நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மனம் திறக்கும் மடல்


அன்பான காதலனே
ஆருயிர் மன்னவனே!

பரிமாறிக்கொண்ட
பார்வைகளின் ஸ்பரிசங்கள்
பேசாமல் பேசிய
வார்த்தைகளின் கோர்வைகள்

நொடிக்கொருமுறை
நினைவுகளோடு உரசல்கள்-என
நெஞ்சம் முழுவதும்
நிரம்பி வழிகிறாய்

விழிகளில் வினவினாய்
இதயத்தை தழுவினாய்
விழிமூடும் போதெல்லாம்
உயிருக்குள் உலவினாய்

உயிரின் வேர்களை
உலுக்கி -அதிலுதிர்ந்த
உணர்வுகளை
உதிராமல் கோத்தாய்!

கோத்த நினைவுகளை
பொக்கிஷமாக்கி-அதை
தொலைந்துவிடாதவாறு
மனதிற்குள் புதைத்தாய்!

மூங்கிலின் காற்றுக்குள்
மூச்சுமுட்ட செய்தாய்
மூழ்காமல் கடலுக்குள்
முத்தெடுக்க வைத்தாய்!

எனக்குள் உன்னைத் தந்து
மனச்சிறகையும் நெய்து தந்து
மனவானில் பறக்கும்போது
சிறகுகளை ஏன் கேட்கிறாய்!

முயன்றுதான் பார்க்கிறேன்
முடியாமல் தோற்கிறேன்
மறக்கமுடியா நினைவுகளை
பூவெழுத்துக்களால் வார்கிறேன்

கடிதம் கண்டு
கனவுக்குள்ளேனும் வா காதலனே!
என்றுமே நீதான்
என் கணவனே!
 =====================================

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மன[ண]முடைதல் [அவளுக்காக நான்]



எனக்கான எல்லாத் தருணத்திலும்
உனக்கான இருப்புகள் காத்திருந்தன
ஆனால்
உனக்கான சமய தருணங்களில்கூட
எனக்கான இருக்கைகளே இல்லை!

ஓ,, நீயும் நானும்
ஓடுடைந்த முட்டைகள்
நீ என்னிடத்தில்
நீயோ அவளிடத்தில்

சோரம் ஆதாரமாக
தாரம் சேதாரமாக
மணக்கோலம்
அலங்கோலமாய்,,..
==================


அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வலைதளங்கள் இயங்குகிறதா?





 மீண்டும் இணைந்திடுவோம் மீளா அன்புடன்

நீண்ட இடைவெளிகள் வலைதள உள்ளங்களுக்குள் ஏற்பட்டதுபோன்ற ஓர் உணர்வு, முகநூல் மற்றும் டிவிட்டரின் ஆளுமையினாலும் அதனுள் நாமும் அடைமையாகிவிட்டதினாலும்,தனிப்பட்ட நமது வலைதளங்களில் சற்றே அல்ல கொஞ்சம் கூடுதலாகவே இடைவெளிகள் வந்துவிட்டது, நம்மில்பலர் நம்மையே மறந்துவிட்ட நிலைபோல், அதனில் சற்று நின்றுகொண்டும் நம்முடையவைகளையும் நிலைப்படுத்திக்கொண்டும், மீண்டும் நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் அன்பையும், நட்பினையும்  நமது எண்ணங்களையும் கருத்துகளாக பகிர்ந்துகொள்ளவேண்டுமென்பதே ஆவல், என்ன முயற்சிப்போமா?
 ================================================

                         அன்பு


அண்டப் பெருவெளியில்
ஆளற்று நிற்க்கும்போதும்
இறையால் விதைக்கப்பட்ட
இயற்கை விதைகள்
அன்புகொண்டு ஆரத்தழுவும்
ஆனந்தக் காற்றாய்!

ஆயுதமேந்திய ஆபத்துகள்
ஆட்கொல்லி விசமாய்
ஆங்காங்கே பரவியபோதும்
அடிமனக் கருணைகள்
அன்புகொண்டு தேம்பியழுகும்
அந்நியோன்னியமாய்!

மனக் குமுரல்கள்
மண்டிக்கொண்டு
மனிதரையே நிலைகுலைக்கும்போது
மெதுவாய் தலைகோதும் விரல்கள்
மென்மைகொண்ட ஆத்மார்த்தமாய்!

அவ[ன்]ள் போனலென்ன
நானிருக்கிறேன்
என்னுமிடத்தில்
நங்கூரமிட்டிருக்கும்
அன்பாயுதம் ஆணித்தரமாய்!

பாகுபாடின் பேதமற்ற
பச்சோந்திகளின் தோற்றமற்ற
நிறயின பாகுபாடற்ற
நோக்கியதிசையில் தீர்க்கமுற்ற!

வாஞ்சையாய், வசீகரமாய்,,
அரவணைப்பாய், அதட்டுதலாய்,,
தன்மையாய், தாயுள்ளமாய்,,
தோழமையாய், தன்னம்பிக்கையாய்,,

கருணையாய், கனிவாய்,,
அரணாய், ஆதரவாய்,,
இரக்கமாய், ஈகையாய்,,
இளம் புன்னகையாய்,,

வார்தைகளால்
வர்ணிக்க இயலாத
சொற்களால் வாழாமல்
செயல்களில் வாழுகின்ற
சொர்க்கத்தின் திறவுகோல்!

நம்பிக்கை துரோகத்தையும்
நெடுங்கால விரோதத்தையும்
கொடூர உள்ளத்தையும்
நலங்கெட்ட எண்ணத்தையும்
சீர்திருத்தும் நெம்புகோல்!

அன்பென்ற ஒன்றே
இப்புவியை புண்ணியமாக்கி
இயக்கும் பூகோலம்
அன்பென்ற காற்றில்லையெனில்
சுவாசங்களில் கலக்குமே விசவாய்வுகள்!

பலவீனதின் பலமும்,
பலத்தின் பலவீனமும் அன்பே!
அன்பென்ற அணுகுமுறை
அகிலத்தில் இல்லையெனில்
படைப்பினங்கள் மொத்தமும்
பயனற்றவையே!

அன்பின் பரிமாற்றங்கள்
அகம் புறங்கள்
அலவாவிக்கொள்ளும்வரை
ஆன்மாக்களும்
ஆத்மார்த்தங்களும் நிறைவுபெற்றவையே..






அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது