நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எல்லாம் நன்மைக்கே


என்னை தினம்தினம்
உருமாற்றி படைக்கிறார்கள்
வண்ண வர்ண கலர் கொடுக்கிறார்கள்
என் வனப்பின் அழகில் மயங்கிய வானம்
நான் அழிந்துவிடுவது தெரியாமல்
சிலநேரம்
வான்மழையை பொழிந்துவிடுகிறது,

வருகிறவர்களை
வரவேற்க வாசலில்
விதவிதமாய் நிற்கிறேன்
வருகிறவர்களில் பலர்
என்னை மதிக்கிறார்கள்
அதில் சிலர்
என்னை மிதிக்கிறார்கள்



மிதிபடுப்போதெல்லாம்
மண் என்னை
அமைதிபடுத்தி ஆறுதல்சொல்லும்
இப்போது
மிதிப்பவர்கலெல்லாம்
ஒருநாள் உன்னை
மதித்து நிற்கும் நாள்வரும்

அந்த மனித வாழ்க்கை
ஒருமுறை பிறப்பதும்
ஒருமுறை இறப்பதும்தான்

ஆனால்

நீ,,,,,, இறந்து இறந்து பலமுறை
பலபலவிதங்களில் பிறக்கிறாய்
அதற்காக ஆனந்தப்படு
வாழ்க்கை என்பது
வேதனைகளும்
சோதனைகளும் நிறைந்தவையே

அதை ஏற்றுக்கொண்டு
நீனும் ஆனந்தம் அடைந்து
மற்றவர்களையும்
ஆனந்தப்படுத்துவதுதான்
நிறைவான வாழ்க்கையை தருமென்று.......



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது