நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மனம் மணக்கும் திருமறை மனனம்.

கிளிக்
இறைவனின் சாந்தியும் அருளும் அனைவர்மீதும் அளவில்லாமல் பொழியட்டும்.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்...

எல்லாம் வல்ல இறைவன் இந்த உலகைப் படைத்து  அதில் எல்லாவித ஜீவராசிகளையும் படைத்து.   நீர் நிலம். நெருப்பு. காற்று. ஆகாயம் என அதில் சகல வசதிகளையும் அமைத்து.  அனைத்திலும் சிறப்பாக மனிதர்களையும் படைத்து அந்த மனிதர்களுக்கு தேவையாக தான் படைத்தவைகளை உருவாக்கிய இறைவன். மனிதன் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். இவ்வுலகில் எப்படி வாழவேண்டும். எப்படிஉண்ண வேண்டும் எப்படி உடுக்க வேண்டும். என்பது தொடங்கி, மனிதனின் சிறு சிறு அசைவுகளும் எப்படி இருக்கவேண்டும் எனவும். இவ்வுலகில் வாழும் வாழ்க்கை முறையை அழகுற மிக நேர்த்தியாக வாழ வகைப்படுத்தியும்.
மனிதன் எதை செய்தால் நன்மைகள். எதைச்செய்தால் தீமைகள். என பட்டியலிட்டும்.

மனிதர்களோ! ஜின்களோ! மகான்களோ! தீர்க்கதரசிகளோ! யாருமே வகுத்திடாத! இனியும் வகுத்திட முடியாத. வானம்முதல் பூமிவரை அதில் அசையும் அசையாத. உயிருள்ள உயிரற்ற. உணர்வுள்ள உணர்வற்ற. அத்தனைக்கும்.மனிதர்கள் முதல் ஜீவராசிகள்வரை. ஜனனம் தொடங்கி மரணம்வரை.வாழ்க்கைதொடங்கி வயோதிகம்வரை. வாணிபம்முதல் வரவுசெலவுவரை.உலகில் படைக்கப்பட்ட அனைத்திற்க்கும்
  ஒரே வழிகாட்டியான அருள்மறையாம்.  இறைவனின் இறைத்தூதர், இவ்வுலகின் இறுதித்தூதர், கண்மணியாம் நபிகள் நாயத்தின் மூலம் இவ்வுலக்கு புனித மாதமான ரமளான் மாதத்தில் அருளப்பட்ட இறைவேதம்தான் அகிலத்திற்க்கும். அதில்வாழும் அனைத்திற்க்கும் நேர்வழி காட்டக்கூடிய திருமறை குர்ஆன்.
அதனை தினமும் பொருளறிந்து ஓதிவருவது இவ்வுலக வாழ்க்கையும். மறுவுலக வாழ்க்கைக்கும். மிகவும் பயன்தரக்கூடியது. அதனை மனனம் செய்வதென்பது மிகவும் பாக்கியமானது. முறைப்படி மனனம் செய்வதோடு அதன்படி செயலாற்றுவது அதனினும் சிறப்பு. அப்படியான ஒரு அரிய செயலை செய்துகொண்டிருக்கும்   ஹாபீழ்களை தேர்வுசெய்து அவர்களை கண்ணியப்படுத்த முடிவுசெய்து. போட்டி ஒன்று ஏற்பாடு செய்து. அதன் இறுதிபோட்டியை இன்ஷா அல்லாஹ் வரும் வியாழக்கிழமை நடத்தவிருக்கிறார்கள்.
இதோ அதன் விபரம்..

கண்ணாடி வாப்பா ஹமீதிய்யா அரபுபிக் கல்லூரி,
அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் 
ஆகியோர்
 வழங்கும்
 மூன் டி.வி.யின்

ஆற்றல்மிகு ஹாபிழ் யார்?
மறைக் குர்ஆன் மனன இறுதிப்போட்டி
இன்ஷா அல்லாஹ் வருகிற 29.12.2011 வியாழக்கிழமை காலை 9:00 மணியளவில்
கீழக்கரை கண்ணாடி வாப்பா அரங்கத்தில் [திருமண மஹாலில்] நடைபெற உள்ளது.   
ஷாஹூல் ஹமீது ஆலிம் ஜமாலி
மற்றும்
Dr.சுஐபு ஆலிம் 
ஆகியோரின் முன்னிலையில் மிக பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ளது. ஆகவே தாங்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்து தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இஞ்ஞணம்
 சுலைமான் மஹ்ளரி
மூன் தொலைக்காட்சி தலைமை நிகழ்ச்சி ஆலோசகர்
சென்னை.
இன்ஷாஅல்லாஹ் இப்படியொரு அரிய நிகழ்ச்சியை நேரில்காண அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன். இறைவன் நாடினால் நாம் அனைவரும் கீழக்கரையில் சந்திப்போம்..
இதுபோன்று நமது குழந்தைகளுக்கும் வல்லரஹ்மான் தவ்ஃபீக் செய்வானாக! ஆமீன் என்று பிராத்தித்தவளாக
உங்களை அனைவரையும் ஆவலோடு எதிர்பார்க்கும் என்றும் உங்கள்

அன்புடன் மலிக்கா

இதைபற்றி கருத்துக்களோ வாழ்த்துகளோ தெரிவிக்க விருப்புவோர்கள்
மெளலவி ஆலீம் சுலைமான் மஹ்ளரி
மூன் தொலைக்காட்சி தலைமை நிகழ்ச்சி ஆலோசகர் அவர்களின்
அழைபேசியில் தொடர்புகொள்ளவும்..

                                                 அழைபேசி
எண்:8754502557

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது