15-1-2010 .அன்று சுடர்வம்சம் தொண்டு நிறுவனத்தின்
5.ஆம் ஆண்டுவிழாவும். திருச்சி சையது அண்ணனின் அன்பைத்தேடி சிறுகதை புத்தக வெளியீட்டுவிழாவும் நடந்தது.
சிறுகதை எழுத்தாளர் திருச்சி சையது அண்ணன் எழுதிய அன்பைத் தேடி என்கிற சிறுகதைகளின் தொகுப்பினை இலங்கை தமிழ்ச்சங்க துணைத்தலைவர் காவியத்திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை தமிழக அரசின் ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் எம்.எஸ். நெய்னா முஹம்மது அவர்கள் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், வானலை வளர்தமிழ் தமிழ்தேர் நிர்வாகிகள். மற்றும் அமீரக தமிழ்கவிஞர் பேரவைத்தலைவர் திரு அப்துல் கதீம் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
சிறுகுழந்தைகளின் நடனம் மற்றும் கலைநிகழ்ச்சியும்.நகைச்சுவை நிகழ்ச்சியும் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்புப் பெற்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இளம் வயதில் அறிவியல் துறையில் சாதனை மற்றும் ஆங்கில நாவல் எழுதும் ஆர்வத்தைப் பாராட்டி கே. சாய் கோகுலுக்கு இளம் சுடர் விருதும், பன்முகத் திறனுக்காக நிவேதிதாவுக்கு கலைச் சுடர் விருதும், தமிழ் இலக்கியத்துறை சேவைக்காக ஆசிஃப் மீரானுக்கு இலக்கியச் சுடர் விருதும், கல்வி மற்றும் சமூக சேவைக்காக சிவஸ்டார் கோவிந்தராஜுக்கு சமுதாயத் சுடர் விருதும், தமிழ் சேவைக்காக காவியத்திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தினுக்கு சுடர் ஒலி விருதும் புத்தகவெளியீடும் நடைப்பெற்றது. அப்புத்தக வெளியீட்டில் நானும் அவர்களை வாழ்த்தும்விதமாக இருகவிதைகளை வாசித்தேன்
சுடர்வம்சத்தின் தலைவர் திரு ரகுராஜ் அவர்கள் போனில் அழைப்புவிடுத்து நிகழ்ச்சியில்
கலந்துகொள்ளும்படியும் பேசும்படியும் கேட்டுகொண்டார்கள்.
நமக்கு என்ன பேசவரும் இருந்தாலும்
பேசனும் எனநினைத்தபோது
பேசுவதை அப்படியே கவிதைவரிகளாக மாற்றி
வாசித்துவிடலாமே என இருகவிதைகளை எழுதிச்சென்றேன்.
சுடர்வம்சத்தை பற்றி சொல்லவேண்டும்.
சுடர்வம்சமென்பது ஒரு தொண்டுநிறுவனம்.
அவர்கள் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் எதிர்காலத்திற்க்கு
இவர்கள் விதைபோட்டு தண்ணீர் ஊற்றுகிறார்கள்.
ஒருமாணவனை உயர்தினால் ஒருகுடும்பமே உயரும்.என்ற நற்பணியில் செயல்படுகிறார்கள்.
இதுமற்றுமின்றி எதிர்வரும்காலத்தில் இன்னும் பல
நல்லதிட்டங்களை வழிவகுத்துவருகிறார்கள்.
சுடர்வம்சம்
மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி,
எதிகாலத்தில் மாணவர்கள் நாட்டுப்பற்று,
மொழிப்பற்றுடன் மனிதநேயம்
உள்ளவர்களாக உருவாக்குவோம்
என்பதே இவர்களின் செயல்வழி.
மொத்தத்தில் உதவிகள் செய்வதின்மூலம் உயர்ந்து நிற்கிறார்கள்.
அப்புறம்
அன்பைத்தேடி சிறுகதையை வெளியிட்ட திருச்சி சையது அண்ணனைப்பற்றியும் சொல்லனும்
அவர்கள் ஒரு பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர்
நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள்
குமுதம் பாக்யா. விகடன். தேவி போன்ற பத்திரிக்கைகளிலும் இவர்களின் சிறுகதைகள் வெளிவந்துள்ளது.
இப்போதுதான் முதல்முதலில் தன்னுடைய சொந்தசிலவில்
இந்த அன்பைத்தேடி என்ற சிறுகதையை அச்சிட்டு வெளியிட்டு,
அதில்வரும் விற்பனையின் மூலம் வரும் தொகையைஅப்படியே சுடர்வம்சம் நிறுவனத்திற்கே வழங்கிவிட்டார்கள்.
எத்தனைபேருக்கு இந்தமனம் இருக்கும்.இவர்களைப்போன்றவர்களும் சுடர்வம்சம்போன்றவர்களும்
இன்னும் இவ்வுலகில் இதேபோன்று இன்னும் பலபேர் வாழ்பவர்களும் இருப்பதால்தான்
இன்னும் இப்பிரபஞ்சம் ஈரபத்தத்துடனே இருக்கிறது.
அவர்களுக்காக நான்கவிதையெழுதியதில் வாசித்ததில் பெருமைப்படுகிறேன்.
இதோ நான் எழுதிவாசித்த கவிதை
இது சுடர்வம்சத்திற்காக
புனிதப்பணி
ஈகை குணமும்
ஈர்த்த அன்பும்
இருப்பதினால்
இன்னும்
இப்பிரபஞ்சம்
ஈரப்பதத்துடன்
இனிமையாய்
அதை
உணர்த்தும் விதமாய்
ஆங்காங்கே
உன்னதமாய்
உதவும் கரங்களும்
உள்ளன்புகளும்
பல கொண்ட
சுடர்வம்சமென்னும்
தொண்டு நிறுவனம்
வாழ்க்கைக்கு
உதவுவதைவிட
வாழ
வழிகாட்டித் தருதலே
உயர்விலும் உயர்வு
தம் வம்சங்கள்
நிறைவடையக்காணும்
இவ்வுலகில்
பிறரின் வம்சங்களும்
நிறைவடைய
சுடர்விட்டு
சூரிய வெளிச்சமாய்
சுற்றிப் பரவும்
அறிவொளியை
அள்ளிவழங்கும்
ஆன்மாக்கள்
சுடர்வம்சத்தின்
நல்உள்ளங்கள்
கல்விக்
கதவுதிறந்தால்
கஷ்டதின் வழியை
சிறைப்படுத்தும்
அறிவுக்
கதவுதிறந்தால்
அறியாமையின்
இருளை
அகற்றிவிடுமென்ற
உன்னத பணியை
உயர்வாய் செய்யும்
சுடர்வம்சம்-நல்
பணிகளுக்கு - ஓர்
உயரிய உதாரணம்
சுற்றும் பூமியெங்கும்
சூரிய ஓளி
பரவுவதைப்போல்
சுடர்வம்சத்தின்
உதவித் தொண்டொளி
சுதந்திரக் காற்றைப்போல்
சுற்றிப்பரவட்டும்
மென்மேலும்
மேன்மைப்பெற்று
சிறப்பாய்
செயல்பட
அந்த இறைவனின்
அருளும் நிறைவும்
என்றென்றும்
அதனருகிலேயே
இருக்கட்டும்..
இது திருச்சி சையது அண்ணனுக்காக
எழுதி வாசித்தது.
வெற்றிமேல் வெற்றி பெறு
என் உடன் பிறவா
சகோதரா!
உமை வாழ்த்தி
ஒரு கவி
பலர் முன்னிலையில்
வாசிக்கும்
உம் சகோதரி
பொன்தேடி புகழ்தேடி
அருள்தேடி பொருள்தேடி
வசதிதேடி வாய்ப்புத்தேடி
அலையும் காலத்திலும்
அதையெல்லாம் தாண்டி
அன்பைத்தேடியும்
ஆன்மாக்கள் அலைவதும்
மறுக்கமுடியா தென்ற
உண்மையை
அழகாய் தேர்ந்தெடுத்து
அற்புத வரிகள் கொடுத்து
அதையின்று
வெளியிடுகிறாய்
அன்பைத்தேடி
என்ற தலைப்பு
அது
ஆன்மாக்களை
கவரும் சிறப்பு
பதிமூன்று
கதை கருக்கள்
அதில்
பதிந்துநிற்கும் உம்
முத்திரைகள்
அன்பைத்தேடி
படிப்பவர்களுக்கு
அகம் மகிழ்வைத் தரும்
இச்சிறுகதைகள்
சின்னஞ் சிறிய
சிறுகதைகள்
அதில்
சிந்தனைகள் பல
வகைகள்
புரிந்துகொள்ளும்
பலருக்கிது
அழகிய
படிப்பினைகள்
பல
சிறப்புக்குரியவர்களின்
பாராட்டுகள்
இப்புத்தகத்தின்
இன்றியமையா
பெரும்
பாக்கியங்கள்
கதைக் களத்தின்
கற்பனைகள்
கதாசிரியனே
உனக்கு என்
கைத்தட்டல்கள்!
இன்னும் இன்னும்
இலக்கியத்தில்
சிகரத்தின் எல்லை தொடு
சிறந்த படைப்பாளனாய்
வெற்றிமேல் வெற்றி பெறு
இவ்வுலகத்திலும்
சிறப்பு பெற்று
ஈருகலத்திலும்
வெற்றி பெற
இருகரம்யேந்தி
இறைவனிடம்
வேண்டுபவள்
என்றென்றும்
உம்
சகோதரியானவள்...
இதுபோன்ற நிகழ்ச்சிகளால் மனம்நிறைவடைகிறது ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதால் மனிதயினம் மகத்துவம் பெரும். நாமும் நம்மாளான உதவிகளை செய்து ஈருலகத்திகற்கும் நன்மைகளைதேடிக் குவிப்போமாக!!
அன்புடன் மலிக்கா