நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உருகும் மெழுகு. [தந்தையர்தின வாழ்த்துகள்]

உலகிலுள்ள அனைத்து தந்தைமார்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

ஒருநாள்போதுமா? இன்றொருநாள்போதுமா? உங்களையெல்லாம் நினைக்க இன்றொருநாள் போதுமா? இருந்தாலும். எல்லாமே பெண்களுக்குத்தான் இருக்கு எங்களுக்கு ஒன்றுமில்லையா? என அன்னையர் தினத்தன்று கேள்விகள் கேட்டார்கள் சிங்கங்கள்.

அது யாருக்கோ காதில்விழுந்து இன்றைய தினத்தை தந்தையர் தினமாக்கிவிட்டார்களாம் இப்ப சந்தோஷம்தானே
திருப்திதானே! இதைதானே எதிர்பார்த்தீர்கள்.அப்பாடா எல்லாரும் ஜோரா ஒருமுறை கைதட்டுங்கள்.தந்தையாகபோகிறவர்களும் சேர்ந்துக்கொள்ளலாம்..[சும்மா சும்மா] தந்தையென்ற தாரக மந்திரம் எந்நாளும் பிள்ளைகள் காதில் ஒலிக்கட்டும்..
.

இது என்றோ எழுதிய கவிதை மீண்டும் தந்தைகளின் சார்பில் பிள்ளைகளுக்கு..
இது எல்லாதந்தைக்கும் பொருந்தும் சில விதிவிலக்கானவர்களைதவிர. அதாவது இ ம வாக இருப்போருகல்ல..



எனது அன்பு மகனே!
அன்னையை மட்டும்
அணைத்து கொள்கிறாய்-இந்த
தந்தையை ஏன்
தள்ளிவைத்தே பார்க்கிறாய்.

ஈன்றெடுத்தவள்
அன்னையென்றாலும்
அதில் இந்தத்
தந்தைக்கும் பங்குண்டல்லவா!

சிலயிடங்களிலும் சினிமாக்களிலும்
தந்தைகளை தரக்குறைவாகவே
சித்தரிப்பதால் உன் சிந்தையிலும்
தவறாகவே சித்தரிக்கபடுகிறது!

சில சமயங்களில்
என் பாசத்தை உன்மீது
வெளிப்படுத்த தவறிவிடுவதால்
உன்மீது எனக்கு
பாசமில்லை என்றாகுமா!

அன்னையும் தந்தையும் காட்டும்
அளவுக்கு மீறிய பாசத்தால்
குழந்தை
அல்லல்படக்கூடாதே என
என்பாசத்தை பூட்டியே வைத்துள்ளேன்!

அதை புரியாத நீ
என்னை ஒரு
பூச்சாண்டியைப் போலவே
பார்ப்பதைதான்
என்னால் பொறுக்கமுடிவதில்லை

விரோதியல்லடா உன் தந்தை
உன்னை இவ்வுலகத்திற்கு
வெளிச்சமாய் காட்ட
என்னை நான் மெழுகாக்கிக்கொண்டேன்
உருகுவதற்காக வருந்தாது மெழுகு
தன் உயிரை உருக்கி
ஒளியை மிளிரவைக்கும்
அதுபோல்தான் நானும்

மகனே நீ உயிர்வாழ
உன் அன்னை தன் உதிரத்தைப்
பாலாக்கித் தந்தாள்

நான் உனக்காக என் உயிரையே
உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா?
என் உணர்வுகளைப் புரிவாயா-இந்த
தந்தையின் தவிப்பை
தவப்புதல்வனே
நீ,,,,அறிவாயா?



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது