இளைய பெண்ணின்
இமைகளை வைத்துவிட்டு
விழிகளை எடுத்துச் சென்றான்
ஈரநினைவுகளை புதைத்துவிட்டு
இதயத்தை எடுத்துச் சென்றான்
விழிவழியே தூதுவிட்டு -காதலை
விதைத்து சென்ற காதலனை
விழியம்புகொண்டு தைத்திடுங்கள்
விட்டுச்சென்ற நினைவுக்காக
பட்டுமேனி பதறாமல்
பார்வை தொட்ட ஸ்பரிசத்தால்
பாவையுள்ளம் பதறிப்போய்
பாசநோயால் வாடுகிறாள்
விழியையே வாசலாக்கி
வஞ்சியவள் பார்த்திருக்கிறாள்
காதலன் வரும்நாளை எதிர்நோக்கி
காதலோடு காத்திருக்கிறாள்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.