் தவிர
ஏதுமில்லை
உன்னிடத்தில்
அதையும்
நீ போகும்போது
பிறரிடம் கொடுத்துசெல்பவன்
இருந்துமேனோ
இருமாப்புடன் வாழ்கிறாய்!


ஆகாசமும் பூமியும்
உனக்காக
படைக்கப்படத்துதான் என்ற
ஆணவத்தில்
அலைபவனாக திரிகிறாய்
ஆகாதென தெரிந்தும்
அமிலத்தை
அறுஞ்சுவையென நினைக்கிறாய்!

ஐபூதங்களின்
ஆதரவில் வாழ்பவன் நீ
ஐந்தில் ஒன்றை இழந்தாலும்
ஆட்டம் கொள்ளும் உனதுடலுயிர்
அப்படியிருந்தும்
அனாச்சாரபிடியில் சிக்கி
அழிவை நோக்கி நகர்கிறாய்!


உனக்கு தரப்பட்டிருக்கும்
காலகெடு முடியும்வரைதான்
உனதாட்டம் இப்பூமியில்
காலக்கெடுக்கு கணக்கு வழக்கில்லை
காலவெதியான உயிர்களுக்கு
இப்பூமியில் இடமில்லை
இவையறிந்துமேனோ
இச்சைகளின் பின்னே
அட்டைகள்போல்
ஒட்டிக்கொண்டலைகிறாய்!

உச்சிமுதல் உள்ளங்கால் வரை
பாவங்களால் நிரம்பியிருப்பவன் நீ
பாவங்களை பெருக்குவதிலிருந்து
உன்னை விலக்குவதில்லையென
விடாபிடியாகயிருக்கிறாய் ! 

ஒருதுளி நீரால்
உருவாகியவன் நீ
ஒவ்வொரு தீங்குகளையும்
நீர் தெளித்து வளர்கிறாய்
குறிகோள்கள் ஏதுமற்று
குட்டியச் சுவராகவே
வாழ்ந்து கெடுகிறாய்
மரணம்வரும்வரை
மதியிழக்கிறாய்
மரணவேளையில்
மனதால் மடிந்தழுகிறாய்!

மனிதா!
எத்தனையோ கேள்விக்கணைக்கள்
உன்முன்னே வைக்கப்படுகிறது
எதற்கேனும் பதிலுண்டா
உன்னிடத்தில்!
==================================

கவிதை வயலின் 100 வது கவிதையிது. நன்றி றாஃபி.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மகத்துவமான மருந்து..


ருசிகளை சுவைபார்த்த
நாவிற்கு
பசிகளின் நிலையறிய!
பாவங்களை சுமந்திருக்கும்
மனதிற்க்கு
பாவச்சுமைகளை களைந்தெறிய!
உள்ளத்தையும்
உடலையும் சுத்துப்படுத்த
வருடத்தில் ஒருமாதம்
ஓடிவந்திருக்கு
நம்மை நாடி வந்திருக்கு!

நன்மையை அள்ளித்தர
நாயன் கட்டளையிட்ட
நல்லதொருகாலம்
அதுதான்
நோன்பென்னும்
மாண்பை சுமந்திருக்கும்
ரமலான் மாதம்!

கத்தை கத்தையாகவும்
கடுகளவேனும் தருமங்கள் செய்திடவும்
கருணை மனுக்களை
கண்கலங்கி கொடுத்திடவும்
கல்பென்னும் உள்ளத்தை
கலங்காமல் பாதுகாத்திடவும்
காத்தருளும்  நாயனிடம்
கையேந்திக் கேட்டிடவும்
நம்மருகில் வந்திருக்கு
நன்மைகளை
சேகரிக்க வழி கிடச்சிருக்கு!

கடுஞ்சிரமங்களும் போக்கிடவே
கண்டும் காணாமலும் செய்த
பாவகாரியங்களையும்  நீக்கிடவே
படைத்தவனிடம் மன்றாடிட
பலனும் நலனும் கொண்டுவந்திருக்கும்
மகத்துவமிக்க மருந்து -அதை
முப்பது நாட்களும் அருந்து

பாங்கான நோன்பினை
பேணிப் பேணி பிடித்திட
பிணியும் போக்க வேண்டிட
கைவிட்டுவிடாமல் கைப்பற்றிடவே
கருணை இறைவனை நாடிடு!

அறணும் நலனும் சேர்த்து சேர்த்து
அண்டை அயலாரை அன்பில் அணைத்து
அல்லும் பகலும் இறையை நினைத்து
அனைத்து பாவங்களையும் கடத்து கடத்து

கண்ணும் கருத்தும் ஒன்றிணைந்து
கழிவுகள் மொத்தம் கழுவித்துடைத்து
கவனம் கவனம் எண்ணத்தில் கொண்டு
கவளம் விழுங்கு சுபுகுக்கு முன்பெழுந்து

பகல் முழுவதும் சிரமம் தவிர்ந்து
படைத்தவனை புகழ்ந்து புகழ்ந்து
தொழுது படித்து துதித்து வணங்கு
தூயவனை நினைத்து நினைத்து

இவ்வுலக இச்சை மறந்து துறந்து
இரவுமுழுதும் அழுது தொழுகு
இறையச்சம் இதயத்தில் பூண்டு
ஜகன்னமென்னும் நரகை விலக்கு

ஐந்து கடமைகளில் ஒன்றை அடைந்து
ஜக்காத்துகளை அள்ளி வழங்கு
ஐய்யத்தோடு இறையை உணர்ந்து
ஜன்னத்தென்னும் சுவர்க்கதை நோக்கு.

======================================
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

முதுமையின் தாக்கம்.



ஆறடி
ஆறுபோல் வளையும்போது
ஆறுதலுக்கு
ஆள்தேடுது!
அறணுமிழந்து செயலுமிழந்து
அன்பு கொள்ள
தோள்தேடுது!
ஊண்குறைந்து
கூன்விழுந்தபோது
ஊன்றி நடக்க
ஒரு கொம்பை நாடுது!

வாசம் வீசிய
வாலிப வாழ்க்கை
வலுவிழந்து
வெருச்சோடித்தெரியுது
ஊட்டி ஊட்டி
வளர்த்த பிள்ளை
வீட்டிலொரு
மூலைகொடுக்குது
முணுமுணுக்கும் சத்தம் கேட்டால்
முகத்தை சுழிக்குது!

கெஞ்சிக் கெஞ்சி
கொஞ்சிபேச
பேரப்புள்ளையின்
துணையை நாடுது!
பேரன்பேத்திகளின்
பேச்சு குளிருது!
முதிர்ச்சி எட்டி
முதுமை தட்டி
மூச்சிறைக்குது!
முந்தையகாலம் நினைத்து
புலம்பும் நெஞ்சம்
மெளனம் காக்குது!
முதுமையின் தாக்கம் புரியுது...
------------------------------------

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது