நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எனக்குப்பிடித்த பத்து பெண்கள் [தொடரோ தொடர்]


என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த தேனக்காவிற்கு நன்றிகள் பல.

நமக்கு உலக அறிவு பத்தாதுங்க அதை வளர்த்துக்கொண்டு இருக்கிறேன்
[ஹூம் இன்னமும் வளர்ந்தபாடில்லை]
நிபந்தனைகளை நான் சற்று தளர்த்திக்கொள்கிறேன் அடிக்க வர்ரவங்க ஆட்டோவில் வந்தாலும் சரி ரயிலில் வந்தாலும் சரி.இல்லன்னா ஏரோபிளேனுல் வந்தாலும் சரி. ஹா ஹா [அடிவாங்கப்போறது நானில்லையே]

நிபந்தனைகள் :-

1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...


பாத்திமாபீவி.[முன்னாள் தமிழக கவர்னர்]
இவர்  முதல் பெண் நீதிபதியாக சுப்ரின்கோர்ட்டில்
பணிபுரிந்தவர்.
கவர்னராகவும். மனிதஉரிமை கமிஷனில் உறுப்பினராக இருந்தவர்


அன்னை தெரெஸா..[அவர்கள்]
அனைத்து குழைந்தைகளுக்கும் அன்னையாக ஒருதாயால் முடியாது. ஏதோ ஒருவிதத்தில் முகம் சுளிக்கநேரிடும். ஆனால் அனைவருக்கும் அன்னையாக வாழமுடியும் என வாழந்துக்காடிய அன்னை.இவங்களைப்போல் நற்குணத்தை நாமளும் உண்டாக்கிக்கொள்ளனும்..

பாத்திமா [ரலியல்லாஹ்] அவர்கள்
இவர்கள் நபிகள் நாயகத்தின் திருமகளார். ஒருபெண்மணி எப்படி வாழவேண்டும் என்ற பாதையை வழி வகுத்துத்தந்தவர்கள்.
தாய் தந்தை அவர்களுக்கு சிறந்த மகளாக. கணவர் [அலி ரலியல்லாஹ்] அவர்களுக்கு நல்லதொரு சிறந்த மனைவியாக. மகன்கள் ஹசன். ஹுசைனாருக்கு சிறந்த தாயாக விளங்கியவர்கள். மரணிக்கும்போதும் கணவரின் மார்பில் உயிர்நீத்தவர்கள்.
ஒரு நல்லவரை நேரில்பார்த்து அவர்களைபோல் வாழ்வதைபோல். அவர்கள் இப்படி நல்லவர்களாக தூயவர்களாக வாழ்ந்தார்கள் அதுபோல் வாழவேண்டும் என சொல்லக்கேட்டு வாழ்வதிலும் மிக சிறப்பு உள்ளது. இவர்களை மிகவும் பிடிக்கும்..

கவிஞர்.கனிமொழி.[அவர்கள்]எழுத்தாளர். கவிஞர். இந்திய பாராளுமன்ற இரு அவைகளில் ஒன்றான "மாநிலங்களவை உறுப்பினர்" (Member of Parliament (Rajya Sabha). எம்.பி. இவரின் நடை. உடை பாவனை. எளிமை. பேச்சு. அத்தனையும் பிடிக்கும் [இங்கு துபை வந்திருந்தபோது எவ்வளவு எளிமை நேரில் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன்] இவரின் கவிகளும் மிகப்பிடிக்கும்.



வி சாந்தா. [அவர்கள்]
அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் சேர் ஃபர்சன்.
இவர் 50 வருடமாக கேன்சர் நோயாளிகளுக்காவே தன்னை
அர்ப்பணம் செய்தவர் padmashree மற்றும் பலவிருதுகள் பெற்றவர்.

அருணாராய்.[அவர்கள்]
இவர் ஒரு சமூகசேவகி.இந்தியன் அட்மினிஷேசனில் சிவில் சர்வன்டாக பணிபுரிந்தவர். ஏழைகளுக்காக குரல்கொடுத்தவர்.

சி என் ஜானகி..[அவர்கள்]
இவர். இருகால்களையும் போலியோவினால் இழந்தும். நீச்சல் துறையில் சாதனைப்படைத்தவர்

லத்திக்கா சரன்.[அவர்கள்]
சென்னை மாநகர காவல்துறை முதல் பெண் ஆணையர்

அதோடு தற்போது, தமிழ்நாடு காவல்துறை முதல் பெண் இயக்குனர் (D.G.P)

வனிதா [ஜெனட்] [அவர்கள்]
இவர் பெங்களூரைச்சேர்ந்தவர். துபை வந்துதான் இவரைத்தெரியும். [தமிழ் படிக்கத்தெரியாட்டியும் பேசத்தெரியும்] அன்புத்தங்கையாகவே ஆனவர். பாசத்தையும் அன்பையும் இவரிடம் நிறைய கடன்வாங்கனும். இவரைப்போலவே இவர்கணவரும்.. [துபையில் இன்னும் நிறைய இருக்கு ஆனா ரூல்ஸ மீறக்கூடாதுன்னு விட்டுட்டேன் ஓகே]

பத்தாவதாக நான். [அன்புடன் மலிக்கா]

என்னது முறைக்கிறீங்க. [சொந்தங்களையும் உறவுகளையும் சொல்லகூடாதுன்னுதான் கண்டிஷன். நான் என் மச்சானுக்குதான் சொந்தம் உறவெல்லாம் சரியா] அதனால என்னை எனக்கு ரொம்பப்பிடிக்கும். என்னை எனக்கு பிடித்ததாலதான் மற்றவங்க எல்லாரையும் எனக்கு ரொம்பப்பிடிக்கிறது. குழப்புறேனா அதானே வேணும் ஹா ஹ ஹா


பெண்களில் வெரும் பத்துபேரைமட்டும்தானா????????? இன்னும் நிறையச்சொல்லலாம் ஆனா அல்லாரும் அவங்களுக்கு பிடிச்சவங்களை சொல்லி பத்துக்கு பத்து பத்துலச்சத்துக்குமேலன்னு ஆகிட்டதால இதுபோதும்..[இதில் பிழைகளிருந்தாலும் தவறுகளிருந்தாலும்  பொருந்திக்கொள்ளவும்]

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தேனக்கா ரொம்ப தேங்ஸ் என்ன இப்படி பொழம்பவிட்டதுக்கு.


நான் பொழம்பினமாதரி பொழம்பாம தெளிவா எழுதுற ஒரு நாளுபேரயாவது கூப்பிடுவோமா!


வாங்கங்கையா,, வாங்கம்மா...

ஜலீலாக்கா

நிலாமதியின் பக்கங்கள்

பித்தனின் வாக்கு

ஜெய்லானி

அப்பாடா நம்ம வேலை முடிஞ்சிரிச்சி..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது