நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விழி வழியே ஒளி!

நன்றி கூகிள்
இரவுநேர வானம்
இருளை அகற்ற
இரகசியமாய்
இரவல்கேட்டது என்விழிகளை
இன்முகத்தோடு தந்தேன்

விடிய விடிய
விழித்திருந்தது வானத்தில்
விண்மீன்களோடு என்விழிகள்- நீ
விழிமூடும்வரை உனை
விட்டு விலகாமல்

விழிமூடிய நீ
விருட்டென்று எழுந்து
வானம் பார்த்து
விழியசைத்ததும்
வியந்தது விண்மீன்கள்

விடிவது தெரியாமலே! -என்
விழிகள் ஒளிர்வது அறியாமலே!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது