நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முதிர்ந்துதிரும் இளமைகள்.



வானவில்லின்
வருகைக்காக காத்திருக்கும்
வானம்போல்,,
வாழ்க்கையின்
வசந்தத்திற்காக காத்திருக்கும்
வாலிபம்!

வரன்கள்
வந்துகொண்டுதான் இருக்கிறது
வந்த இடத்தில்
வயிற்றை நிரப்பிக்கொண்டு
வயது போய்கொண்டுதான் இருக்கிறது
வரதட்சணை கொடுக்க
வழியில்லையே என்று!

உடல் உருப்படியான
ஆண்மகன்களுக்கு
உள்ளம் ஊனமானதோ?
பழமுதிர் சோலையாகவேண்டிய
கன்னியற்களுக்கெல்லாம் அதனால்
பாலைவன வாழ்க்கையாகுதோ?

இந்த முதிர்-கன்னிகளின்
தேடலுக்கு முடிவென்ன?
முதுகெலும்பில்லாதவர்களின்
தேவைகளுக்கு தீர்வுதானென்ன?
முன்பக்கம் வேண்டாமென
பின்பக்கம் பல்லிழிப்பதை
தவிர்ப்பதெப்போ?

முதிரவைக்கும்
வரதட்சணையை
எதிர்த்து நில்லுங்கள்
கன்னியர்க்கு வாழ்வுதந்து
கணவர் எனும் உறவுக்கு
கெளரவம் சேர்க்க
முன்வாருங்கள்..

அன்புடன் மலிக்கா இறைவனை
நேசி இன்பம் பெறுவாய்.

மானங்கெட்ட காதல்





உலகம் எந்தளவுக்கு போய்கொண்டிருக்கு, பெண்மைக்கும் மதிப்பில்லை, பெற்றோருக்கும் மதிப்பில்லை எல்லாம் காதலென்றபோர்வையில் காமம் கொடுக்கும் தொல்லை.
பலயிடங்களில் இரக்கமெல்லாம் அரக்கத்தனமாகிவிட்டது. இந்நிகழ்ச்சி இப்படி செய்யும் அனைத்துபெண்களுக்கும் ஒரு பாடம், ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் பெருகிக்கொண்டேதானிருப்பார்கள்.

காதலென்ற போர்வையில்
காமங்கள் அரங்கேறியதால்
ஏழுவருட  இன்றியமையாக் காதல்
இன்று  எழவெடுக்க காத்திருக்கு
இவனைப்போன்ற
பச்சை  துரோகிகளுக்கு
இலவசமாய் பெண்கள்
ப[மு]ந்திபோடவும்  தவமிருக்கு !

காதலை காமத்தோடு
கைக் குலுக்க வைத்தவனே
காதலனாக வேசமிட்டு
கன்னிதிரை விளக்கியவனே
கன்னியின் கண்ணீர்  கண்டும்
கல்நெஞ்சமாகி கிடக்கிறாயே
கா[ம]தல்மோகம் தீர்ந்ததாலே
காத[லை]லியை
காலில்போட்டு மிதிக்கிறாயோ!

உன்னை காதலித்த பாவத்துக்கு
உன் உடல்பசிக்கு இறையாகி
உன்வாரிசை  சுமந்தபடி
ஊர் வசைக்கும் ஆளாகி
உன்முன் கெஞ்சிக்
கண்ணீர் வடிப்பவளை
உதறி உதறி  தள்ளுகிறாயே
உண்மையிலே 
உனக்கு  உள்ளமென்று ஒன்றிருக்கா?

அப்”பாவி”யே
பேதை பெண்ணல்லடி  - நீ
போதைப்பெண்
காதல்போதை
உன்கண்ணை மறைத்ததாலே
கண்விழிக்கா கருக்குஞ்சை
கருப்பையில் சிறையிவைத்து
சித்திரவைதை செய்யும் நீ
சீர்கெட்ட சிறுக்கியடி

உண்மைக்காதல் இல்லையடி
இது உண்மைக்காதல் இல்லையடி
இருமனம் இணைந்தாலும்
திருமணம் நடக்கும் முன்பே
இரு உடல்கள் இணைத்துக்கொண்டு
உடல் சுகத்தை தேடிக்கொண்ட
இந்த காதலெல்லெல்லாம்
 உண்மைக்காதல் இல்லையடி

அடி வெக்கங்கெட்டவளே
உன் முகம் பார்த்து
பேசுவதற்கே மறுப்பவனிடம்
உன்னை வேண்டாமென 
உதறி விடுபவனிடம்
நீதான்
வேண்டுமென வாதாடி நிற்கிறாயே
நீ இல்லையெனறால்
செத்துவிடுவேன் என்கிறாயே
சோற்றைத்தானே உண்ணுகிறாய்
சொரணையேதுமில்லையாடி

கொஞ்சிக் கொஞ்சி மிஞ்சியவன்
குற்றமெல்லாவற்றையும்
உன்மேல் சுமத்தியும்
கெஞ்சுகிறாய் கதறுகிறாய்
கொஞ்சமும்  இரங்கவில்லை
உன்மேல்  ஒருதுளியும் காதலில்லா
கொடுமனங் கொண்டவனென்றுகூடவா
உனக்குப் புரியவில்லை!

உம்போன்ற பெண்களாலே
பெற்றோருக்கும் ஈனமடி
உன்னை பெற்ற பாவத்துக்கு
பெற்றோருக்கும் கிடைக்குதே 
தண்டனையடி!
உறுதியற்ற காதலெல்லாம்
உடல் கேட்டு அலையுமடி
உடல்தேவை தீர்ந்த பின்னே
உதறிவிட்டு நகருமடி

இறையச்சம்  களைந்துவிட்டு
இச்சைகளின்பின்னே நடந்து செல்லும்
உன்னைப்போன்ற பெண்களுக்கு
இதுவெல்லாம்
உலகில் கிடைக்கும் பாடமடி!

இன்னும்
என்னவெல்லாம் நடக்கப்போகுதோடி!
எத்தனை கேவலங்கள்  
கண்முன் நடந்தாலும்
கேடுகெட்டு போவதற்கு
உன்னைபோல்
இன்னும் எத்தனையோ
இளம் ஜோடிகள் தயாரடி..


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

முத்தங்களின் மொழிபெயர்ப்பு.


சத்தமில்லா முத்தங்களை
சத்தத்தோடு முத்தமிட்டு
சப்த நாடியிலும்
சப்த ஸ்வரங்கள் எழுப்பும்
எழுத்து முத்தம்!

முத்தமிடும்போது
சத்தமிட்டுக்கொண்டே
சப்தநாடியையும்
சப்தமில்லாமல் அடக்கும்
இதழ் முத்தம்!

நாசியின் வழியே
சுவாசித்து இழுக்கும்போது
ரத்த நாளங்களுக்குள்ளும்
ரம்யம் ஏற்படுத்தும்
நுகரும் முத்தம்!

உயிரெழுத்தும்
மெய்யெழுத்தும்
உயிர்மெய்யெழுத்தாய் இணைந்து
ஒருவாக்கியம் உருவாவதுபோல்,

எம்முத்தம் என்றபோதும்
அம்முத்தம் அமுதமாகி
அடிநெஞ்சினுள் ஆளப்பதிந்து
அன்புதன்னை அதிகமாக்கும்!

குழந்தைதொட்டு குமரிவரை
கனிவுதொட்டு முடிவுவரை
முத்தங்களுக்கு
முதுமையேயில்லை!

முத்தங்களில்லா வாழ்க்கை
முழுமையடைவதில்லை
மனிதவாழ்வில் மரணம் வரும்வரை
முத்தங்களுக்கு என்றுமே
முற்றுப்புள்ளியில்லை..

டிஸ்கி// இக்கவிதை இலண்டன் வானொலிக்காக எழுதியது..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எப்பொழுதெனில்!


மெய்மறப்பது 
எப்பொழுதெனில்?
மெய்யுருகி மனமினைகையில்!

தன்னிலை மறப்பது 
எப்பொழுதெனில்?
தன்னிணையுடன் தஞ்சம் புகுகையில்!

நெஞ்சங்கள் சிலிர்ப்பது 
எப்பொழுதெனில்?
நினைவுகளிலும் சங்கமிக்கையில்!

இரத்த நாளங்கள் குளிர்வது  
எப்பொழுதெனில்?
இணைகள் ஒருவருக்கொருவர் 
ஆறுதலலிக்கையில்!

முழுமனமுடல் மூச்சில் கலப்பது 
எப்பொழுதெனில்?
முதுமையிலும் ஈருடல் 
ஓருயிராய் உருகுகையில்!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தலையணையென்பது!



பஞ்சுமெத்தைக் குழந்தை! 
பதைபதைக்கும் மனதிற்க்கு
பக்கத்துணை!

கரையும் கண்ணீருக்கு
ஒத்தட ஆறுதல்!

மனக் குமுறலுக்கு
மறைமுக தேறுதல்!

தனிமையை போக்கும் தோழமை
தவிப்புகளை உள்ளடக்கும் ஆளுமை

இருதலை நான்கு கண்களை
ஒன்றிணைக்கும் சங்கமம்!

இணையில்லா நேரத்தில்
இன்னல்களையும் ஏற்கும் இலவம்!

தலையணை மந்திரம் திடமானால் 
துணைகள் இன்பத்தோனியில்!

தலையணையில் வேறுதலை மாறினால்
துணைகள் துன்பக்கேணியில்...



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

யாருமறியா ரகசியத்தை!



இருண்ட இரவுகளை
அலங்கரிக்கும் நட்சதிரமும்!

இரவல் ஒளிவாங்கி
இருளகற்றும் பால்நிலவும்!

மெல்லிய ஒளியில்
மிளிரும் இருளிரவும்!

இன்னல்களை சுமந்தும்
இன்பமுற்றதாய் நடிக்கும்,

வஞ்சணைகள் நிறைந்தும்
வாஞ்சைகளாய் உரசும்,

உள்ளமழுதும்
உதடுகள் சிரித்தும்

ஊரறியா! வேறு மனமறியா!
ஊளையிடும் இருதய மெளனங்களின்

இரகசியங்கள் அறிகின்றன
”இங்கிதம் பேணியபடி”



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

கொடூரத்தின் விளிம்பில்!



மனதிருந்தும் பல மனிதர்கள்
மலந்தின்னியாய் இருப்பதால்!

தன்பின்னாலிருக்கும்
பிணந்தின்னி கழுக்கைகண்டு

பிஞ்சுள்ளம் அஞ்சவில்லை
தன்னை 

பிச்சித் தின்றுகொண்டிருக்கும்
பசிக்கு முன்னால்!

அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பாடம்சொல்லும் புகைப்படங்கள்!

புகைப்படங்களின்மேல் கிளிக்கவும்.


எழுதத் தூண்டிய  முகநூல் சகோ றாபி அவர்களுக்கு நன்றி!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

சேமிப்பு!





சேர்த்துகொள் சேர்த்துக்கொள்
சம்பாரிப்பதில் சேர்த்துக்கொள்
சேர்க்கத் தவறி விடும்போது
சோர்வு தனதாகிவிடும்!

சேர்த்துகொள் சேர்த்துக்கொள்
சிலவு செய்வதிலும் சேர்த்துகொள்
சேர்க்கத் தவறி விடும்போது
சிக்கல் உனதாகிவிடும்!

கடுங்சிக்கனம் கஞ்சத்தனம்
கடைந்தெடுத்த கருமித்தனம்
கடுகளவேனும் இருந்தாலும்கூட
கடுகும் கொடுக்கவிடாத மனமாகிவிடும்!

கண்டபடி சிலவு செய்தால் -பின்பு
கஷ்டம் இல்லத்தில் புகுந்துகொள்ளும்
கவலை மனதில் குடியேறி
கண்ணீர்விட்டு அழ வேண்டிவரும்!

நல்ல உடம்பின் நலமும் கெடும்போது
கட்டு கட்டாய் பணமும் வேண்டும்
நாலு காசு கையில் இல்லையெனில்
காலம் போகப்போக தலைக்கிறுக்கு அதிகரிக்கும்!

சேமிப்பு கொஞ்சம் இல்லையென்றால்
உடலிருந்தும் உயிரற்ற நடைபிணமாயக்கூடும்
முதுமை சிறந்து பலனுமடைய
சேமிப்பின் பலத்தைக் சற்று கூட்டவேண்டும்!

சேமிப்பு இல்லா இடங்களிலே
சோதனைகள் சூழ வாய்ப்பிருக்கும்
நிகழ்கால உழைப்பினிலே
எதிர்கால சேமிப்பின் நன்மையிருக்கும்!

பணம் சேர்க்கும் போதினிலே-நல்ல
குணமும் சேர்த்[ந்]து சேர்க்கவேண்டும்
இரண்டும் சேர்ந்துயிருந்தால்தான்
இல்லம் இதயம் இரண்டின் சுகமும் தொடரும்..

-----------------------------------------------------
டிஸ்கி// அதுக்காக, கண்டதிலும் நின்னடதிலும் போய் பணத்தை சேர்த்துவைக்கிறேனும், வட்டி வானுயரதரோமுன்னு சொல்வதை நம்பியும் உள்ளதையெல்லாம் மொத்தமா கொடுத்துவிட்டு அம்போன்னு நின்னுடாதீங்க. எத்தனையோ நல் வழிகளிருக்கு அதனை பயன்படுத்தி சேர்த்துவைங்க,சிரமப்படுவோருக்கு வட்டியில்லாமல்  கொடுத்துதவியும் சேர்த்துவைக்கலாம், இரட்டி நன்மையும் உண்டாகும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது